Skip to main content

சரியாத மரம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 56

சரியாத மரம்



.அது  ஓர்  காலை  வேளை,  9.30  மணி;  அலுவலகத்திற்குச்   செல்லும்   வழியில்   சகோதரர்    அகஸ்டின்    ஜெபக்குமார்    அவர்களைச்  சந்திக்கும்படியாக  அவரது  இல்லத்தினை  நோக்கிச்  சென்றேன்.  வீட்டின்  வெளியே  காலணிகளைக்  கழற்றிவிட்டு,  முன்  அறையினுள்  நுழைந்தேன்;  முன்  அறையின்  இருக்கைகள்  அனைத்தும்  எவரும்  இல்லாமல்  காலியாயிருந்தது; இதனைக் கண்டதும், சகோதரரின் வீட்டில் யாரும் இல்லையோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்பியது; அதனைத்  தொடர்ந்து,  அலுவலகத்திற்குச்  சென்றுவிட்டு  அப்புறம்   சகோதரரைச்   சந்தித்துக்கொள்ளலாம்   என்ற  நினைவும் எனக்குள் உருவானது. 

என்றாலும்,  சகோதரரைச் சந்திக்கும் ஆர்வத்தில், அடுத்த அறையினை  நோக்கி  நகர்ந்தேன்.  அங்கோ,  சகோதரர்  அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் துணைவியார் சகோதரி ரூபலேகா  ஜெபக்குமார்  அமர்ந்திருந்தார்;  அவர்களைக்  கண்டதும்,  'அக்கா,  அண்ணன்  இருக்காங்களா?'  என்று  கேட்டேன். அந்த ரூம்ல இருக்காங்க, ஜெபம் பண்ணிக்கிட்டு இருப்பாங்கன்னு  நினைக்கிறேன்'  என்றார்?  தயங்கியபடி  நின்றுகொண்டிருந்த   என்னைக்   கண்டதும்,   சகோதரர்   இருக்கும் அறையினை நோக்கி விரல் நீட்டியாவறு, அந்த அறையில்தான் அண்ணன் இருக்கிறார்கள் என்றார் சகோதரி ரூபலேகா  ஜெபக்குமார்.  அவர்கள்  காட்டிய  அறையின்  கதவினை  மெல்ல  நான்  திறந்து,  கால்கள்  வாசலுக்கு  வெளியே  நிற்க,  தலையினை  மாத்திரம்  அறையினுள்  நுழைத்தவனாகப்  பார்த்தபோது,  தரையில்  முழங்காலில்  நின்றபடி,  முழங்கையினையோ   படுக்கையின்   மீது  ஊன்றியவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், முகத்திற்கு முன்னே வேதாகமம் விரித்தாவாறு இருந்தது. 

இக்காட்சியினை  நான்  கண்டதும்,  ஜெபவேளையின்போது  சகோதரரை    இடையூறு  செய்துவிடக்கூடாது    என்று    நினைத்தவனாக  அறைக்  கதவினை  மெல்ல  சாத்திவிட்டு,  வெளியே  வந்தேன்;  அடுத்த  அறையில்  அமர்ந்திருந்த  சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் நான் வெளியே வந்ததைக் கண்டதும்.  'பாத்துட்டீங்களா?'  என்று  கேட்டார்.  நானோ,  அண்ணன் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள், எனவே உடனே வந்துவிட்டேன்  என்று  பதிலளித்தேன்.  சுமார்  ஒருமணி  நேரம்  கழித்து  10:30  மணிக்கு  மீண்டும்  சகோதரரைச்  சந்திக்கும்படியாகச்  சென்றேன்;  அப்பொழுதும்,  சகோதரர்  முழங்காலில் நின்றவாறு ஜெபித்துக்கொண்டிருந்தார்; மீண்டும் சந்திக்காமல்  வீட்டிற்கு  வந்துவிட்டேன்;  எனினும்  இக்காட்சி  எனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்தது. 

இத்தனை வயதில், இருக்கையில் அமர்ந்து ஜெபிக்கலாமே? இப்படி  முழங்காலில்தான்  நின்று  ஜெபிக்கவேண்டும்  என்பது  கட்டாயமா? என்ற கேள்விகளைச் சிந்தனையில் சுமந்தவனாக வீடுவந்து போனது. சுமார் 11 மணிக்கு, எனது வாட்ஸ்அப்பில் ''Kiruba you can visit me now" என்று  சகோதரரிடமிருந்து  ஓர்  செய்தி  வந்தது.  சந்திக்கும்படியாகப்  புறப்பட்டுச்  சென்றேன்;  அப்போதும்  முழங்காலில்தான்  நின்றுகொண்டிருந்தார்;  நான்  நுழைந்தபின்புதான் முழங்காலிலிருந்து எழுந்தார்; 'அண்ணன் நீங்கள்  சரியாத  மரம்'  என்று  அவரைக்குறித்து  அவரிடமே  எனது  உதடுகள்  உச்சரித்தன.  மேலும்,  அறைக்குள்  நான்  வந்துபோனது  அவருக்கு  எப்படித்  தெரியும்?  என்ற  மற்றும்  ஒரு கேள்வி எனக்குள் எழும்ப, 'ஜெபநேரத்தில் எனக்கல்ல, கர்த்தருக்கே' முதலிடம் என்ற உணர்வு எனக்கு மேலும் ஓர் பாடமானது.

                               www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை