முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘Nobody knows the foundation’

 

        

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 20

‘Nobody knows the foundation’


ஒரு நாள் காலை வேளை, முதல் மாடியில் அமைந்திருந்த எனது அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்தேன். திடீரென எனது அலுவலகத்தின் வாசலண்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிற சத்தம் கேட்டது, எனது அலுவலகத்தின் வாசலில் நின்றவாறு வெளியே எட்டிப் பார்த்தேன். அங்கே, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், வெளிநாட்டைச் சேர்ந்த ஜெபப் பங்காளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். ஜெம்ஸ் உருவான வரலாற்றையும், கட்டடங்கள் கட்டப்பட்ட விதத்தையும் சகோதரர் அவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். ஜெபப் பங்காளரின் பல கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென சத்தத்தை உயர்த்தியவாறு, ‘Nobody knows the foundation’ என்று சொன்னார் சகோதரர். இந்த வார்த்தை எனது உள்ளத்தில் அழுத்தமாய்ப் பதிந்தது. சற்று நேரத்திற்குள் அந்த ஜெபப் பங்காளரை எனது அலுவலகத்திற்குள்ளும் அழைத்து வந்து, எனது அலுவலகத்தின் பணிகள் பற்றியும், என்னைப் பற்றியும் அந்த ஜெபப் பங்காளருக்கு அறிமுகம் செய்துவைத்தார் சகோதரர். அவ்விருவரும் எனது அறையை விட்டுக் கடந்து சென்ற பின்னரும், ‘Nobody knows the foundation’ என்று சகோதரர் சொன்ன வார்த்தை எனது செவிகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. சகோதரர் இப்படிச் சொன்னதின் காரணம் என்ன? எதனைக் குறிப்பிட்டு இப்படிச் சொன்னார்? நிச்சயம் ஜெம்ஸ் வரலாற்றைக் குறித்துத்தான் என்பதை யோசித்தவனாகவே என்னுடைய அலுவல்களை அன்றைய தினம் தொடர்ந்தேன். பின்னர் சகோதரரைச் சந்தித்த நான், அண்ணன் நீங்கள்‘ Nobody knows the foundation’ என்ற வார்த்தையை நான் கேட்டேன். ஜெம்ஸ் வரலாறு குறித்து நிச்சயம் நீங்கள் ஒரு புத்தகம் எழுதவேண்டும், இல்லையெனில், எங்களைப் போன்ற புதிய முகங்களுக்கு ஜெம்ஸ்-ன் தொடக்க முகம் தெரியாமலேயே போய்விடும் என்றேன். எனது வார்த்தைகளை உள்வாங்கிய சகோதரர், 'ஜெம்ஸ் வரலாறு எழுதவேண்டும் என்ற விருப்பம் எனக்குள்ளும் இருக்கின்றது, அதற்கான நேரம் கிடைக்கவேண்டும், ஜெபியுங்கள்' என்று பதிலுரைத்தார். சில மாதங்களுக்குப் பின்னர், வெளிநாடு சென்றிருந்த சகோதரர், அங்கேயே முழு புத்தகத்தையும் கைப்பட எழுதி முடித்து, பீஹார் திரும்பியபோது என் கையில் கொடுத்தார். அதுவே, 'நீ இல்லாவிடில்' என்ற தலைப்பில் வெளிவந்த ஜெம்ஸ் வரலாறு. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குப் பின்னர் அவரது அலுவலகத்தில் அந்தப் புத்தகத்தின் பணியை அவருடன் இணைந்து செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, புத்தகத்தில் பதித்திராத பலகாரியங்களையும், நிகழ்வுகளையும் சகோதரர் என்னுடன் பகிர்ந்துகொண்டது எனக்குக் கிடைத்த பாக்கியம். வரும் தலைமுறையினர் நம் வளர்ச்சியை மட்டுமல்ல, நம் விதையையும் காணவேண்டும்.

நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.(ஏசா 51:1)


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...