முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பலா மரத்துக்குக் கீழ ஆபீஸ் இல்ல'

 

              

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 27

'பலா மரத்துக்குக் கீழ ஆபீஸ் இல்ல'


 

2011-ம் ஆண்டு, GEMS மிஷனரி ஸ்தாபனத்தின் பொதுக்குழு கூடுகை டெஹ்ராடூனில் நடைபெற்றது. பீஹாரின் ஜெம்ஸ் பணித்தளங்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் குடும்பமாக அக்கூடுகைக்கு வருகை தந்திருந்தனர். ஜெம்ஸ் பள்ளியில் அலுவல்கள் இருந்தபடியினால் மனைவியையும், மகன் ஜான் சாமுவேலையும் நான் விட்டுச் சென்றிருந்தேன். பொதுக்குழு கூடுகை தொடங்கியது, சகோ.அன்பு தேவ செய்தியளித்தார்; தொடர்ந்து, ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் பல்வேறு திட்டங்களைக் குறித்து உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்தனர்.இறுதி நாளன்று, மசௌடி சுற்றுலா ஸ்தலத்தை பார்வையிட பேருந்தில் புறப்பட்டுச் சென்றோம். இமயத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள டெஹ்ராடூனின் இயற்கை அழகு உடலுக்கு இதமாகவும், கண்களுக்கு மிதமாகவும் இருந்தது. அருவி ஒன்றை பார்வையிடச் சென்றிருந்தோம், பார்வையிட்ட பின்னர் எல்லாரும் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கீழே நின்றுகொண்டிருந்தார், அவருக்கே அருகே நான் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, பேருந்தில் இருந்த சகோதரி விஜி சுந்தர்ஜார்ஜ் அவர்கள்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரை நோக்கி, 'அண்ணன், கிருபா இன்னும் பாட்டுப் புத்தகம் அச்சடிக்கவே இல்லை' என்று சொல்ல, இடைமறித்த நான், அண்ணனது அலுவலகம் சிக்காரியாவில் இருக்கிறது, இங்கு இல்லை என்றவாறு, சகோதரரின் முகத்தை நோக்கிப் பார்த்தேன். பதிலாய் அவர் முகத்தில் எஞ்சியது சிரிப்புதான். எனவே, தொடர்ந்து நான், 'அண்ணன், நீங்க ஒருமுறை உங்களது அலுவலகத்தை விட்டு வெளியே நிற்கும்போது, அலுவலக விஷயமாக வந்த ஒருவரிடம், 'பலா மரத்துக்குக் கீழயெல்லாம் என்னை ஆபீஸ் போட வைக்காதீங்கய்யா, ஆபீஸ் வேலைய ஆபீஸ்லேயே முடித்துவிடுங்கள்' (சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரது அலுவலகத்திற்கு வெளியே ஒரு பலா மரம் இருக்கிறது) என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா? அதனை மனதில் கொண்டுதான் இப்படிச் சொன்னேன் என்றேன். அப்பொழுதும் அவர் முகத்தில் மிஞ்சியது சிரிப்புதான். 'ஆனந்தமாயிருக்கும் நேரத்தில் அலுவல்களைச் சற்று அகற்றிவையுங்கள்' என்பதுதான் அவரது சிரிப்பின் பதில் எனப் புரிந்துகொண்டேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...