முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'Personally annan officially director'

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

               

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 30

'Personally annan officially director'


 

பிஹாரில் ஜெம்ஸ் வளாகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் இருக்கும் நோட்களில் அவ்வப்போது அவரைச் சந்தித்து பேசும் வாய்ப்பினை நான் உருவாக்கிக்கொள்ளுவேன். அலுவலகத்திற்கு வெளியே, வீட்டிற்கு வெளியே சகோதரர் நின்றுகொண்டிருக்கும் சமையத்தில், அவரது தனிப்பட்ட நேரத்தையும் நான் அபகரித்துக்கொள்ளக்கூடாது என்பதையும் உணர்ந்தவனாகவே அவரைச் சந்திக்க முற்படுவேன். ஒருமுறை வளாகத்தில் அவர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, அவரைச் சந்தித்த நான், சில காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டே அவருடன் நடந்துசென்றுகொண்டிருந்தேன். சற்று தூரம் சென்றதும், எதிரே சில ஊழியர்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர்; சகோதரரைக் கண்டதும், நின்று பேசத் தொடங்கினர். அலுவலகத்தைக் குறித்த ஒருசில காரியங்களை ஒரு சில நிமிடத்தில் பேசிவிட்டு விடைபெற்றார்கள் அவர்குள். அவர்களது உரையாடல்களில் குறுக்கிடாமல் நானும் அமைதியாய் உடன் நின்றுகொண்டிருந்தேன். சிறு நேரம் கழித்து, அண்ணன் நான் உங்களை தனிப்பட்ட விதத்தில் அண்ணனாகவும், அலுவலகத்தைச் சார்ந்த விஷயங்களில் Director ஆகவும் பார்க்கிறேன், அதனால்தான், அநேக தனிப்பட்ட காரியங்களுக்கு உங்களிடம் ஆலோசனை பெற தயக்கமின்றி வந்து உங்களைச் சந்திக்கிறேன். எப்போதுமே உங்களை Director ஆகப் பார்த்துக்கொண்டிருந்தால், என்னுடைய தனி வாழ்விற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாதபடி என்னைத் தூரப்படுத்திக்கொள்ளும் நிலை உண்டாகிவிடும்; 'Praise the Lord' என்று மாத்திரம் சொல்லிவிட்டு, இப்போது, அலுவலகப் பணிகள் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லையே என்ற எண்ணத்துடன் சென்றுவிடுவேன். எப்போதுமே அண்ணனாகப் பார்த்துக்கொண்டிருந்தால், அலுவலகப் பணிகளுக்கு அது இடையூராக அமைந்துவிடும். எனவே, உங்களைச் சந்திக்கும்போது, இந்த இரட்டை அணுகுமுறை என்னிடத்தில் உண்டு என்று சொன்னதுடன், இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன? இந்த அணுகுமுறை சரிதானா? என்ற கேள்வியையும் சகோதரருக்கு முன் வைத்தேன். அதற்கு சகோதரர், 'நானும் இதைத்தான் விரும்புகிறேன்' என்ற பதில் கொடுத்தார். ஊழியமும் வேண்டும், உறவும் வேண்டும் இது நம்மில் என்றும் தொடரவேண்டும்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...