முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 31

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்


 

ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்த நான், அலுவலகக் காரியங்களைப் பற்றிய பேச்சுக்களைத் தொடர்ந்து, தனிப்பட்ட வாழ்க்கையின் சில ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது, தேவன் மனிதர்களுக்குள் வைத்திருக்கும் வரங்களையும், கிருபைகளையும் குறித்த கருத்துக்கள் அவரது வாயிலிருந்து வார்த்தைகளாக வெளிவந்துகொண்டிருந்தன. தாலந்துதனைப் பெற்ற மனிதன், அதனை தேவனுக்காக பயன்படுத்த எத்தனை கரிசனையாய் இருக்கவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது, தேவன் என்னிடத்தில் தந்திருக்கும் தாலந்துகளுக்கு நான் கணக்கு ஒப்புவிக்கவேண்டுமே என்ற எண்ணம் என் சிந்தையைக் கவ்விப் பிடித்துக்கொண்டிருந்தது. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த சகோதரர், உதாரணமாக தன்னுடைய பிள்ளைகளைக் முன் வைத்துப் பேசத் தொடங்கினார். 'என்னுடைய பிள்ளைகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எனக்குள் இருக்கும் கிருபை சந்ததியாராகிய அவர்களுக்குள்ளும் கடத்தப்பட்டிருக்கிறது, அவர்கள் பயன்படுத்தப் பயன்படுத்த அதன் பலனை வெளியரங்கமாய் காணமுடியும்; அதனைச் செய்யவேண்டியது அவர்கள் பொறுப்பு, அவர்கள் அதனைத் தூண்டிவிட்டால் போதும்' என்று சொன்னார். உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா 59:21) என்ற வசனத்தை நான் அப்போது நினைவு கூர்ந்தேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 7 இது தமிழ்நாடு இல்ல; பீஹார்   ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 2003-ம் ஆண்டு நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொழிற்பயிற்சி மையம் அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாசன் உடன் நானும் இணைந்து அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அரசு அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் சில பொருட்களையும், இயந்திரங்களையும் வாங்க முற்பட்டோம். பொருட்கள் சிலவற்றை வாங்கும்படியாக, பீஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்த சகோதரர் ஜேசுதாசன், அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாயை ஜெம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்று ரயிலில் பாட்னா வந்து சேரும்படி கூறினார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த நான்,  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச்...