Skip to main content

Posts

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை
Recent posts

போதகர் கே.ஜே. ஆபிரகாம்

    போதகர் கே.ஜே. ஆபிரகாம் இரட்சிப்பின் அனுபவத்தை அடைந்திருந்த நாட்கள் அவை. எப்போதும் ஆவிக்குரியவைகளின் மேலேயே நாட்டம் கொள்ளவே மனதில் வேட்கை அதிகரித்திருந்த வேளை அது. ஆலய ஆராதனைகளில் தவறாது ஒவ்வொரு நாளும் பங்கேற்கும் பழக்கத்திற்குள் வாழ்க்கையினை அர்ப்பணித்துக்கொண்டதுடன், ஆங்காங்கே நடைபெறும் ஆவிக்குரிய கூட்டங்களிலும், முகாம்களிலும் பங்கேற்று வேளா வேளைக்கு அவர் தரும் உணவினைப் பெற்றுக்கொள்வதுடன், மேலும் வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன். தினமும் தவறாமல் தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபிப்பது, அவர் தரும் வார்த்தைகளை வேத வாசிப்பின்போது பெற்றுக்கொள்வது என என்னால் இயன்ற பெலத்தைக் கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அஸ்திபாரமிட்டுக்கொண்டிருந்தேன்; என்றாலும், யாராவது மூத்தவர்கள் சிலர் இத்தகைய ஓட்டத்தில் எனக்கு உடனிருந்து உதவினால் இன்னும் மேன்மையானவைகளைத் தெரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் பாக்கியமாயமையுமே என்ற எண்ணங்கள் அவ்வப்போது என் நினைவில் வந்து வந்து சென்றுகொண்டிருந்தன. இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன், இனி என்ன செய்யவேண்டும்? என்ற பெரியதோர் கேள்விக்கு

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

சரியாத மரம்

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 56 சரியாத மரம் .அது  ஓர்  காலை  வேளை,  9.30  மணி;  அலுவலகத்திற்குச்   செல்லும்   வழியில்    சகோதரர்    அகஸ்டின்    ஜெபக்குமார்     அவர்களைச்  சந்திக்கும்படியாக  அவரது  இல்லத்தினை  நோக்கிச்  சென்றேன்.  வீட்டின்  வெளியே  காலணிகளைக்  கழற்றிவிட்டு,  முன்  அறையினுள்  நுழைந்தேன்;  முன்  அறையின்  இருக்கைகள்  அனைத்தும்  எவரும்  இல்லாமல்  காலியாயிருந்தது; இதனைக் கண்டதும், சகோதரரின் வீட்டில் யாரும் இல்லையோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்பியது; அதனைத்  தொடர்ந்து,  அலுவலகத்திற்குச்  சென்றுவிட்டு  அப்புறம்   சகோதரரைச்   சந்தித்துக்கொள்ளலாம்   என்ற  நினைவும் எனக்குள் உருவானது.  என்றாலும்,  சகோதரரைச் சந்திக்கும் ஆர்வத்தில், அடுத்த அறையினை  நோக்கி  நகர்ந்தேன்.  அங்கோ,  சகோதரர்  அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் துணைவியார் சகோதரி ரூபலேகா  ஜெபக்குமார்  அமர்ந்திருந்தார்;  அவர்களைக்  கண்டதும்,  'அக்கா,  அண்ணன்  இருக்காங்களா?'  என்று  கேட்டேன். அந்த ரூம்ல இருக்காங்க, ஜெபம் பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு  நினைக்கிறேன

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளைவாக 'Encounter' என்ற பெயரில் இணையதளத்தில் தொடர்ச்சியா

வாக்குத்தத்தமான வாக்கு

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 54 வாக்குத்தத்தமான வாக்கு   ஒருமுறை சென்னையில் ஜெம்ஸ் மீடியா துறையின் ஆலோசனைக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஜெம்ஸ் தலைவர்கள் சிலரும், முன்னேற்றப் பணித் தலைவர்களும்; அக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்தனர். பீஹார் ஜெம்ஸ் மீடியா துறையின் சார்பாக நான் அக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்றிருந்தேன். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஜெம்ஸ் அலுவலகத்தில் ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின்போது, ஜெம்ஸ் மீடியா துறையின் பல்வேறு காரியங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பங்கேற்றவர்களின் ஆலோசனைக்கு முன் வைக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டன. பீஹார் மீடியா துறையின் அலுவலகக் காரியங்களையும், அலுவலகக் கணக்குகளையும் அப்போது நான் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆண்டில், மீடியா துறை பட்ஜெட்டினை தயாரித்து அளித்திருந்த நான், அதில் வரவேண்டிய மீதமுள்ள தொகையினை மனதில் கொண்டவாறு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பணம் விரைவில் கிடைத்துவிட்டால், குறிப்பிட்ட சில காரியங்களை விரைவில் செய்துமுடித்துவிடலாமே என்றும் எண்ணிக்

உனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்               உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 53 உனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?   2015, ஏப்ரல் 12, ஞாயிற்றுக் கிழமை, காலை ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை நடத்தும் வாய்ப்பு என்னுடையதாயிருந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு பீஹார், கைமூர் மலை மேல் உள்ள அதௌரா என்னுமிடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்படவிருந்ததை முன்னிட்டும், ஆராதனையில் பங்கேற்கும் ஊழியர்கள் அந்நிகழ்ச்சிக்குச் செல்லவிருந்ததாலும், ஆலய ஆராதனை விரைந்து முடிக்கப்பட்டது. அதௌரா பணித்தளத்திற்கு இரண்டு பேருந்துகள் புறப்பட்டபோதிலும், பேருந்தில் பயணித்து அத்தனை தூரம் என்னால் செல்ல இயலுமா? என்ற கேள்வியுடன் இருந்தேன் நான். எனது பெலவீனத்தைப் புரிந்துகொண்ட  சகோதரி ரூபலேகா ஜெபக்குமார்,  தன்னுடைய வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டார். ஆராதனை, முடிந்ததும், 10.45 மணிக்கு சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் அவர்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்; சகோதரிகள் மூவர் உடனிருந்தனர். சுமார் மூன்று மணி நேர பயணம். நீண்ட பின் இருக்கையில், நீட்டி நிமிர்ந்து பயணிக்க வசதியாக, தலைக்கு தலையணை ஒ