முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கறையான அக்கரை

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 13

கறையான அக்கரை

31 March 2014

 

ஜார்க்கண்ட் மாநிலம் அம்பிகாபூர் என்னுமிடத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களின்போது நடைபெற்ற நிகழ்வு இது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்பே முன் ஏற்பாடுகளில் உதவி செய்ய ஜெம்ஸ் மீடியா துறையினருடன் நானும் அம்பிகாபூர் சென்றிருந்தேன். வழியில் பேருந்திலேயே மீன் பொறியல், பிரட் ஆம்லேட், சமையல் என எங்கள் வயிற்றுப் பசியை எங்கள் கரங்களே ஆற்றியது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஸ்டீபன், மற்றும் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த சகோதரர் ஆரோன் அவர்களும் அக்கூட்டங்களுக்கு எங்களுடன் வந்திருந்தனர். சகோதரர்களில் சிலர் தங்குவதற்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று தங்கினர்; எனினும், மைதானத்தில் உள்ள பொருட்களுக்கும், ஜெனரேட்டர் பேருந்திற்கும் பாதுகாப்பு கருதி, நானும், சில சகோதரர்களுமோ மைதானத்திலேயே கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தோம்; சமையல் பாத்திரங்களை உடன் கொண்டு சென்றிருந்ததால் விரும்பிய உணவை மைதானத்திலேயே சமைத்துச் சாப்பிட்டு வந்தோம். கூட்டம் தொடங்கும் நாளன்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அம்பிகாபூர் வந்து சேர்ந்தார்; ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை சகோதரரின் வாகனத்தை ஓட்டிவந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சகோதரரை அழைக்கும்படியாக நான் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றிருந்தேன். அறையில் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வயற்றுப் போக்கால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்; அறையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் இருந்த சகோதரர் ராஜதுரை சில மருந்துகளை சகோதரருக்குக் கலக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்று பிரசங்கம் செய்ய முடியுமா? என்ற நிலையில் அவரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம், ஆடையை அணிந்து கூட்டத்திற்குச் செல்ல ஆயத்தமானார் சகோதரர். அவருடன் நானும் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். உடலின் பெலவீனம் எள்ளளவும் வெளிப்படாமல், பெலமாய் வெளிப்பட்டது கர்த்தருடைய வார்த்தை. பிரசங்கம் முடிந்ததும், விரு விரு என மேடையை விட்டு இறங்கினார் சகோதரர்; வாகனத்தில் தங்குமிடத்திற்குப் புறப்பட்டார்; நானும் அவருடன் புறப்பட்டேன். தங்கும் அறைக்குச் சென்றதும், வேதாகமத்தை வைத்துவிட்டு அப்படியே பாத்ரூம் நோக்கிச் சென்றார். இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்த சகோதரரிடம், 'அண்ணன் உங்கள் உடல் நிலை சரியில்லையே, பிரசங்கத்தைத் தவிர்த்திருக்கலாமே, ஓய்வெடுத்திருக்கலாமே' என்று நான் மெல்ல வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தபோது. நான் வருவேன் என்று எத்தனையோ பேர் ஆவலுடன் வந்திருப்பார்கள்; அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிப்போக எனக்கு மனமில்லை என்றார். ஆத்துமாக்களின் மேல் அவருக்கு இருந்த அக்கரை, என் மனதிலும் அன்று கறையாய் படிந்தது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...