முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      

      

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 53

உனக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?


 

2015, ஏப்ரல் 12, ஞாயிற்றுக் கிழமை, காலை ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை நடத்தும் வாய்ப்பு என்னுடையதாயிருந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு பீஹார், கைமூர் மலை மேல் உள்ள அதௌரா என்னுமிடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்படவிருந்ததை முன்னிட்டும், ஆராதனையில் பங்கேற்கும் ஊழியர்கள் அந்நிகழ்ச்சிக்குச் செல்லவிருந்ததாலும், ஆலய ஆராதனை விரைந்து முடிக்கப்பட்டது. அதௌரா பணித்தளத்திற்கு இரண்டு பேருந்துகள் புறப்பட்டபோதிலும், பேருந்தில் பயணித்து அத்தனை தூரம் என்னால் செல்ல இயலுமா? என்ற கேள்வியுடன் இருந்தேன் நான். எனது பெலவீனத்தைப் புரிந்துகொண்ட சகோதரி ரூபலேகா ஜெபக்குமார், தன்னுடைய வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டார். ஆராதனை, முடிந்ததும், 10.45 மணிக்கு சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் அவர்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்; சகோதரிகள் மூவர் உடனிருந்தனர். சுமார் மூன்று மணி நேர பயணம். நீண்ட பின் இருக்கையில், நீட்டி நிமிர்ந்து பயணிக்க வசதியாக, தலைக்கு தலையணை ஒன்றையும் சகோதரி முன் இருக்கையிலிருந்து எடுத்துக் கொடுத்தபோது, எனது பயணத்தின் மீது அவருக்கு இருக்கும் கரிசனை என் கண்ணில் பட்டது. அவரது வாயின் வார்த்தைகள், என்னுடைய வசதியை அவ்வப்போது விசாரித்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது உடலை நீட்டிப் படுத்துக் கொண்டேன். மதிய நேரம் nருங்கியது, தொடரும் பயணத்தை நிறுத்தாமல் பயணித்துக்கொண்டே உணவருந்தினோம். கொண்டுவந்த இட்லிகளை தட்டில் எடுத்துத் தந்தார் ஒரு சகோதரி. சாப்பிட்டு, நீர் அருந்தி, காகிதத்தால் கரங்களைத் துடைத்து, ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு அமர்ந்திருந்தோம். வாகனம் மலையின் மீது ஏற ஏற, தனது நினைவுகளால் கீழே இறங்கிக்கொண்டிருந்த சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் ஊழியத்தின் ஆதி ஆகமத்தின் ஒரு சுருளை விரித்து வாசித்தார்.

'ஜெம்ஸ் ஊழியத்தின் ஆரம்பம்; சொற்ப மிஷனரிகள், ஒரே குடும்பம், ஒரிடத்தில் உணவு என்ற நாட்கள் அவை. இருப்பதைக் கொண்டும், கர்த்தர் கொடுத்ததைக் கொண்டும் திருப்தியாக வாழக் கற்றிருந்த மிஷனரிகள். சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் ஊழியத்தை தீவிரமாகச் செய்துவந்தார்; மலையின் மேல் உள்ள கிராமங்களுக்கு சகோதரர் சென்றுவிட்டால் வீடு திரும்ப பல வாரங்கள் பிடிக்கும். ஊழியத்தில் இத்தனையாய் தனது பெலத்தைச் செலவிடும் கணவர் வீடு வரும்போது, திருப்தியாக சாப்பிடவேண்டும் என்று விருப்பங்; கொண்டிருந்தவள் நான். ஒருநாள், வீட்டில் சாம்பார் சொற்ப அளவே இருந்தது. கணவரை உணவருந்த அழைத்தேன், கொஞ்சமிருந்த சாம்பார் அனைத்தையும் அவருக்கு ஊற்றி உணவு பறிமாறினேன். கணவர் திருப்தியாகச் சாப்பிட்டு எழுந்ததும், நானோ சட்னி அரைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட கணவர், 'சாம்பார் இல்லையா?' என்று கேட்டார்; இல்லை, என்றேன். 'சமைக்கிறது நீ, அதுல உனக்கு கொஞ்சம் எடுத்து வைக்கக்கூடாதா?' என்றார் கணவர்' என்று அந்த நிகழ்வினை எங்குடன் அவர் பகிர்ந்துகொண்டார். ஊழியத்தின் ஆரம்பகால விலைக்கிரையத்தை, ஆகாரத்தில்கூட அவர்கள் செலுத்தவேண்டியிருந்தது எனனும் வரிகளை என்னால் அப்போது வாசிக்க முடிந்தது, என் சிந்தையிலும் யோசிக்க முடிந்தது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்

       சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 9 தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்   2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமத...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...