முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறையல்ல, நிறை

 

     

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 18

குறையல்ல, நிறை

4 April 2014

 

2003-ம் ஆண்டு, ஜெம்ஸ் கருவந்தியா பணித்தளத்தில் இருந்த ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சகோதரர் ஜேசுதாசன் அப்போது தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராக இருந்தார். என்னுடன் அப்பணித்தளத்தில் சகோ.ஜெபக்குமார் தனராஜ், சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன் மற்றும் சகோதரி லீலா ஆகிய மிஷனரிகளும் ஊழியம் செய்துவந்தனர். சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராகவும், சகோ.பெல்வின் ஜெம்ஸ் கோழிப்பண்ணையின் பொறுப்பாளராகவும், சகோ.எட்வட் ராஜன் அப்பணித்தள ஆலயத்தின் போதகராகவும், சகோதரி லீலாவதி மருத்துவப் பணியாளராகவும் ஊழியம் செய்துவந்தனர். இரண்டு வளாகங்களாக இருந்த அப்பணித்தளத்தில், ஒரு வளாகத்தில் சிறுவர் இல்லமும், தொழிற்பயிற்சி மையமும், ஆலயமும் அமைந்திருந்தன. மற்றொரு வளாகத்தில், கோழிப்பண்ணையும் நான்கு வீடுகளும் அமைந்திருந்தன. சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்திலேயே அமைந்திருந்த ஊழியர் இல்லத்தில் தங்கியிருந்தார். மற்றொரு வளாகத்திலிருந்த வீடுகளில் ஒன்றில் நான் தங்கியிருந்தேன், ஒட்டியிருந்த பிற மூன்று வீடுகளில் சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன், சகோதரி லீலாவதி ஆகியோர் தங்கியிருந்தனர். ஜனவரி மாதத்தின் தொடக்க நாட்களில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கருவந்தியா பணித்தள ஊழியங்களைப் பார்வையிடும்படி வருகை தந்திருந்தார். தொழிற்பயிற்சி மையம் மற்றும் சிறுவர் இல்லத்தைப் பார்வையிட்டப் பின்னர், நாங்கள் தங்கியிருந்த வளாகத்திற்கு வந்தார். சகோதரரின் வருகையை அறிந்த நான், குடிப்பதற்கு அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்தவனாக, அருகிலிருந்த சக மிஷனரிகளிடத்தில் கேட்டேன். அவர்களோ, 'அண்ணன், யார் வீட்டிற்குள்ளும் தீடீரென்று வராமாட்டார், எங்கேயும் எதுவும் சாப்பிடமாட்டார்கள்' என்ற பதிலைச் சொன்னபோது, என்னை அது சளைக்கச் செய்தது. எனினும், சில இனிப்புகளை ஒரு தட்டில் ஆயத்தம் செய்து, தண்ணீரையும் உடன் வைத்துக்கொண்டு வீட்டருகே அவர் வரக் காத்திருந்தேன். எங்கள் வீடுகளை நோக்கி சுமார் ஐம்பது அடி தூரத்தில் அவர் வருவதை அறிந்ததும் நாங்கள் நான்குபேரும், வீடுகளுக்கு வெளியே நின்றவர்களாக அவருக்கு வணக்கம் தெரிவித்தோம். சகோதரர் நலம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, நான் எனது வீட்டிற்குள் ஓடி தட்டில் இருந்த இனிப்பையும், தண்ணீரையும் எடுத்துக்கொண்டுவந்து அவருக்கு முன் நீட்டினேன். சிரித்தவாறு அதனை ஏற்றுக்கொண்டார். அடுக்கியிருந்த இனிப்புகளை கொடுக்காதிருந்தால் கொடுக்காதது என் குறையாயிருந்திருக்கும்; அடுக்கியிருந்த இனிப்புகளை எடுக்காதிருந்தால், எடுக்காதது அவர் குறையாயிருந்திருக்கும்; இவ்விரண்டும் நிறைவானது அன்று.


நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.(1கொரி 13:10)


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...