சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்
உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்
P.J. கிருபாகரன்
'Personally annan officially director'
பிஹாரில் ஜெம்ஸ் வளாகத்தில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் இருக்கும் நோட்களில் அவ்வப்போது அவரைச் சந்தித்து பேசும் வாய்ப்பினை நான் உருவாக்கிக்கொள்ளுவேன். அலுவலகத்திற்கு வெளியே, வீட்டிற்கு வெளியே சகோதரர் நின்றுகொண்டிருக்கும் சமையத்தில், அவரது தனிப்பட்ட நேரத்தையும் நான் அபகரித்துக்கொள்ளக்கூடாது என்பதையும் உணர்ந்தவனாகவே அவரைச் சந்திக்க முற்படுவேன். ஒருமுறை வளாகத்தில் அவர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது, அவரைச் சந்தித்த நான், சில காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டே அவருடன் நடந்துசென்றுகொண்டிருந்தேன். சற்று தூரம் சென்றதும், எதிரே சில ஊழியர்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர்; சகோதரரைக் கண்டதும், நின்று பேசத் தொடங்கினர். அலுவலகத்தைக் குறித்த ஒருசில காரியங்களை ஒரு சில நிமிடத்தில் பேசிவிட்டு விடைபெற்றார்கள் அவர்குள். அவர்களது உரையாடல்களில் குறுக்கிடாமல் நானும் அமைதியாய் உடன் நின்றுகொண்டிருந்தேன். சிறு நேரம் கழித்து, அண்ணன் நான் உங்களை தனிப்பட்ட விதத்தில் அண்ணனாகவும், அலுவலகத்தைச் சார்ந்த விஷயங்களில் Director ஆகவும் பார்க்கிறேன், அதனால்தான், அநேக தனிப்பட்ட காரியங்களுக்கு உங்களிடம் ஆலோசனை பெற தயக்கமின்றி வந்து உங்களைச் சந்திக்கிறேன். எப்போதுமே உங்களை Director ஆகப் பார்த்துக்கொண்டிருந்தால், என்னுடைய தனி வாழ்விற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாதபடி என்னைத் தூரப்படுத்திக்கொள்ளும் நிலை உண்டாகிவிடும்; 'Praise the Lord' என்று மாத்திரம் சொல்லிவிட்டு, இப்போது, அலுவலகப் பணிகள் குறித்து பேசுவதற்கு எதுவுமில்லையே என்ற எண்ணத்துடன் சென்றுவிடுவேன். எப்போதுமே அண்ணனாகப் பார்த்துக்கொண்டிருந்தால், அலுவலகப் பணிகளுக்கு அது இடையூராக அமைந்துவிடும். எனவே, உங்களைச் சந்திக்கும்போது, இந்த இரட்டை அணுகுமுறை என்னிடத்தில் உண்டு என்று சொன்னதுடன், இதைக் குறித்து உங்கள் கருத்து என்ன? இந்த அணுகுமுறை சரிதானா? என்ற கேள்வியையும் சகோதரருக்கு முன் வைத்தேன். அதற்கு சகோதரர், 'நானும் இதைத்தான் விரும்புகிறேன்' என்ற பதில் கொடுத்தார். ஊழியமும் வேண்டும், உறவும் வேண்டும் இது நம்மில் என்றும் தொடரவேண்டும்.
www.sinegithan.in
கருத்துகள்
கருத்துரையிடுக