Skip to main content

சமயம் வரட்டும்

 

         சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்             

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 41

சமயம் வரட்டும்


 

2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாளிலிருந்து, அதன் ஊழியப் பணிகளின் முறைகளையும் மற்றும் அவ்வூழியத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த மற்றும் இளைய மிஷனரிகள் பலரையும் சந்தித்து அவர்களின் ஊழிய அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்றபோதிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது வாலிப வயதில், இவ்வூழியத்தைத் தொடங்கி அதற்கு அஸ்திபாரமிட்ட பல சம்பவங்களை அறிந்துகொள்ள நான் அதிகம் ஆவல்கொண்டவனாகவே இருந்தேன். ஜெம்ஸ் வெளியிடும் 'யுத்தசத்தம்' மாதாந்திர பத்திரிக்கையின் பழைய பிரதிகளை அலுவலகத்தில் கிடைக்கும் சமையங்களில் வாசிப்பதை எனது வழக்கமாகக் கொண்டிருந்தபோது, 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தலையங்கத்தின் கீழ் சகோதரர் எழுதிவந்திருந்த கட்டுரைகளை வாசித்து, சகோதரரின் தொடக்க கால ஊழிய அனுபவங்களை அறிந்துகொண்டேன். எனினும், அக்கட்டுரை சில வருடங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது. அத்துடன், 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யுத்தசத்தம் பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ஜெம்ஸ் மிஷனரிகளின் சாட்சிகளையும் வாசித்து அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. ஜெம்ஸ் ஊழியத்திற்குப் புதியவனாயிருந்த நான், ஊழியத்தைப் பற்றி அறிவதிலேயே ஆர்வத்தைச் செலுத்திக்கொண்டிருந்தபடியினால், இரவிலும் எனது சொப்பனமாகவும் அது மாறிவிட்டது. ஒருநாள் வீட்டில் இரவு வீட்டில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, சொப்பனம் ஒன்றைக் கண்டேன்ளூ அதில், சகோதரர் ஒரு புத்தகத்தை எனது கையில் கொண்டுவந்து கொடுத்தார், சகோதரரின் கையிலிருந:து ஆசையோடு அப்புத்தகத்தை வாங்கிய நான், அங்கிருந்து சற்று அகன்று சென்றதும், புத்தகத்தை வாசிககும் ஆவலில் திறந்தேன்ளூ எனக்கோ அதிர்ச்சியே காத்திருந்தது! புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் காலியாக, வெள்ளைக் காகிதங்களாகவே காணப்பட்டன. இப்படி ஒரு புத்தகத்தை ஏன் சகோதரர் எனது கையில் கொடுக்கவேண்டும் என்று எனது சிந்தை சிந்திக்கத் தொடங்க, அது பல நாட்களாக எனது சிந்தையை ஆட்கொள்ள, ஒருமுறை சகோதரர் அலுவலகத்தில் இருந்தபோது, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியபோது, நான் கண்ட சொப்பனத்தை சகோதரரிடம் சொன்னேன்ளூ அத்துடன், ஜெம்ஸ் வரலாற்றினை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரர், 'சமயம் வரட்டும்' என்றார்ளூ அவரது சமயத்திற்கு நான் காத்திருந்தேன்ளூ ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு என்று புரிந்துகொண்டேன். 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை