Skip to main content

இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 7


இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

 

ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 2003-ம் ஆண்டு நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொழிற்பயிற்சி மையம் அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாசன் உடன் நானும் இணைந்து அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அரசு அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் சில பொருட்களையும், இயந்திரங்களையும் வாங்க முற்பட்டோம். பொருட்கள் சிலவற்றை வாங்கும்படியாக, பீஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்த சகோதரர் ஜேசுதாசன், அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாயை ஜெம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்று ரயிலில் பாட்னா வந்து சேரும்படி கூறினார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த நான், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்தேன். 'அண்ணன், தொழிற்பயிற்சி மையத்திற்குப் பொருட்கள் வாங்க சகோதரர் ஜேசுதாசன் நேற்றைய தினமே சென்றுவிட்டார், ஒன்றரை லட்சம் ரூபாயை பணமாகக் கொண்டுவரும்படி என்னிடம் கூறினார், இன்று இரவு நான் ரயிலில் பாட்னா புறப்படுகிறேன்' என்று சொன்னேன். இதனைக் கேட்டதும் சகோதரர், 'கிருபா, பணமாகவா கொண்டுபோகப் போகிறீர்கள், D.D எடுத்துக்கொண்டு போகக்கூடாதா? இது தமிழ்நாடு அல்ல பீஹார்' என்று சொன்னார். நானோ, 'பணமாக இருந்தால்தான் வாங்குமிடத்தில் விலையைக் குறைத்துச் கொடுக்க வசதியாயிருக்கும்' என்றேன். ஆனால் சகோதரரோ, 'இத்தனை பெரிய தொகையை ரயிலில் கொண்டு செல்வதை தவிர்ப்பது, நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது, என்றாலும், நீங்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கொண்டு செல்லுங்கள்' என்று மறுப்புடன் கூடிய அனுமதியினைக் கொடுத்தார். பணத்தை வாங்கிய நான் அதனை ஓர் சிறிய பையில் வைத்தவனாக, நள்ளிரவில் டெஹ்ரி ஆன் சோன் ரயில் நிலையத்தில் ரயில் ஏறினேன். நான் முன்பதிவு செய்யாதிருந்த நான் டிக்கட் பரிசோதகரைச் சந்தித்தபோது, அவர் காலியாகக் கிடந்த ஓர் படுக்கையை எனக்குக் கொடுத்தார். பணப் பையைத் தலையணையாக வைத்தவாறு நான் தூங்கிக்கொண்டிருந்தேன். அதிகாலை சுமார் 1 மணிக்கு மீண்டும் வந்த டிக்கட் பரிசோதகர் என்னைத் தட்டி எழுப்பினார்; என்னை இறங்கச் சொல்லிவிட்டு, அந்தப் படுக்கையை வேறு ஒரு பெண்ணிற்குக் கொடுத்தார். அருகே காலியாகக் கிடந்த வேறு ஒரு படுக்கையில் நான் படுத்துக்கொண்டேன். அதிகாலை 1.30 மணிக்கு ரயில் பெட்டியினுள் ஓரே சத்தமும், கூச்சலும் உண்டானதைக் கேட்டு கண் விழித்தேன். காரணம் அறிந்தபோது, நான் முன்பு படுத்திருந்த படுக்கையில் இருந்த பெண் வைத்திருந்த பை, பணம் அனைத்தும் திருடப்பட்டிருந்தது. கர்த்தர் சரியான நேரத்தில் என்னை அந்த படுக்கையை விட்டு அகற்றியதினால், ஸ்தாபனத்தின் பணம் காப்பாற்றப்பட்டதை நினைத்து துதித்தேன். அது தீமையல்ல, கர்த்தர் செய்த நன்மை என்பதை அறிந்துகொண்டேன். இதனை முன்னறிந்தவாறு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொன்ன வார்த்தைகள் அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தன. ஆலோசனையை கேட்காததினால், ஆபத்து என்னை உரசிவிட்டுச் சென்றது.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை