முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘Nobody knows the foundation’

 

        

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 20

‘Nobody knows the foundation’


ஒரு நாள் காலை வேளை, முதல் மாடியில் அமைந்திருந்த எனது அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தேன். திடீரென எனது அலுவலகத்தின் வாசலண்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிற சத்தம் கேட்டது, எனது அலுவலகத்தின் வாசலில் நின்றவாறு வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், வெளிநாட்டைச் சேர்ந்த ஜெபப் பங்காளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். ஜெம்ஸ் உருவான வரலாற்றையும், கட்டடங்கள் கட்டப்பட்ட விதத்தையும் சகோதரர் அவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். ஜெபப் பங்காளரின் பல கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென சத்தத்தை உயர்த்தியவாறு, ‘Nobody knows the foundation’ என்று சொன்னார் சகோதரர். இந்த வார்த்தை எனது உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதிந்தது. சற்று நேரத்திற்குள் அந்த ஜெபப் பங்காளரை எனது அலுவலகத்திற்குள்ளும் அழைத்து வந்து, எனது அலுவலகத்தின் பணிகள் பற்றியும், என்னைப் பற்றியும் அந்த ஜெபப் பங்காளருக்கு அறிமுகம் செய்துவைத்தார் சகோதரர். அவ்விருவரும் எனது அறையை விட்டுக் கடந்து சென்ற பின்னரும், ‘Nobody knows the foundation’ என்று சகோதரர் சொன்ன வார்த்தை எனது செவிகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. சகோதரர் இப்படிச் சொன்னதின் காரணம் என்ன? எதனைக் குறிப்பிட்டு இப்படிச் சொன்னார்? நிச்சயம் ஜெம்ஸ் வரலாற்றைக் குறித்துத்தான் என்பதை யோசித்தவனாகவே என்னுடைய அலுவல்களை அன்றைய தினம் தொடர்ந்தேன். பின்னர் சகோதரரைச் சந்தித்த நான், அண்ணன் நீங்கள்‘ Nobody knows the foundation’ என்ற வார்த்தையை நான் கேட்டேன். ஜெம்ஸ் வரலாறு குறித்து நிச்சயம் நீங்கள் ஒரு புத்தகம் எழுதவேண்டும், இல்லையெனில், எங்களைப் போன்ற புதிய முகங்களுக்கு ஜெம்ஸ்-ன் தொடக்க முகம் தெரியாமலேயே போய்விடும் என்றேன். எனது வார்த்தைகளை உள்வாங்கிய சகோதரர், 'ஜெம்ஸ் வரலாறு எழுதவேண்டும் என்ற விருப்பம் எனக்குள்ளும் இருக்கின்றது, அதற்கான நேரம் கிடைக்கவேண்டும், ஜெபியுங்கள்' என்று பதிலுரைத்தார். சில மாதங்களுக்குப் பின்னர், வெளிநாடு சென்றிருந்த சகோதரர், அங்கேயே முழு புத்தகத்தையும் கைப்பட எழுதி முடித்து, பீஹார் திரும்பியபோது என் கையில் கொடுத்தார். அதுவே, 'நீ இல்லாவிடில்' என்ற தலைப்பில் வெளிவந்த ஜெம்ஸ் வரலாறு. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குப் பின்னர் அவரது அலுவலகத்தில் அந்தப் புத்தகத்தின் பணியை அவருடன் இணைந்து செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, புத்தகத்தில் பதித்திராத பலகாரியங்களையும், நிகழ்வுகளையும் சகோதரர் என்னுடன் பகிர்ந்துகொண்டது எனக்குக் கிடைத்த பாக்கியம். வரும் தலைமுறையினர் நம் வளர்ச்சியை மட்டுமல்ல, நம் விதையையும் காணவேண்டும்.

நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.(ஏசா 51:1)


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...