Skip to main content

'Personally annan officially director'

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

               

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 30

'Personally annan officially director'


 

பிஹாரில் ஜெம்ஸ் வளாகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் இருக்கும் நோட்களில் அவ்வப்போது அவரைச் சந்தித்து பேசும் வாய்ப்பினை நான் உருவாக்கிக்கொள்ளுவேன். அலுவலகத்திற்கு வெளியே, வீட்டிற்கு வெளியே சகோதரர் நின்றுகொண்டிருக்கும் சமையத்தில், அவரது தனிப்பட்ட நேரத்தையும் நான் அபகரித்துக்கொள்ளக்கூடாது என்பதையும் உணர்ந்தவனாகவே அவரைச் சந்திக்க முற்படுவேன். ஒருமுறை வளாகத்தில் அவர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, அவரைச் சந்தித்த நான், சில காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டே அவருடன் நடந்துசென்றுகொண்டிருந்தேன். சற்று தூரம் சென்றதும், எதிரே சில ஊழியர்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர்; சகோதரரைக் கண்டதும், நின்று பேசத் தொடங்கினர். அலுவலகத்தைக் குறித்த ஒருசில காரியங்களை ஒரு சில நிமிடத்தில் பேசிவிட்டு விடைபெற்றார்கள் அவர்குள். அவர்களது உரையாடல்களில் குறுக்கிடாமல் நானும் அமைதியாய் உடன் நின்றுகொண்டிருந்தேன். சிறு நேரம் கழித்து, அண்ணன் நான் உங்களை தனிப்பட்ட விதத்தில் அண்ணனாகவும், அலுவலகத்தைச் சார்ந்த விஷயங்களில் Director ஆகவும் பார்க்கிறேன், அதனால்தான், அநேக தனிப்பட்ட காரியங்களுக்கு உங்களிடம் ஆலோசனை பெற தயக்கமின்றி வந்து உங்களைச் சந்திக்கிறேன். எப்போதுமே உங்களை Director ஆகப் பார்த்துக்கொண்டிருந்தால், என்னுடைய தனி வாழ்விற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாதபடி என்னைத் தூரப்படுத்திக்கொள்ளும் நிலை உண்டாகிவிடும்; 'Praise the Lord' என்று மாத்திரம் சொல்லிவிட்டு, இப்போது, அலுவலகப் பணிகள் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லையே என்ற எண்ணத்துடன் சென்றுவிடுவேன். எப்போதுமே அண்ணனாகப் பார்த்துக்கொண்டிருந்தால், அலுவலகப் பணிகளுக்கு அது இடையூராக அமைந்துவிடும். எனவே, உங்களைச் சந்திக்கும்போது, இந்த இரட்டை அணுகுமுறை என்னிடத்தில் உண்டு என்று சொன்னதுடன், இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன? இந்த அணுகுமுறை சரிதானா? என்ற கேள்வியையும் சகோதரருக்கு முன் வைத்தேன். அதற்கு சகோதரர், 'நானும் இதைத்தான் விரும்புகிறேன்' என்ற பதில் கொடுத்தார். ஊழியமும் வேண்டும், உறவும் வேண்டும் இது நம்மில் என்றும் தொடரவேண்டும்.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை