முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைவனின் தந்திரம்

 

   

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 15

தலைவனின் தந்திரம்

2 April 2014

 

2009-ம் ஆண்டு பெத்துலா என்னுமிடத்தில் ஜெம்ஸ் ஊழியர்களுக்கான குடும்பக் கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் மனைவி மற்றும் மகனுடன் அக்கூடுகைக்குச் சென்றிருந்தேன். ஆனந்தமான வேளை அது; நல்லதோர் இயற்கையான சூழ்நிலை. பசுமை போர்த்திய பூமி. ஒரு புறம் கூட்டம் கூட்டமாய் மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன; மற்றொருபுறம் மரக்கிளைகளில் குரங்குகள் குதித்து விளையாடிக்கொண்ருந்தன. குரங்குகளின் குதிப்புக்கு ஈடாக சிறுவர்களின் கால்களும் கூட குதியாட்டத்தில் மிதந்தன. குடும்பம் குடும்பமாய் தங்குவதற்கென சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகளில் நாங்கள் தங்கியிருந்தோம். ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளவும், ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற நாட்களாய் அமைந்தன அவை. அது ஒரு பகல் வேளை, கூட்டங்களை முடித்து அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன். அங்கே, அரங்கத்தின் படிக்கட்டுகளில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆசனம் செய்பவரைப்போல இருந்தார், அவருடன் அவரது துணைவியார் திருமதி ரூபலேகா ஜெபக்குமாரும் அமர்ந்திருந்தார். அவரை இந்தக் கோலத்தில் கண்டதும், ஊழியர்கள் பலர் தங்கள் கைகளிலிருந்த கேமராக்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நானும் எனது கேமராவில் அவரைப் பதிவு செய்ய விரைந்து சென்றேன், புகைப்படம் எடுத்தேன். சில நிமிடங்கள் கழித்ததும், கோலத்தைக் கலைத்து, சாதாரணமாக சிரித்தவாறு உட்கார்ந்திருந்தார் சகோதரர். இதனைக் கண்ட நான், எனது மனைவி மற்றும் மகன் ஜான் சாமுவேல் இருவரையும் அழைத்து அவருடன் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் எழுந்ததும், வரிசையாக வந்து நின்றன பல ஊழியர் குடும்பங்கள். ஒவ்வொருவரும் கும்பம் குடும்பமாக சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். புகைப்படம் எடுத்து முடித்தபின்னும் அவரை விட்டு விலகாத பல குடும்பத்தினர்கள், பல்வேறு காரியங்களைக் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர்; அவரும் சளைக்காது பேசிக்கொண்டிருந்தார். தன்னுடன் பணி செய்யும் ஊழியர்களிடம் நெருங்கிச் செல்ல, தலைவர் அவர் கையாண்ட தந்திரமோ அது என அப்போது எனக்குச் சிந்திக்கத் தோன்றிற்று. நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம் (2கொரி 12:16) என்று பவுலும் சொன்னாரல்லவா.






www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...