முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறையல்ல, நிறை

 

     

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 18

குறையல்ல, நிறை

4 April 2014

 

2003-ம் ஆண்டு, ஜெம்ஸ் கருவந்தியா பணித்தளத்தில் இருந்த ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சகோதரர் ஜேசுதாசன் அப்போது தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராக இருந்தார். என்னுடன் அப்பணித்தளத்தில் சகோ.ஜெபக்குமார் தனராஜ், சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன் மற்றும் சகோதரி லீலா ஆகிய மிஷனரிகளும் ஊழியம் செய்துவந்தனர். சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராகவும், சகோ.பெல்வின் ஜெம்ஸ் கோழிப்பண்ணையின் பொறுப்பாளராகவும், சகோ.எட்வட் ராஜன் அப்பணித்தள ஆலயத்தின் போதகராகவும், சகோதரி லீலாவதி மருத்துவப் பணியாளராகவும் ஊழியம் செய்துவந்தனர். இரண்டு வளாகங்களாக இருந்த அப்பணித்தளத்தில், ஒரு வளாகத்தில் சிறுவர் இல்லமும், தொழிற்பயிற்சி மையமும், ஆலயமும் அமைந்திருந்தன. மற்றொரு வளாகத்தில், கோழிப்பண்ணையும் நான்கு வீடுகளும் அமைந்திருந்தன. சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்திலேயே அமைந்திருந்த ஊழியர் இல்லத்தில் தங்கியிருந்தார். மற்றொரு வளாகத்திலிருந்த வீடுகளில் ஒன்றில் நான் தங்கியிருந்தேன், ஒட்டியிருந்த பிற மூன்று வீடுகளில் சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன், சகோதரி லீலாவதி ஆகியோர் தங்கியிருந்தனர். ஜனவரி மாதத்தின் தொடக்க நாட்களில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கருவந்தியா பணித்தள ஊழியங்களைப் பார்வையிடும்படி வருகை தந்திருந்தார். தொழிற்பயிற்சி மையம் மற்றும் சிறுவர் இல்லத்தைப் பார்வையிட்டப் பின்னர், நாங்கள் தங்கியிருந்த வளாகத்திற்கு வந்தார். சகோதரரின் வருகையை அறிந்த நான், குடிப்பதற்கு அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்தவனாக, அருகிலிருந்த சக மிஷனரிகளிடத்தில் கேட்டேன். அவர்களோ, 'அண்ணன், யார் வீட்டிற்குள்ளும் தீடீரென்று வராமாட்டார், எங்கேயும் எதுவும் சாப்பிடமாட்டார்கள்' என்ற பதிலைச் சொன்னபோது, என்னை அது சளைக்கச் செய்தது. எனினும், சில இனிப்புகளை ஒரு தட்டில் ஆயத்தம் செய்து, தண்ணீரையும் உடன் வைத்துக்கொண்டு வீட்டருகே அவர் வரக் காத்திருந்தேன். எங்கள் வீடுகளை நோக்கி சுமார் ஐம்பது அடி தூரத்தில் அவர் வருவதை அறிந்ததும் நாங்கள் நான்குபேரும், வீடுகளுக்கு வெளியே நின்றவர்களாக அவருக்கு வணக்கம் தெரிவித்தோம். சகோதரர் நலம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, நான் எனது வீட்டிற்குள் ஓடி தட்டில் இருந்த இனிப்பையும், தண்ணீரையும் எடுத்துக்கொண்டுவந்து அவருக்கு முன் நீட்டினேன். சிரித்தவாறு அதனை ஏற்றுக்கொண்டார். அடுக்கியிருந்த இனிப்புகளை கொடுக்காதிருந்தால் கொடுக்காதது என் குறையாயிருந்திருக்கும்; அடுக்கியிருந்த இனிப்புகளை எடுக்காதிருந்தால், எடுக்காதது அவர் குறையாயிருந்திருக்கும்; இவ்விரண்டும் நிறைவானது அன்று.


நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.(1கொரி 13:10)


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்

       சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 9 தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்   2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமத...