முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்கு பக்க மத்தளம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்  

                   

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 44

நான்கு பக்க மத்தளம்


 

ஜெம்ஸ் ஊழியத்துடன் 2002-ம் ஆண்டு நான் இணைந்தேன். தொடக்க நாட்களில் கருவந்தியா பணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியினைச் செய்துவந்தேன். தொழிற்பயிற்சி மையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கும் சில உதவிகளையும் செய்துகொண்டிருந்தேன். 2004-ம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியா பணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் முழுநேரமாக எனது பணியினைத் தொடரும்படி நான் பணியமர்த்தப்பட்டிருந்தேன். அத்துடன், ஜெம்ஸ் வாகனத் துறையிலும் உதவி செய்யும்படி சகோதரரால் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அந்நாட்களில், சகோதரர் ராஜதுரை ஜெம்ஸ் வானகத் துறையின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்தார். சகோதரர் ராஜதுரை அவர்களுக்கு உதவியாக இருக்கும்படியும், வாகனங்களின் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னைக் கேட்டுக்கொண்டபோது, வாகனங்கள் துறையிலும் சகோதரர் ராஜதுரை அவர்களது தலைமையின் கீழ் சில பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு சகோதரரின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஜெம்ஸ் ஆங்கிலப்பள்ளியின் அப்போதைய முதல்வர் சகோ.ஆஸ்வின், ஜெம்ஸ் வாகனப் பிரிவின் பொறுப்பாளர் சகோ.ராஜதுரை உட்பட மேலும் சிலர் அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பல அலுவல்களைப் பற்றிய காரியங்கள் அப்போது முன் வைக்கப்பட்டு பேசப்பட்டுக்கொண்டிருந்தன. நானோ, கூட்டத்தில் பேசப்படும் அத்தனை காரியங்களையும் உற்றுக் கவனித்தவனாக, அமைதியாகவே அங்கு அமர்ந்திருந்தேன். என்னிடத்தில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு மாத்திரம் உத்தரவு சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னை நோக்கி, 'மத்தளத்துக்கு இரண்டு பக்கம் தான் அடி, கிருபாகரனுக்கு நான்கு பக்கமும் அடி, ஆனால் சத்தம் மட்டும் வருவதே இல்லை' என்று சொன்னார். என்னைப் பற்றி சகோதரர் சொன்ன இந்த வாக்கியத்தின் விளக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்றேன். குறைகள் என்றோ, பிரச்சனைகள் என்றோ நான் சகோதரரை சந்திப்பதில்லை; அவைகளையெல்லாம் எனது வாழ்க்கைக்குள்ளாகவே அடக்கிக்கொள்ளும் மனம் கொண்டிருந்தேன். சகோதரரைச் சந்தித்து தீர்த்துக்கொள்ளவேண்டிய சில காரியங்களுக்கும் எனக்குள்ளேயே அமைதியாயிருந்து தீர்வுகண்டிருக்கின்றேன். இதனைக் குறிப்பிட்டே சகோதரர் அப்படிச் சொன்னார் என்று அப்போது புரிந்துகொண்டேன். அத்தகுதியினை தொடர்ந்து வாழ்க்கையில் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்; எனினும், சில முறை நான் சறுக்கி சத்தமிடும் நிலை உண்டானது. ஒவ்வொரு முறை எனது சத்தத்தை உயர்த்தும்போதும், சகோதரர் என்னைக் குறித்து சொன்ன இந்த வாக்கியத்தை நினைவுகூறுவேன். இதனை எழுதும் இன்று மீண்டும் ஓசை வராத மத்தளமாய் வாழ ஓர் அற்பணிப்பு எனக்குள்ளே உண்டாகிறது. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார் (1பேது 2:23) என்ற வசனத்தினை உறுதியாய் நினைவில் நிறுத்த ஒப்புக்கொடுக்கிறேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...