முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

PIONEER MISSIONARY

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

                     

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 37

PIONEER MISSIONARY


 

தனியார் நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, ஊழியம் செய்யவேண்டும் என்ற விருப்பம் மனதில் உண்டானது. இந்த விருப்பத்தை மனதில் கொண்டவனாக, தொடர்ந்து பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒருநாள், காலைப் பொழுதில், அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தபோது, ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் அதிகம் காலையிலும், மாலையிலும் அதிகம் விற்பனையாகும் வைர கற்களைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டானது. இணையதளங்களில், 'GEMS' எனக் குறிப்பிட்டு நான் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, 'GEMS' (Gospel Echoing Missionary Society) எனது கண்ணில் பட்டது. அவ்விணையதளத்திற்குள் நான் நுழைந்தபோது, அது ஒரு மிஷனரி ஸ்தாபனம் என்பதையும், அங்குள்ள தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) நான் பணிசெய்துகொண்டே ஊழியம் செய்யலாம் என்பதையும் அறிந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு, நவம்பர் மாத இறுதியில் பீஹாரிலுள்ள ஜெம்ஸ் வளாகத்திற்கு வந்து சேர்ந்தேன்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்துவிட்டு, அவரிடமிருந்து பதில் ஏதும் பெறாமல், விருந்தினர் அறையில் தொடர்ந்து தங்கியிருந்தேன். மீண்டும், ராஜஸ்தான் செல்லும் விருப்பம் உண்டாகிவிடக்கூடாது என்பதை உணர்ந்தவனாக, ஒருநாள் மாலைப் பொழுதில் டெஹ்ரி ஆன் சோன் நகருக்குச் சென்ற நான், அங்கிருந்து எனது ராஜினாமா கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன். தனியாக, விருந்தினர் அறையில் தங்கியிருந்த நான் கிடைத்த நேரங்களிலெல்லாம் கவிதைகளை எழுதி; அதனை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கும் அவ்வப்போது கொடுத்துவந்தேன். எனது அழைப்பினைக் குறித்தும் சகோதரருடன் அதிகமாகப் பேசுவதற்கு காத்திருந்த நான், ஆங்காங்கே சகோதரரைச் சந்திக்கும்போது வணக்கம் மாத்திரம் செலுத்தி விடைபெற்றுவந்தேன்.

ஒருநாள் காலை சுமார் 10 மணிக்கு சகோதரரின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது; சந்திக்கும்படிச் சென்றேன். என்னை அமரச் சொல்லியவாறு, எனது காரியங்களைக் குறித்துப் பேசத்தொடங்கினார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் எனது அழைப்பினையும், வாலிபர் மீதான தாகத்தையும் சகோதரரிடன் முடிந்தவரை எடுத்துரைத்தேன். யோனா கப்பலிலிருந்து வெளியே வீசப்பட்டதுபோல, உலகப் பணியிலிருந்து நான் வெளியேறும் வேளை வந்துவிட்டது என்பதையும், விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய் (எசே 3:5) என்று கர்த்தர் எனக்குத் தந்த அழைப்பின் வசனத்தையும் குறிப்பிட்டுக் காட்டினேன். உரையாடலுக்கு இடையில், 'நீங்கள் ஒரு Pioneer Missionary' என்று என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது' என்று சொல்லியவாறு ஜெபிக்கத் தொடங்கினார், 'ஆண்டவரே, இவரைக் கொண்டு புதிய காரிங்களைச் செய்யும்' என்ற வார்த்தை சகோதரரின் ஜெபத்தில் அழுத்தமான சத்தமாய் தொனித்தது. பேசி முடிந்ததும், விருந்தினர் விடுதியில் மீண்டும் காத்திருக்கும்படி சகோதரர் சொல்ல, அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது, அப்போதைய ஜெம்ஸ் மாணவர் ஊழியத்தின் பொறுப்பாளர் சகோதரர் ஐசக் எனது அறைக்கு வந்தார். சகோதரர் என்னைச் சந்திக்க அனுப்பியதாக தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அலுவலகப் பணியோடு, ஊழியப் பணியினையும் செய்யும் அழைப்பு என்னுடையது என்று நான் சொன்னபோது, சகோ.ஐசக் என்னை முழு நேரமாக மாணவர் ஊழியத்தில் ஈடுபடுத்த விரும்பாதிருந்தார். அதனைத் தொடர்ந்து, சகோதரரின் நடத்துதலின்படி ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஊழியத்தைத் தொடர்ந்தேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...