முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'We are insulated by God'

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

             

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 26

'We are insulated by God'


 

அது ஒரு காலை வேளை; மீடியா துறையில் உள்ள தனது அலுவலகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் வேலையில் அமர்ந்திருந்த எனது மனதில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுடன் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சற்று பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இருக்கையிலிருந்து எழுந்து சகோதரரின் அறையில் யாராவது உடன் இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தேன். எவருமில்லாத அந்த நேரத்தை எனதுடையதாக்கிக்கொள்ள, விரைந்து அவரது அறைக்குள் நுழைந்தேன், 'அண்ணன் ஐந்து நிமிடம், பேசலாமா' என்றேன்; உட்காருங்கள் என்றார். அண்ணன் நான் பேச விரும்புவது அலுவலகக் காரியங்களைப் பற்றியதல்ல என்ற முன்வரியுடன் தொடங்கினேன். அலுவலக சூழலைச் சற்று துறந்து, ஆவிக்குரிய ரகசியங்களைத் அவரிடத்தில் துளையிட்டு எடுக்கும் எண்ணத்தில் பேசத்தொடங்கினேன். சில கேள்விகளைக் கேட்டு விடைக்குக் காத்திருந்தபோது, அவரது வாயிலிருந்து வாழ்க்கைக்கான ரகசியங்கள் பல வலம் வந்தன. எதிர்மறை காரியங்களை, எதிருக்கு எதிரே, புதிரைப்போலச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் ஆவிக்குரிய மனிதனின் மனதில் எத்தனையோ புலம்பும்படியான கேள்விகள் எழுகின்றதே இதற்குக் காரணம் என்ன? இவைகளைச் சந்திப்பது எப்படி? என்றேன். அதற்கு அவர் : கிருபா, 'we are insulated by God' என்றார். இரண்டு மின்சார ஒயர்களை இணைத்து அதன்மேல் அவருடைய பாதுகாப்பு என்னும் insulation tape சுற்றப்பட்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையே மின்சாரத்தைப் போல வல்லமை பாய்ந்துகொண்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையிலான பிணைப்பு பெலமுள்ளது; சத்துருவினால் எளிதில் பிரித்துவிடவோ, பெயர்த்துவிடவோ கூடாதது. தேவனை விட்டுப் பிரியாமல் அனுதினமும் அவரோடு இணைந்த வாழ்க்கை நாம் வாழுவோமென்றால், நம்முடைய insulation tape – ஐ பிரித்தால், சத்துருவின் வாழ்க்கைதான் பாதிக்கப்படும். தேவனோடு நமக்குத் தொடர்பு இருக்குமென்றால், சத்துருவின் தொடருதலைக் குறித்து கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. தேவனோடு தொடர்பில்லாமலிருப்போமென்றால், சத்துருவின் தொடருதலினால் கவலை கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்ற அவரிடமிருந்து வந்த இந்த வார்த்தையை மாத்திரையாக உட்கொண்டு, மகிழ்வுடன் அவரது அறையை விட்டு வெளியே வந்தேன். அன்று முதல், சத்துருவையல்ல, தேவன் என்மேல் வைத்திருக்கும் பாதுகாப்பைப் பார்க்கத் தொடங்கினேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...