Skip to main content

கறையான அக்கரை

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 13

கறையான அக்கரை

31 March 2014

 

ஜார்க்கண்ட் மாநிலம் அம்பிகாபூர் என்னுமிடத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களின்போது நடைபெற்ற நிகழ்வு இது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்பே முன் ஏற்பாடுகளில் உதவி செய்ய ஜெம்ஸ் மீடியா துறையினருடன் நானும் அம்பிகாபூர் சென்றிருந்தேன். வழியில் பேருந்திலேயே மீன் பொறியல், பிரட் ஆம்லேட், சமையல் என எங்கள் வயிற்றுப் பசியை எங்கள் கரங்களே ஆற்றியது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஸ்டீபன், மற்றும் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஆரோன் அவர்களும் அக்கூட்டங்களுக்கு எங்களுடன் வந்திருந்தனர். சகோதரர்களில் சிலர் தங்குவதற்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று தங்கினர்; எனினும், மைதானத்தில் உள்ள பொருட்களுக்கும், ஜெனரேட்டர் பேருந்திற்கும் பாதுகாப்பு கருதி, நானும், சில சகோதரர்களுமோ மைதானத்திலேயே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தோம்; சமையல் பாத்திரங்களை உடன் கொண்டு சென்றிருந்ததால் விரும்பிய உணவை மைதானத்திலேயே சமைத்துச் சாப்பிட்டு வந்தோம். கூட்டம் தொடங்கும் நாளன்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அம்பிகாபூர் வந்து சேர்ந்தார்; ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை சகோதரரின் வாகனத்தை ஓட்டிவந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சகோதரரை அழைக்கும்படியாக நான் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றிருந்தேன். அறையில் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வயற்றுப் போக்கால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்; அறையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் இருந்த சகோதரர் ராஜதுரை சில மருந்துகளை சகோதரருக்குக் கலக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்று பிரசங்கம் செய்ய முடியுமா? என்ற நிலையில் அவரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம், ஆடையை அணிந்து கூட்டத்திற்குச் செல்ல ஆயத்தமானார் சகோதரர். அவருடன் நானும் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். உடலின் பெலவீனம் எள்ளளவும் வெளிப்படாமல், பெலமாய் வெளிப்பட்டது கர்த்தருடைய வார்த்தை. பிரசங்கம் முடிந்ததும், விரு விரு என மேடையை விட்டு இறங்கினார் சகோதரர்; வாகனத்தில் தங்குமிடத்திற்குப் புறப்பட்டார்; நானும் அவருடன் புறப்பட்டேன். தங்கும் அறைக்குச் சென்றதும், வேதாகமத்தை வைத்துவிட்டு அப்படியே பாத்ரூம் நோக்கிச் சென்றார். இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்த சகோதரரிடம், 'அண்ணன் உங்கள் உடல் நிலை சரியில்லையே, பிரசங்கத்தைத் தவிர்த்திருக்கலாமே, ஓய்வெடுத்திருக்கலாமே' என்று நான் மெல்ல வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தபோது. நான் வருவேன் என்று எத்தனையோ பேர் ஆவலுடன் வந்திருப்பார்கள்; அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிப்போக எனக்கு மனமில்லை என்றார். ஆத்துமாக்களின் மேல் அவருக்கு இருந்த அக்கரை, என் மனதிலும் அன்று கறையாய் படிந்தது.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை