முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமயம் வரட்டும்

 

         சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்             

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 41

சமயம் வரட்டும்


 

2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாளிலிருந்து, அதன் ஊழியப் பணிகளின் முறைகளையும் மற்றும் அவ்வூழியத்தில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் மூத்த மற்றும் இளைய மிஷனரிகள் பலரையும் சந்தித்து அவர்களின் ஊழிய அனுபவங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்றபோதிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது வாலிப வயதில், இவ்வூழியத்தைத் தொடங்கி அதற்கு அஸ்திபாரமிட்ட பல சம்பவங்களை அறிந்துகொள்ள நான் அதிகம் ஆவல்கொண்டவனாகவே இருந்தேன். ஜெம்ஸ் வெளியிடும் 'யுத்தசத்தம்' மாதாந்திர பத்திரிக்கையின் பழைய பிரதிகளை அலுவலகத்தில் கிடைக்கும் சமையங்களில் வாசிப்பதை எனது வழக்கமாகக் கொண்டிருந்தபோது, 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தலையங்கத்தின் கீழ் சகோதரர் எழுதிவந்திருந்த கட்டுரைகளை வாசித்து, சகோதரரின் தொடக்க கால ஊழிய அனுபவங்களை அறிந்துகொண்டேன். எனினும், அக்கட்டுரை சில வருடங்கள் மட்டுமே வெளிவந்திருந்தது. அத்துடன், 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட யுத்தசத்தம் பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் ஜெம்ஸ் மிஷனரிகளின் சாட்சிகளையும் வாசித்து அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. ஜெம்ஸ் ஊழியத்திற்குப் புதியவனாயிருந்த நான், ஊழியத்தைப் பற்றி அறிவதிலேயே ஆர்வத்தைச் செலுத்திக்கொண்டிருந்தபடியினால், இரவிலும் எனது சொப்பனமாகவும் அது மாறிவிட்டது. ஒருநாள் வீட்டில் இரவு வீட்டில் நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, சொப்பனம் ஒன்றைக் கண்டேன்ளூ அதில், சகோதரர் ஒரு புத்தகத்தை எனது கையில் கொண்டுவந்து கொடுத்தார், சகோதரரின் கையிலிருந:து ஆசையோடு அப்புத்தகத்தை வாங்கிய நான், அங்கிருந்து சற்று அகன்று சென்றதும், புத்தகத்தை வாசிககும் ஆவலில் திறந்தேன்ளூ எனக்கோ அதிர்ச்சியே காத்திருந்தது! புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் காலியாக, வெள்ளைக் காகிதங்களாகவே காணப்பட்டன. இப்படி ஒரு புத்தகத்தை ஏன் சகோதரர் எனது கையில் கொடுக்கவேண்டும் என்று எனது சிந்தை சிந்திக்கத் தொடங்க, அது பல நாட்களாக எனது சிந்தையை ஆட்கொள்ள, ஒருமுறை சகோதரர் அலுவலகத்தில் இருந்தபோது, அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியபோது, நான் கண்ட சொப்பனத்தை சகோதரரிடம் சொன்னேன்ளூ அத்துடன், ஜெம்ஸ் வரலாற்றினை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த சகோதரர், 'சமயம் வரட்டும்' என்றார்ளூ அவரது சமயத்திற்கு நான் காத்திருந்தேன்ளூ ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு சமையம் உண்டு என்று புரிந்துகொண்டேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...