முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரியாத மரம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 56

சரியாத மரம்



.அது  ஓர்  காலை  வேளை,  9.30  மணி;  அலுவலகத்திற்குச்   செல்லும்   வழியில்   சகோதரர்    அகஸ்டின்    ஜெபக்குமார்    அவர்களைச்  சந்திக்கும்படியாக  அவரது  இல்லத்தினை  நோக்கிச்  சென்றேன்.  வீட்டின்  வெளியே  காலணிகளைக்  கழற்றிவிட்டு,  முன்  அறையினுள்  நுழைந்தேன்;  முன்  அறையின்  இருக்கைகள்  அனைத்தும்  எவரும்  இல்லாமல்  காலியாயிருந்தது; இதனைக் கண்டதும், சகோதரரின் வீட்டில் யாரும் இல்லையோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்பியது; அதனைத்  தொடர்ந்து,  அலுவலகத்திற்குச்  சென்றுவிட்டு  அப்புறம்   சகோதரரைச்   சந்தித்துக்கொள்ளலாம்   என்ற  நினைவும் எனக்குள் உருவானது. 

என்றாலும்,  சகோதரரைச் சந்திக்கும் ஆர்வத்தில், அடுத்த அறையினை  நோக்கி  நகர்ந்தேன்.  அங்கோ,  சகோதரர்  அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் துணைவியார் சகோதரி ரூபலேகா  ஜெபக்குமார்  அமர்ந்திருந்தார்;  அவர்களைக்  கண்டதும்,  'அக்கா,  அண்ணன்  இருக்காங்களா?'  என்று  கேட்டேன். அந்த ரூம்ல இருக்காங்க, ஜெபம் பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு  நினைக்கிறேன்'  என்றார்?  தயங்கியபடி  நின்றுகொண்டிருந்த   என்னைக்   கண்டதும்,   சகோதரர்   இருக்கும் அறையினை நோக்கி விரல் நீட்டியாவறு, அந்த அறையில்தான் அண்ணன் இருக்கிறார்கள் என்றார் சகோதரி ரூபலேகா  ஜெபக்குமார்.  அவர்கள்  காட்டிய  அறையின்  கதவினை  மெல்ல  நான்  திறந்து,  கால்கள்  வாசலுக்கு  வெளியே  நிற்க,  தலையினை  மாத்திரம்  அறையினுள்  நுழைத்தவனாகப்  பார்த்தபோது,  தரையில்  முழங்காலில்  நின்றபடி,  முழங்கையினையோ   படுக்கையின்   மீது  ஊன்றியவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், முகத்திற்கு முன்னே வேதாகமம் விரித்தாவாறு இருந்தது. 

இக்காட்சியினை  நான்  கண்டதும்,  ஜெபவேளையின்போது  சகோதரரை    இடையூறு  செய்துவிடக்கூடாது    என்று    நினைத்தவனாக  அறைக்  கதவினை  மெல்ல  சாத்திவிட்டு,  வெளியே  வந்தேன்;  அடுத்த  அறையில்  அமர்ந்திருந்த  சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் நான் வெளியே வந்ததைக் கண்டதும்.  'பாத்துட்டீங்களா?'  என்று  கேட்டார்.  நானோ,  அண்ணன் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள், எனவே உடனே வந்துவிட்டேன்  என்று  பதிலளித்தேன்.  சுமார்  ஒருமணி  நேரம்  கழித்து  10:30  மணிக்கு  மீண்டும்  சகோதரரைச்  சந்திக்கும்படியாகச்  சென்றேன்;  அப்பொழுதும்,  சகோதரர்  முழங்காலில் நின்றவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார்; மீண்டும் சந்திக்காமல்  வீட்டிற்கு  வந்துவிட்டேன்;  எனினும்  இக்காட்சி  எனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. 

இத்தனை வயதில், இருக்கையில் அமர்ந்து ஜெபிக்கலாமே? இப்படி  முழங்காலில்தான்  நின்று  ஜெபிக்கவேண்டும்  என்பது  கட்டாயமா? என்ற கேள்விகளைச் சிந்தனையில் சுமந்தவனாக வீடுவந்து போனது. சுமார் 11 மணிக்கு, எனது வாட்ஸ்அப்பில் ''Kiruba you can visit me now" என்று  சகோதரரிடமிருந்து  ஓர்  செய்தி  வந்தது.  சந்திக்கும்படியாகப்  புறப்பட்டுச்  சென்றேன்;  அப்போதும்  முழங்காலில்தான்  நின்றுகொண்டிருந்தார்;  நான்  நுழைந்தபின்புதான் முழங்காலிலிருந்து எழுந்தார்; 'அண்ணன் நீங்கள்  சரியாத  மரம்'  என்று  அவரைக்குறித்து  அவரிடமே  எனது  உதடுகள்  உச்சரித்தன.  மேலும்,  அறைக்குள்  நான்  வந்துபோனது  அவருக்கு  எப்படித்  தெரியும்?  என்ற  மற்றும்  ஒரு கேள்வி எனக்குள் எழும்ப, 'ஜெபநேரத்தில் எனக்கல்ல, கர்த்தருக்கே' முதலிடம் என்ற உணர்வு எனக்கு மேலும் ஓர் பாடமானது.

                               www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...