முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 7


இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

 

ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 2003-ம் ஆண்டு நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொழிற்பயிற்சி மையம் அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாசன் உடன் நானும் இணைந்து அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அரசு அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் சில பொருட்களையும், இயந்திரங்களையும் வாங்க முற்பட்டோம். பொருட்கள் சிலவற்றை வாங்கும்படியாக, பீஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்த சகோதரர் ஜேசுதாசன், அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாயை ஜெம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்று ரயிலில் பாட்னா வந்து சேரும்படி கூறினார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த நான், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்தேன். 'அண்ணன், தொழிற்பயிற்சி மையத்திற்குப் பொருட்கள் வாங்க சகோதரர் ஜேசுதாசன் நேற்றைய தினமே சென்றுவிட்டார், ஒன்றரை லட்சம் ரூபாயை பணமாகக் கொண்டுவரும்படி என்னிடம் கூறினார், இன்று இரவு நான் ரயிலில் பாட்னா புறப்படுகிறேன்' என்று சொன்னேன். இதனைக் கேட்டதும் சகோதரர், 'கிருபா, பணமாகவா கொண்டுபோகப் போகிறீர்கள், D.D எடுத்துக்கொண்டு போகக்கூடாதா? இது தமிழ்நாடு அல்ல பீஹார்' என்று சொன்னார். நானோ, 'பணமாக இருந்தால்தான் வாங்குமிடத்தில் விலையைக் குறைத்துச் கொடுக்க வசதியாயிருக்கும்' என்றேன். ஆனால் சகோதரரோ, 'இத்தனை பெரிய தொகையை ரயிலில் கொண்டு செல்வதை தவிர்ப்பது, நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது, என்றாலும், நீங்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கொண்டு செல்லுங்கள்' என்று மறுப்புடன் கூடிய அனுமதியினைக் கொடுத்தார். பணத்தை வாங்கிய நான் அதனை ஓர் சிறிய பையில் வைத்தவனாக, நள்ளிரவில் டெஹ்ரி ஆன் சோன் ரயில் நிலையத்தில் ரயில் ஏறினேன். நான் முன்பதிவு செய்யாதிருந்த நான் டிக்கட் பரிசோதகரைச் சந்தித்தபோது, அவர் காலியாகக் கிடந்த ஓர் படுக்கையை எனக்குக் கொடுத்தார். பணப் பையைத் தலையணையாக வைத்தவாறு நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அதிகாலை சுமார் 1 மணிக்கு மீண்டும் வந்த டிக்கட் பரிசோதகர் என்னைத் தட்டி எழுப்பினார்; என்னை இறங்கச் சொல்லிவிட்டு, அந்தப் படுக்கையை வேறு ஒரு பெண்ணிற்குக் கொடுத்தார். அருகே காலியாகக் கிடந்த வேறு ஒரு படுக்கையில் நான் படுத்துக்கொண்டேன். அதிகாலை 1.30 மணிக்கு ரயில் பெட்டியினுள் ஓரே சத்தமும், கூச்சலும் உண்டானதைக் கேட்டு கண் விழித்தேன். காரணம் அறிந்தபோது, நான் முன்பு படுத்திருந்த படுக்கையில் இருந்த பெண் வைத்திருந்த பை, பணம் அனைத்தும் திருடப்பட்டிருந்தது. கர்த்தர் சரியான நேரத்தில் என்னை அந்த படுக்கையை விட்டு அகற்றியதினால், ஸ்தாபனத்தின் பணம் காப்பாற்றப்பட்டதை நினைத்து துதித்தேன். அது தீமையல்ல, கர்த்தர் செய்த நன்மை என்பதை அறிந்துகொண்டேன். இதனை முன்னறிந்தவாறு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொன்ன வார்த்தைகள் அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தன. ஆலோசனையை கேட்காததினால், ஆபத்து என்னை உரசிவிட்டுச் சென்றது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...