முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரட்டை ஆசீர்வாதம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 48

இரட்டை ஆசீர்வாதம்


 

வேதத்தின்படியான ஓர் விளக்கம் கேட்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். சகோதரர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார், இரண்டு அல்லது மூன்று வெள்ளைக் காகிதங்கள் அவர் எழுதிக்கொண்டிருக்கும் காகிதத்திற்குக் கீழே இருந்ததை நான் கண்டபோது, 'ஐயோ, இப்பொழுதுதான் எதையோ அண்ணன் எழுதத் தொடங்கியிருக்கிறார், உள்ளே வந்து இடையூறு செய்துவிட்டோமே' என்று தயங்கி நின்றேன். அவரோ, தான் எழுதிக்கொண்டிருந்த அந்த வாக்கியத்தினை மாத்திரம் இடையில் விட்டுவிடாமல் எழுதி முடித்துவிட்டு, பேனோவை வைத்தவராக என்னை நோக்கிப் பார்த்தார். நான் எனது சந்தேகத்தை முன் வைத்தேன், 'அண்ணன், சிலர் தூதர் பாஷை என்று சொல்லப்படுவது பெண் குரலுக்கு ஒப்பாக இருக்கும் என்று சொல்லுகிறார்களே, அது குறித்து வேதத்தின் நிலை என்ன?' என்று கேட்டேன். அப்போது சகோதரர், நான் கேட்டக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதற்கு முன்னர், மற்றும் ஒரு காரியத்தை என்னிடத்தில் பேசத்தொடங்கினார், 'Satan's offsprings' என்று ஒரு ஊழியர் தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். நானோ அதனைக் கண்டதும், அந்த ஊழியரிடத்தில் இது வேதத்தின்படியானது அல்லவே என்று சொன்னேன். சாத்தான் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. தனது எண்ணிக்கையைப் பரப்பிக்கொள்ள அவனால் முடியாது, ஆரம்ப நாட்களில் எந்த எண்ணிக்கையில் அவன் இருந்தானோ அதே எண்ணிக்கையில்தான் இன்றும் இருக்கிறான். மனிதர்களாகிய நமக்கோ பலுகிப் பெருகும் பாக்கியத்தைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்றார். அதனைத் தொடர்ந்து, எனது கேள்விக்கும் விடை தந்தார். 'காபிரியேல்' 'மிகாவேல்' என்றே தூதர்களின் பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன; மேலும் 'தூதன்' என்றும் 'தூதனானவர்' என்றுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் சொல்லும் காரியங்களுக்குத் துணையாக வேதவசனங்கள் நிற்கவேண்டும் என்று சொன்னார். தூதர்களின் பாஷை பெண்குரலைப் போல இருக்கும்; என்று சொல்லுவதற்கு வசனத்தில் இடமில்லை என்று சொன்னார். இந்த சத்தியங்களைக் கேட்டதும், 'அண்ணன், இன்றைக்கு எனக்கு இரட்டை ஆசீர்வாதம்' என்று சொன்னவனாக அறையை விட்டு வெளியே வந்தேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...