Skip to main content

தலைவனின் தந்திரம்

 

   

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 15

தலைவனின் தந்திரம்

2 April 2014

 

2009-ம் ஆண்டு பெத்துலா என்னுமிடத்தில் ஜெம்ஸ் ஊழியர்களுக்கான குடும்பக் கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் மனைவி மற்றும் மகனுடன் அக்கூடுகைக்குச் சென்றிருந்தேன். ஆனந்தமான வேளை அது; நல்லதோர் இயற்கையான சூழ்நிலை. பசுமை போர்த்திய பூமி. ஒரு புறம் கூட்டம் கூட்டமாய் மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன; மற்றொருபுறம் மரக்கிளைகளில் குரங்குகள் குதித்து விளையாடிக்கொண்ருந்தன. குரங்குகளின் குதிப்புக்கு ஈடாக சிறுவர்களின் கால்களும் கூட குதியாட்டத்தில் மிதந்தன. குடும்பம் குடும்பமாய் தங்குவதற்கென சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகளில் நாங்கள் தங்கியிருந்தோம். ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளவும், ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற நாட்களாய் அமைந்தன அவை. அது ஒரு பகல் வேளை, கூட்டங்களை முடித்து அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன். அங்கே, அரங்கத்தின் படிக்கட்டுகளில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆசனம் செய்பவரைப்போல இருந்தார், அவருடன் அவரது துணைவியார் திருமதி ரூபலேகா ஜெபக்குமாரும் அமர்ந்திருந்தார். அவரை இந்தக் கோலத்தில் கண்டதும், ஊழியர்கள் பலர் தங்கள் கைகளிலிருந்த கேமராக்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நானும் எனது கேமராவில் அவரைப் பதிவு செய்ய விரைந்து சென்றேன், புகைப்படம் எடுத்தேன். சில நிமிடங்கள் கழித்ததும், கோலத்தைக் கலைத்து, சாதாரணமாக சிரித்தவாறு உட்கார்ந்திருந்தார் சகோதரர். இதனைக் கண்ட நான், எனது மனைவி மற்றும் மகன் ஜான் சாமுவேல் இருவரையும் அழைத்து அவருடன் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் எழுந்ததும், வரிசையாக வந்து நின்றன பல ஊழியர் குடும்பங்கள். ஒவ்வொருவரும் கும்பம் குடும்பமாக சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். புகைப்படம் எடுத்து முடித்தபின்னும் அவரை விட்டு விலகாத பல குடும்பத்தினர்கள், பல்வேறு காரியங்களைக் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர்; அவரும் சளைக்காது பேசிக்கொண்டிருந்தார். தன்னுடன் பணி செய்யும் ஊழியர்களிடம் நெருங்கிச் செல்ல, தலைவர் அவர் கையாண்ட தந்திரமோ அது என அப்போது எனக்குச் சிந்திக்கத் தோன்றிற்று. நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம் (2கொரி 12:16) என்று பவுலும் சொன்னாரல்லவா.






www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை