முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான்கு பக்க மத்தளம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்  

                   

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 44

நான்கு பக்க மத்தளம்


 

ஜெம்ஸ் ஊழியத்துடன் 2002-ம் ஆண்டு நான் இணைந்தேன். தொடக்க நாட்களில் கருவந்தியா பணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணியினைச் செய்துவந்தேன். தொழிற்பயிற்சி மையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கும் சில உதவிகளையும் செய்துகொண்டிருந்தேன். 2004-ம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியா பணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் முழுநேரமாக எனது பணியினைத் தொடரும்படி நான் பணியமர்த்தப்பட்டிருந்தேன். அத்துடன், ஜெம்ஸ் வாகனத் துறையிலும் உதவி செய்யும்படி சகோதரரால் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அந்நாட்களில், சகோதரர் ராஜதுரை ஜெம்ஸ் வானகத் துறையின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்தார். சகோதரர் ராஜதுரை அவர்களுக்கு உதவியாக இருக்கும்படியும், வாகனங்களின் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னைக் கேட்டுக்கொண்டபோது, வாகனங்கள் துறையிலும் சகோதரர் ராஜதுரை அவர்களது தலைமையின் கீழ் சில பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு சகோதரரின் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஜெம்ஸ் ஆங்கிலப்பள்ளியின் அப்போதைய முதல்வர் சகோ.ஆஸ்வின், ஜெம்ஸ் வாகனப் பிரிவின் பொறுப்பாளர் சகோ.ராஜதுரை உட்பட மேலும் சிலர் அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பல அலுவல்களைப் பற்றிய காரியங்கள் அப்போது முன் வைக்கப்பட்டு பேசப்பட்டுக்கொண்டிருந்தன. நானோ, கூட்டத்தில் பேசப்படும் அத்தனை காரியங்களையும் உற்றுக் கவனித்தவனாக, அமைதியாகவே அங்கு அமர்ந்திருந்தேன். என்னிடத்தில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு மாத்திரம் உத்தரவு சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னை நோக்கி, 'மத்தளத்துக்கு இரண்டு பக்கம் தான் அடி, கிருபாகரனுக்கு நான்கு பக்கமும் அடி, ஆனால் சத்தம் மட்டும் வருவதே இல்லை' என்று சொன்னார். என்னைப் பற்றி சகோதரர் சொன்ன இந்த வாக்கியத்தின் விளக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்றேன். குறைகள் என்றோ, பிரச்சனைகள் என்றோ நான் சகோதரரை சந்திப்பதில்லை; அவைகளையெல்லாம் எனது வாழ்க்கைக்குள்ளாகவே அடக்கிக்கொள்ளும் மனம் கொண்டிருந்தேன். சகோதரரைச் சந்தித்து தீர்த்துக்கொள்ளவேண்டிய சில காரியங்களுக்கும் எனக்குள்ளேயே அமைதியாயிருந்து தீர்வுகண்டிருக்கின்றேன். இதனைக் குறிப்பிட்டே சகோதரர் அப்படிச் சொன்னார் என்று அப்போது புரிந்துகொண்டேன். அத்தகுதியினை தொடர்ந்து வாழ்க்கையில் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்; எனினும், சில முறை நான் சறுக்கி சத்தமிடும் நிலை உண்டானது. ஒவ்வொரு முறை எனது சத்தத்தை உயர்த்தும்போதும், சகோதரர் என்னைக் குறித்து சொன்ன இந்த வாக்கியத்தை நினைவுகூறுவேன். இதனை எழுதும் இன்று மீண்டும் ஓசை வராத மத்தளமாய் வாழ ஓர் அற்பணிப்பு எனக்குள்ளே உண்டாகிறது. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார் (1பேது 2:23) என்ற வசனத்தினை உறுதியாய் நினைவில் நிறுத்த ஒப்புக்கொடுக்கிறேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...