Skip to main content

'We are insulated by God'

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

             

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 26

'We are insulated by God'


 

அது ஒரு காலை வேளை; மீடியா துறையில் உள்ள தனது அலுவலகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அமர்ந்திருந்தார். அலுவலகத்தில் வேலையில் அமர்ந்திருந்த எனது மனதில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுடன் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சற்று பேசவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இருக்கையிலிருந்து எழுந்து சகோதரரின் அறையில் யாராவது உடன் இருக்கிறார்களா என்று உற்றுப் பார்த்தேன். எவருமில்லாத அந்த நேரத்தை எனதுடையதாக்கிக்கொள்ள, விரைந்து அவரது அறைக்குள் நுழைந்தேன், 'அண்ணன் ஐந்து நிமிடம், பேசலாமா' என்றேன்; உட்காருங்கள் என்றார். அண்ணன் நான் பேச விரும்புவது அலுவலகக் காரியங்களைப் பற்றியதல்ல என்ற முன்வரியுடன் தொடங்கினேன். அலுவலக சூழலைச் சற்று துறந்து, ஆவிக்குரிய ரகசியங்களைத் அவரிடத்தில் துளையிட்டு எடுக்கும் எண்ணத்தில் பேசத்தொடங்கினேன். சில கேள்விகளைக் கேட்டு விடைக்குக் காத்திருந்தபோது, அவரது வாயிலிருந்து வாழ்க்கைக்கான ரகசியங்கள் பல வலம் வந்தன. எதிர்மறை காரியங்களை, எதிருக்கு எதிரே, புதிரைப்போலச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் ஆவிக்குரிய மனிதனின் மனதில் எத்தனையோ புலம்பும்படியான கேள்விகள் எழுகின்றதே இதற்குக் காரணம் என்ன? இவைகளைச் சந்திப்பது எப்படி? என்றேன். அதற்கு அவர் : கிருபா, 'we are insulated by God' என்றார். இரண்டு மின்சார ஒயர்களை இணைத்து அதன்மேல் அவருடைய பாதுகாப்பு என்னும் insulation tape சுற்றப்பட்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையே மின்சாரத்தைப் போல வல்லமை பாய்ந்துகொண்டிருக்கின்றது; தேவனுக்கும் நமக்கும் இடையிலான பிணைப்பு பெலமுள்ளது; சத்துருவினால் எளிதில் பிரித்துவிடவோ, பெயர்த்துவிடவோ கூடாதது. தேவனை விட்டுப் பிரியாமல் அனுதினமும் அவரோடு இணைந்த வாழ்க்கை நாம் வாழுவோமென்றால், நம்முடைய insulation tape – ஐ பிரித்தால், சத்துருவின் வாழ்க்கைதான் பாதிக்கப்படும். தேவனோடு நமக்குத் தொடர்பு இருக்குமென்றால், சத்துருவின் தொடருதலைக் குறித்து கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. தேவனோடு தொடர்பில்லாமலிருப்போமென்றால், சத்துருவின் தொடருதலினால் கவலை கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்ற அவரிடமிருந்து வந்த இந்த வார்த்தையை மாத்திரையாக உட்கொண்டு, மகிழ்வுடன் அவரது அறையை விட்டு வெளியே வந்தேன். அன்று முதல், சத்துருவையல்ல, தேவன் என்மேல் வைத்திருக்கும் பாதுகாப்பைப் பார்க்கத் தொடங்கினேன். 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை