முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமயம் வரட்டும்

 

         சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்             

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 41

சமயம் வரட்டும்


 

2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாளிலிருந்து, அதன் ஊழியப் பணிகளின் முறைகளையும் மற்றும் அவ்வூழியத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த மற்றும் இளைய மிஷனரிகள் பலரையும் சந்தித்து அவர்களின் ஊழிய அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்றபோதிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது வாலிப வயதில், இவ்வூழியத்தைத் தொடங்கி அதற்கு அஸ்திபாரமிட்ட பல சம்பவங்களை அறிந்துகொள்ள நான் அதிகம் ஆவல்கொண்டவனாகவே இருந்தேன். ஜெம்ஸ் வெளியிடும் 'யுத்தசத்தம்' மாதாந்திர பத்திரிக்கையின் பழைய பிரதிகளை அலுவலகத்தில் கிடைக்கும் சமையங்களில் வாசிப்பதை எனது வழக்கமாகக் கொண்டிருந்தபோது, 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தலையங்கத்தின் கீழ் சகோதரர் எழுதிவந்திருந்த கட்டுரைகளை வாசித்து, சகோதரரின் தொடக்க கால ஊழிய அனுபவங்களை அறிந்துகொண்டேன். எனினும், அக்கட்டுரை சில வருடங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது. அத்துடன், 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யுத்தசத்தம் பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ஜெம்ஸ் மிஷனரிகளின் சாட்சிகளையும் வாசித்து அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. ஜெம்ஸ் ஊழியத்திற்குப் புதியவனாயிருந்த நான், ஊழியத்தைப் பற்றி அறிவதிலேயே ஆர்வத்தைச் செலுத்திக்கொண்டிருந்தபடியினால், இரவிலும் எனது சொப்பனமாகவும் அது மாறிவிட்டது. ஒருநாள் வீட்டில் இரவு வீட்டில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, சொப்பனம் ஒன்றைக் கண்டேன்ளூ அதில், சகோதரர் ஒரு புத்தகத்தை எனது கையில் கொண்டுவந்து கொடுத்தார், சகோதரரின் கையிலிருந:து ஆசையோடு அப்புத்தகத்தை வாங்கிய நான், அங்கிருந்து சற்று அகன்று சென்றதும், புத்தகத்தை வாசிககும் ஆவலில் திறந்தேன்ளூ எனக்கோ அதிர்ச்சியே காத்திருந்தது! புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் காலியாக, வெள்ளைக் காகிதங்களாகவே காணப்பட்டன. இப்படி ஒரு புத்தகத்தை ஏன் சகோதரர் எனது கையில் கொடுக்கவேண்டும் என்று எனது சிந்தை சிந்திக்கத் தொடங்க, அது பல நாட்களாக எனது சிந்தையை ஆட்கொள்ள, ஒருமுறை சகோதரர் அலுவலகத்தில் இருந்தபோது, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியபோது, நான் கண்ட சொப்பனத்தை சகோதரரிடம் சொன்னேன்ளூ அத்துடன், ஜெம்ஸ் வரலாற்றினை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரர், 'சமயம் வரட்டும்' என்றார்ளூ அவரது சமயத்திற்கு நான் காத்திருந்தேன்ளூ ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு என்று புரிந்துகொண்டேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...