Skip to main content

குறையல்ல, நிறை

 

     

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 18

குறையல்ல, நிறை

4 April 2014

 

2003-ம் ஆண்டு, ஜெம்ஸ் கருவந்தியா பணித்தளத்தில் இருந்த ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சகோதரர் ஜேசுதாசன் அப்போது தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராக இருந்தார். என்னுடன் அப்பணித்தளத்தில் சகோ.ஜெபக்குமார் தனராஜ், சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன் மற்றும் சகோதரி லீலா ஆகிய மிஷனரிகளும் ஊழியம் செய்துவந்தனர். சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளராகவும், சகோ.பெல்வின் ஜெம்ஸ் கோழிப்பண்ணையின் பொறுப்பாளராகவும், சகோ.எட்வட் ராஜன் அப்பணித்தள ஆலயத்தின் போதகராகவும், சகோதரி லீலாவதி மருத்துவப் பணியாளராகவும் ஊழியம் செய்துவந்தனர். இரண்டு வளாகங்களாக இருந்த அப்பணித்தளத்தில், ஒரு வளாகத்தில் சிறுவர் இல்லமும், தொழிற்பயிற்சி மையமும், ஆலயமும் அமைந்திருந்தன. மற்றொரு வளாகத்தில், கோழிப்பண்ணையும் நான்கு வீடுகளும் அமைந்திருந்தன. சகோ.ஜெபக்குமார் தனராஜ் சிறுவர் இல்லத்திலேயே அமைந்திருந்த ஊழியர் இல்லத்தில் தங்கியிருந்தார். மற்றொரு வளாகத்திலிருந்த வீடுகளில் ஒன்றில் நான் தங்கியிருந்தேன், ஒட்டியிருந்த பிற மூன்று வீடுகளில் சகோ.பெல்வின், சகோ.எட்வட் ராஜன், சகோதரி லீலாவதி ஆகியோர் தங்கியிருந்தனர். ஜனவரி மாதத்தின் தொடக்க நாட்களில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கருவந்தியா பணித்தள ஊழியங்களைப் பார்வையிடும்படி வருகை தந்திருந்தார். தொழிற்பயிற்சி மையம் மற்றும் சிறுவர் இல்லத்தைப் பார்வையிட்டப் பின்னர், நாங்கள் தங்கியிருந்த வளாகத்திற்கு வந்தார். சகோதரரின் வருகையை அறிந்த நான், குடிப்பதற்கு அவருக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்தவனாக, அருகிலிருந்த சக மிஷனரிகளிடத்தில் கேட்டேன். அவர்களோ, 'அண்ணன், யார் வீட்டிற்குள்ளும் தீடீரென்று வராமாட்டார், எங்கேயும் எதுவும் சாப்பிடமாட்டார்கள்' என்ற பதிலைச் சொன்னபோது, என்னை அது சளைக்கச் செய்தது. எனினும், சில இனிப்புகளை ஒரு தட்டில் ஆயத்தம் செய்து, தண்ணீரையும் உடன் வைத்துக்கொண்டு வீட்டருகே அவர் வரக் காத்திருந்தேன். எங்கள் வீடுகளை நோக்கி சுமார் ஐம்பது அடி தூரத்தில் அவர் வருவதை அறிந்ததும் நாங்கள் நான்குபேரும், வீடுகளுக்கு வெளியே நின்றவர்களாக அவருக்கு வணக்கம் தெரிவித்தோம். சகோதரர் நலம் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, நான் எனது வீட்டிற்குள் ஓடி தட்டில் இருந்த இனிப்பையும், தண்ணீரையும் எடுத்துக்கொண்டுவந்து அவருக்கு முன் நீட்டினேன். சிரித்தவாறு அதனை ஏற்றுக்கொண்டார். அடுக்கியிருந்த இனிப்புகளை கொடுக்காதிருந்தால் கொடுக்காதது என் குறையாயிருந்திருக்கும்; அடுக்கியிருந்த இனிப்புகளை எடுக்காதிருந்தால், எடுக்காதது அவர் குறையாயிருந்திருக்கும்; இவ்விரண்டும் நிறைவானது அன்று.


நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.(1கொரி 13:10)


www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை