முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கறையான அக்கரை

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 13

கறையான அக்கரை

31 March 2014

 

ஜார்க்கண்ட் மாநிலம் அம்பிகாபூர் என்னுமிடத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களின்போது நடைபெற்ற நிகழ்வு இது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்பே முன் ஏற்பாடுகளில் உதவி செய்ய ஜெம்ஸ் மீடியா துறையினருடன் நானும் அம்பிகாபூர் சென்றிருந்தேன். வழியில் பேருந்திலேயே மீன் பொறியல், பிரட் ஆம்லேட், சமையல் என எங்கள் வயிற்றுப் பசியை எங்கள் கரங்களே ஆற்றியது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஸ்டீபன், மற்றும் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஆரோன் அவர்களும் அக்கூட்டங்களுக்கு எங்களுடன் வந்திருந்தனர். சகோதரர்களில் சிலர் தங்குவதற்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று தங்கினர்; எனினும், மைதானத்தில் உள்ள பொருட்களுக்கும், ஜெனரேட்டர் பேருந்திற்கும் பாதுகாப்பு கருதி, நானும், சில சகோதரர்களுமோ மைதானத்திலேயே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தோம்; சமையல் பாத்திரங்களை உடன் கொண்டு சென்றிருந்ததால் விரும்பிய உணவை மைதானத்திலேயே சமைத்துச் சாப்பிட்டு வந்தோம். கூட்டம் தொடங்கும் நாளன்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அம்பிகாபூர் வந்து சேர்ந்தார்; ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை சகோதரரின் வாகனத்தை ஓட்டிவந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சகோதரரை அழைக்கும்படியாக நான் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றிருந்தேன். அறையில் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வயற்றுப் போக்கால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்; அறையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் இருந்த சகோதரர் ராஜதுரை சில மருந்துகளை சகோதரருக்குக் கலக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்று பிரசங்கம் செய்ய முடியுமா? என்ற நிலையில் அவரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம், ஆடையை அணிந்து கூட்டத்திற்குச் செல்ல ஆயத்தமானார் சகோதரர். அவருடன் நானும் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். உடலின் பெலவீனம் எள்ளளவும் வெளிப்படாமல், பெலமாய் வெளிப்பட்டது கர்த்தருடைய வார்த்தை. பிரசங்கம் முடிந்ததும், விரு விரு என மேடையை விட்டு இறங்கினார் சகோதரர்; வாகனத்தில் தங்குமிடத்திற்குப் புறப்பட்டார்; நானும் அவருடன் புறப்பட்டேன். தங்கும் அறைக்குச் சென்றதும், வேதாகமத்தை வைத்துவிட்டு அப்படியே பாத்ரூம் நோக்கிச் சென்றார். இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்த சகோதரரிடம், 'அண்ணன் உங்கள் உடல் நிலை சரியில்லையே, பிரசங்கத்தைத் தவிர்த்திருக்கலாமே, ஓய்வெடுத்திருக்கலாமே' என்று நான் மெல்ல வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தபோது. நான் வருவேன் என்று எத்தனையோ பேர் ஆவலுடன் வந்திருப்பார்கள்; அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிப்போக எனக்கு மனமில்லை என்றார். ஆத்துமாக்களின் மேல் அவருக்கு இருந்த அக்கரை, என் மனதிலும் அன்று கறையாய் படிந்தது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...