Skip to main content

‘Nobody knows the foundation’

 

        

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 20

‘Nobody knows the foundation’


ஒரு நாள் காலை வேளை, முதல் மாடியில் அமைந்திருந்த எனது அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தேன். திடீரென எனது அலுவலகத்தின் வாசலண்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிற சத்தம் கேட்டது, எனது அலுவலகத்தின் வாசலில் நின்றவாறு வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், வெளிநாட்டைச் சேர்ந்த ஜெபப் பங்காளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். ஜெம்ஸ் உருவான வரலாற்றையும், கட்டடங்கள் கட்டப்பட்ட விதத்தையும் சகோதரர் அவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். ஜெபப் பங்காளரின் பல கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென சத்தத்தை உயர்த்தியவாறு, ‘Nobody knows the foundation’ என்று சொன்னார் சகோதரர். இந்த வார்த்தை எனது உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதிந்தது. சற்று நேரத்திற்குள் அந்த ஜெபப் பங்காளரை எனது அலுவலகத்திற்குள்ளும் அழைத்து வந்து, எனது அலுவலகத்தின் பணிகள் பற்றியும், என்னைப் பற்றியும் அந்த ஜெபப் பங்காளருக்கு அறிமுகம் செய்துவைத்தார் சகோதரர். அவ்விருவரும் எனது அறையை விட்டுக் கடந்து சென்ற பின்னரும், ‘Nobody knows the foundation’ என்று சகோதரர் சொன்ன வார்த்தை எனது செவிகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. சகோதரர் இப்படிச் சொன்னதின் காரணம் என்ன? எதனைக் குறிப்பிட்டு இப்படிச் சொன்னார்? நிச்சயம் ஜெம்ஸ் வரலாற்றைக் குறித்துத்தான் என்பதை யோசித்தவனாகவே என்னுடைய அலுவல்களை அன்றைய தினம் தொடர்ந்தேன். பின்னர் சகோதரரைச் சந்தித்த நான், அண்ணன் நீங்கள்‘ Nobody knows the foundation’ என்ற வார்த்தையை நான் கேட்டேன். ஜெம்ஸ் வரலாறு குறித்து நிச்சயம் நீங்கள் ஒரு புத்தகம் எழுதவேண்டும், இல்லையெனில், எங்களைப் போன்ற புதிய முகங்களுக்கு ஜெம்ஸ்-ன் தொடக்க முகம் தெரியாமலேயே போய்விடும் என்றேன். எனது வார்த்தைகளை உள்வாங்கிய சகோதரர், 'ஜெம்ஸ் வரலாறு எழுதவேண்டும் என்ற விருப்பம் எனக்குள்ளும் இருக்கின்றது, அதற்கான நேரம் கிடைக்கவேண்டும், ஜெபியுங்கள்' என்று பதிலுரைத்தார். சில மாதங்களுக்குப் பின்னர், வெளிநாடு சென்றிருந்த சகோதரர், அங்கேயே முழு புத்தகத்தையும் கைப்பட எழுதி முடித்து, பீஹார் திரும்பியபோது என் கையில் கொடுத்தார். அதுவே, 'நீ இல்லாவிடில்' என்ற தலைப்பில் வெளிவந்த ஜெம்ஸ் வரலாறு. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குப் பின்னர் அவரது அலுவலகத்தில் அந்தப் புத்தகத்தின் பணியை அவருடன் இணைந்து செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, புத்தகத்தில் பதித்திராத பலகாரியங்களையும், நிகழ்வுகளையும் சகோதரர் என்னுடன் பகிர்ந்துகொண்டது எனக்குக் கிடைத்த பாக்கியம். வரும் தலைமுறையினர் நம் வளர்ச்சியை மட்டுமல்ல, நம் விதையையும் காணவேண்டும்.

நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.(ஏசா 51:1)


www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை