Skip to main content

PIONEER MISSIONARY

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

                     

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 37

PIONEER MISSIONARY


 

தனியார் நிறுவனம் ஒன்றில் நான் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, ஊழியம் செய்யவேண்டும் என்ற விருப்பம் மனதில் உண்டானது. இந்த விருப்பத்தை மனதில் கொண்டவனாக, தொடர்ந்து பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன். ஒருநாள், காலைப் பொழுதில், அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தபோது, ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் அதிகம் காலையிலும், மாலையிலும் அதிகம் விற்பனையாகும் வைர கற்களைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு உண்டானது. இணையதளங்களில், 'GEMS' எனக் குறிப்பிட்டு நான் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, 'GEMS' (Gospel Echoing Missionary Society) எனது கண்ணில் பட்டது. அவ்விணையதளத்திற்குள் நான் நுழைந்தபோது, அது ஒரு மிஷனரி ஸ்தாபனம் என்பதையும், அங்குள்ள தொழிற்பயிற்சி மையத்தில் (ITI) நான் பணிசெய்துகொண்டே ஊழியம் செய்யலாம் என்பதையும் அறிந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு, நவம்பர் மாத இறுதியில் பீஹாரிலுள்ள ஜெம்ஸ் வளாகத்திற்கு வந்து சேர்ந்தேன்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்துவிட்டு, அவரிடமிருந்து பதில் ஏதும் பெறாமல், விருந்தினர் அறையில் தொடர்ந்து தங்கியிருந்தேன். மீண்டும், ராஜஸ்தான் செல்லும் விருப்பம் உண்டாகிவிடக்கூடாது என்பதை உணர்ந்தவனாக, ஒருநாள் மாலைப் பொழுதில் டெஹ்ரி ஆன் சோன் நகருக்குச் சென்ற நான், அங்கிருந்து எனது ராஜினாமா கடிதத்தை நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன். தனியாக, விருந்தினர் அறையில் தங்கியிருந்த நான் கிடைத்த நேரங்களிலெல்லாம் கவிதைகளை எழுதி; அதனை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கும் அவ்வப்போது கொடுத்துவந்தேன். எனது அழைப்பினைக் குறித்தும் சகோதரருடன் அதிகமாகப் பேசுவதற்கு காத்திருந்த நான், ஆங்காங்கே சகோதரரைச் சந்திக்கும்போது வணக்கம் மாத்திரம் செலுத்தி விடைபெற்றுவந்தேன்.

ஒருநாள் காலை சுமார் 10 மணிக்கு சகோதரரின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது; சந்திக்கும்படிச் சென்றேன். என்னை அமரச் சொல்லியவாறு, எனது காரியங்களைக் குறித்துப் பேசத்தொடங்கினார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் எனது அழைப்பினையும், வாலிபர் மீதான தாகத்தையும் சகோதரரிடன் முடிந்தவரை எடுத்துரைத்தேன். யோனா கப்பலிலிருந்து வெளியே வீசப்பட்டதுபோல, உலகப் பணியிலிருந்து நான் வெளியேறும் வேளை வந்துவிட்டது என்பதையும், விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய் (எசே 3:5) என்று கர்த்தர் எனக்குத் தந்த அழைப்பின் வசனத்தையும் குறிப்பிட்டுக் காட்டினேன். உரையாடலுக்கு இடையில், 'நீங்கள் ஒரு Pioneer Missionary' என்று என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது' என்று சொல்லியவாறு ஜெபிக்கத் தொடங்கினார், 'ஆண்டவரே, இவரைக் கொண்டு புதிய காரிங்களைச் செய்யும்' என்ற வார்த்தை சகோதரரின் ஜெபத்தில் அழுத்தமான சத்தமாய் தொனித்தது. பேசி முடிந்ததும், விருந்தினர் விடுதியில் மீண்டும் காத்திருக்கும்படி சகோதரர் சொல்ல, அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது, அப்போதைய ஜெம்ஸ் மாணவர் ஊழியத்தின் பொறுப்பாளர் சகோதரர் ஐசக் எனது அறைக்கு வந்தார். சகோதரர் என்னைச் சந்திக்க அனுப்பியதாக தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அலுவலகப் பணியோடு, ஊழியப் பணியினையும் செய்யும் அழைப்பு என்னுடையது என்று நான் சொன்னபோது, சகோ.ஐசக் என்னை முழு நேரமாக மாணவர் ஊழியத்தில் ஈடுபடுத்த விரும்பாதிருந்தார். அதனைத் தொடர்ந்து, சகோதரரின் நடத்துதலின்படி ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஊழியத்தைத் தொடர்ந்தேன். 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை