முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'We are insulated by God'

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

             

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 26

'We are insulated by God'


 

அது ஒரு காலை வேளை; மீடியா துறையில் உள்ள தனது அலுவலகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் வேலையில் அமர்ந்திருந்த எனது மனதில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுடன் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சற்று பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இருக்கையிலிருந்து எழுந்து சகோதரரின் அறையில் யாராவது உடன் இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தேன். எவருமில்லாத அந்த நேரத்தை எனதுடையதாக்கிக்கொள்ள, விரைந்து அவரது அறைக்குள் நுழைந்தேன், 'அண்ணன் ஐந்து நிமிடம், பேசலாமா' என்றேன்; உட்காருங்கள் என்றார். அண்ணன் நான் பேச விரும்புவது அலுவலகக் காரியங்களைப் பற்றியதல்ல என்ற முன்வரியுடன் தொடங்கினேன். அலுவலக சூழலைச் சற்று துறந்து, ஆவிக்குரிய ரகசியங்களைத் அவரிடத்தில் துளையிட்டு எடுக்கும் எண்ணத்தில் பேசத்தொடங்கினேன். சில கேள்விகளைக் கேட்டு விடைக்குக் காத்திருந்தபோது, அவரது வாயிலிருந்து வாழ்க்கைக்கான ரகசியங்கள் பல வலம் வந்தன. எதிர்மறை காரியங்களை, எதிருக்கு எதிரே, புதிரைப்போலச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் ஆவிக்குரிய மனிதனின் மனதில் எத்தனையோ புலம்பும்படியான கேள்விகள் எழுகின்றதே இதற்குக் காரணம் என்ன? இவைகளைச் சந்திப்பது எப்படி? என்றேன். அதற்கு அவர் : கிருபா, 'we are insulated by God' என்றார். இரண்டு மின்சார ஒயர்களை இணைத்து அதன்மேல் அவருடைய பாதுகாப்பு என்னும் insulation tape சுற்றப்பட்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையே மின்சாரத்தைப் போல வல்லமை பாய்ந்துகொண்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையிலான பிணைப்பு பெலமுள்ளது; சத்துருவினால் எளிதில் பிரித்துவிடவோ, பெயர்த்துவிடவோ கூடாதது. தேவனை விட்டுப் பிரியாமல் அனுதினமும் அவரோடு இணைந்த வாழ்க்கை நாம் வாழுவோமென்றால், நம்முடைய insulation tape – ஐ பிரித்தால், சத்துருவின் வாழ்க்கைதான் பாதிக்கப்படும். தேவனோடு நமக்குத் தொடர்பு இருக்குமென்றால், சத்துருவின் தொடருதலைக் குறித்து கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. தேவனோடு தொடர்பில்லாமலிருப்போமென்றால், சத்துருவின் தொடருதலினால் கவலை கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்ற அவரிடமிருந்து வந்த இந்த வார்த்தையை மாத்திரையாக உட்கொண்டு, மகிழ்வுடன் அவரது அறையை விட்டு வெளியே வந்தேன். அன்று முதல், சத்துருவையல்ல, தேவன் என்மேல் வைத்திருக்கும் பாதுகாப்பைப் பார்க்கத் தொடங்கினேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...