முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'Personally annan officially director'

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

               

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 30

'Personally annan officially director'


 

பிஹாரில் ஜெம்ஸ் வளாகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் இருக்கும் நோட்களில் அவ்வப்போது அவரைச் சந்தித்து பேசும் வாய்ப்பினை நான் உருவாக்கிக்கொள்ளுவேன். அலுவலகத்திற்கு வெளியே, வீட்டிற்கு வெளியே சகோதரர் நின்றுகொண்டிருக்கும் சமையத்தில், அவரது தனிப்பட்ட நேரத்தையும் நான் அபகரித்துக்கொள்ளக்கூடாது என்பதையும் உணர்ந்தவனாகவே அவரைச் சந்திக்க முற்படுவேன். ஒருமுறை வளாகத்தில் அவர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, அவரைச் சந்தித்த நான், சில காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டே அவருடன் நடந்துசென்றுகொண்டிருந்தேன். சற்று தூரம் சென்றதும், எதிரே சில ஊழியர்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர்; சகோதரரைக் கண்டதும், நின்று பேசத் தொடங்கினர். அலுவலகத்தைக் குறித்த ஒருசில காரியங்களை ஒரு சில நிமிடத்தில் பேசிவிட்டு விடைபெற்றார்கள் அவர்குள். அவர்களது உரையாடல்களில் குறுக்கிடாமல் நானும் அமைதியாய் உடன் நின்றுகொண்டிருந்தேன். சிறு நேரம் கழித்து, அண்ணன் நான் உங்களை தனிப்பட்ட விதத்தில் அண்ணனாகவும், அலுவலகத்தைச் சார்ந்த விஷயங்களில் Director ஆகவும் பார்க்கிறேன், அதனால்தான், அநேக தனிப்பட்ட காரியங்களுக்கு உங்களிடம் ஆலோசனை பெற தயக்கமின்றி வந்து உங்களைச் சந்திக்கிறேன். எப்போதுமே உங்களை Director ஆகப் பார்த்துக்கொண்டிருந்தால், என்னுடைய தனி வாழ்விற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாதபடி என்னைத் தூரப்படுத்திக்கொள்ளும் நிலை உண்டாகிவிடும்; 'Praise the Lord' என்று மாத்திரம் சொல்லிவிட்டு, இப்போது, அலுவலகப் பணிகள் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லையே என்ற எண்ணத்துடன் சென்றுவிடுவேன். எப்போதுமே அண்ணனாகப் பார்த்துக்கொண்டிருந்தால், அலுவலகப் பணிகளுக்கு அது இடையூராக அமைந்துவிடும். எனவே, உங்களைச் சந்திக்கும்போது, இந்த இரட்டை அணுகுமுறை என்னிடத்தில் உண்டு என்று சொன்னதுடன், இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன? இந்த அணுகுமுறை சரிதானா? என்ற கேள்வியையும் சகோதரருக்கு முன் வைத்தேன். அதற்கு சகோதரர், 'நானும் இதைத்தான் விரும்புகிறேன்' என்ற பதில் கொடுத்தார். ஊழியமும் வேண்டும், உறவும் வேண்டும் இது நம்மில் என்றும் தொடரவேண்டும்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...