முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பலா மரத்துக்குக் கீழ ஆபீஸ் இல்ல'

 

              

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 27

'பலா மரத்துக்குக் கீழ ஆபீஸ் இல்ல'


 

2011-ம் ஆண்டு, GEMS மிஷனரி ஸ்தாபனத்தின் பொதுக்குழு கூடுகை டெஹ்ராடூனில் நடைபெற்றது. பீஹாரின் ஜெம்ஸ் பணித்தளங்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் குடும்பமாக அக்கூடுகைக்கு வருகை தந்திருந்தனர். ஜெம்ஸ் பள்ளியில் அலுவல்கள் இருந்தபடியினால் மனைவியையும், மகன் ஜான் சாமுவேலையும் நான் விட்டுச் சென்றிருந்தேன். பொதுக்குழு கூடுகை தொடங்கியது, சகோ.அன்பு தேவ செய்தியளித்தார்; தொடர்ந்து, ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் பல்வேறு திட்டங்களைக் குறித்து உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்தனர்.இறுதி நாளன்று, மசௌடி சுற்றுலா ஸ்தலத்தை பார்வையிட பேருந்தில் புறப்பட்டுச் சென்றோம். இமயத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள டெஹ்ராடூனின் இயற்கை அழகு உடலுக்கு இதமாகவும், கண்களுக்கு மிதமாகவும் இருந்தது. அருவி ஒன்றை பார்வையிடச் சென்றிருந்தோம், பார்வையிட்ட பின்னர் எல்லாரும் பேருந்தில் ஏறிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கீழே நின்றுகொண்டிருந்தார், அவருக்கே அருகே நான் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, பேருந்தில் இருந்த சகோதரி விஜி சுந்தர்ஜார்ஜ் அவர்கள்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரை நோக்கி, 'அண்ணன், கிருபா இன்னும் பாட்டுப் புத்தகம் அச்சடிக்கவே இல்லை' என்று சொல்ல, இடைமறித்த நான், அண்ணனது அலுவலகம் சிக்காரியாவில் இருக்கிறது, இங்கு இல்லை என்றவாறு, சகோதரரின் முகத்தை நோக்கிப் பார்த்தேன். பதிலாய் அவர் முகத்தில் எஞ்சியது சிரிப்புதான். எனவே, தொடர்ந்து நான், 'அண்ணன், நீங்க ஒருமுறை உங்களது அலுவலகத்தை விட்டு வெளியே நிற்கும்போது, அலுவலக விஷயமாக வந்த ஒருவரிடம், 'பலா மரத்துக்குக் கீழயெல்லாம் என்னை ஆபீஸ் போட வைக்காதீங்கய்யா, ஆபீஸ் வேலைய ஆபீஸ்லேயே முடித்துவிடுங்கள்' (சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரது அலுவலகத்திற்கு வெளியே ஒரு பலா மரம் இருக்கிறது) என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா? அதனை மனதில் கொண்டுதான் இப்படிச் சொன்னேன் என்றேன். அப்பொழுதும் அவர் முகத்தில் மிஞ்சியது சிரிப்புதான். 'ஆனந்தமாயிருக்கும் நேரத்தில் அலுவல்களைச் சற்று அகற்றிவையுங்கள்' என்பதுதான் அவரது சிரிப்பின் பதில் எனப் புரிந்துகொண்டேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...