முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரட்டை ஆசீர்வாதம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 48

இரட்டை ஆசீர்வாதம்


 

வேதத்தின்படியான ஓர் விளக்கம் கேட்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். சகோதரர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார், இரண்டு அல்லது மூன்று வெள்ளைக் காகிதங்கள் அவர் எழுதிக்கொண்டிருக்கும் காகிதத்திற்குக் கீழே இருந்ததை நான் கண்டபோது, 'ஐயோ, இப்பொழுதுதான் எதையோ அண்ணன் எழுதத் தொடங்கியிருக்கிறார், உள்ளே வந்து இடையூறு செய்துவிட்டோமே' என்று தயங்கி நின்றேன். அவரோ, தான் எழுதிக்கொண்டிருந்த அந்த வாக்கியத்தினை மாத்திரம் இடையில் விட்டுவிடாமல் எழுதி முடித்துவிட்டு, பேனோவை வைத்தவராக என்னை நோக்கிப் பார்த்தார். நான் எனது சந்தேகத்தை முன் வைத்தேன், 'அண்ணன், சிலர் தூதர் பாஷை என்று சொல்லப்படுவது பெண் குரலுக்கு ஒப்பாக இருக்கும் என்று சொல்லுகிறார்களே, அது குறித்து வேதத்தின் நிலை என்ன?' என்று கேட்டேன். அப்போது சகோதரர், நான் கேட்டக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதற்கு முன்னர், மற்றும் ஒரு காரியத்தை என்னிடத்தில் பேசத்தொடங்கினார், 'Satan's offsprings' என்று ஒரு ஊழியர் தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். நானோ அதனைக் கண்டதும், அந்த ஊழியரிடத்தில் இது வேதத்தின்படியானது அல்லவே என்று சொன்னேன். சாத்தான் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. தனது எண்ணிக்கையைப் பரப்பிக்கொள்ள அவனால் முடியாது, ஆரம்ப நாட்களில் எந்த எண்ணிக்கையில் அவன் இருந்தானோ அதே எண்ணிக்கையில்தான் இன்றும் இருக்கிறான். மனிதர்களாகிய நமக்கோ பலுகிப் பெருகும் பாக்கியத்தைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார் என்றார். அதனைத் தொடர்ந்து, எனது கேள்விக்கும் விடை தந்தார். 'காபிரியேல்' 'மிகாவேல்' என்றே தூதர்களின் பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன; மேலும் 'தூதன்' என்றும் 'தூதனானவர்' என்றுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் சொல்லும் காரியங்களுக்குத் துணையாக வேதவசனங்கள் நிற்கவேண்டும் என்று சொன்னார். தூதர்களின் பாஷை பெண்குரலைப் போல இருக்கும்; என்று சொல்லுவதற்கு வசனத்தில் இடமில்லை என்று சொன்னார். இந்த சத்தியங்களைக் கேட்டதும், 'அண்ணன், இன்றைக்கு எனக்கு இரட்டை ஆசீர்வாதம்' என்று சொன்னவனாக அறையை விட்டு வெளியே வந்தேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...