முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைவனின் தந்திரம்

 

   

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 15

தலைவனின் தந்திரம்

2 April 2014

 

2009-ம் ஆண்டு பெத்துலா என்னுமிடத்தில் ஜெம்ஸ் ஊழியர்களுக்கான குடும்பக் கூடுகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நானும் மனைவி மற்றும் மகனுடன் அக்கூடுகைக்குச் சென்றிருந்தேன். ஆனந்தமான வேளை அது; நல்லதோர் இயற்கையான சூழ்நிலை. பசுமை போர்த்திய பூமி. ஒரு புறம் கூட்டம் கூட்டமாய் மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன; மற்றொருபுறம் மரக்கிளைகளில் குரங்குகள் குதித்து விளையாடிக்கொண்ருந்தன. குரங்குகளின் குதிப்புக்கு ஈடாக சிறுவர்களின் கால்களும் கூட குதியாட்டத்தில் மிதந்தன. குடும்பம் குடும்பமாய் தங்குவதற்கென சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைகளில் நாங்கள் தங்கியிருந்தோம். ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளவும், ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்ற நாட்களாய் அமைந்தன அவை. அது ஒரு பகல் வேளை, கூட்டங்களை முடித்து அறையை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தேன். அங்கே, அரங்கத்தின் படிக்கட்டுகளில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆசனம் செய்பவரைப்போல இருந்தார், அவருடன் அவரது துணைவியார் திருமதி ரூபலேகா ஜெபக்குமாரும் அமர்ந்திருந்தார். அவரை இந்தக் கோலத்தில் கண்டதும், ஊழியர்கள் பலர் தங்கள் கைகளிலிருந்த கேமராக்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். நானும் எனது கேமராவில் அவரைப் பதிவு செய்ய விரைந்து சென்றேன், புகைப்படம் எடுத்தேன். சில நிமிடங்கள் கழித்ததும், கோலத்தைக் கலைத்து, சாதாரணமாக சிரித்தவாறு உட்கார்ந்திருந்தார் சகோதரர். இதனைக் கண்ட நான், எனது மனைவி மற்றும் மகன் ஜான் சாமுவேல் இருவரையும் அழைத்து அவருடன் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நாங்கள் எழுந்ததும், வரிசையாக வந்து நின்றன பல ஊழியர் குடும்பங்கள். ஒவ்வொருவரும் கும்பம் குடும்பமாக சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். புகைப்படம் எடுத்து முடித்தபின்னும் அவரை விட்டு விலகாத பல குடும்பத்தினர்கள், பல்வேறு காரியங்களைக் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர்; அவரும் சளைக்காது பேசிக்கொண்டிருந்தார். தன்னுடன் பணி செய்யும் ஊழியர்களிடம் நெருங்கிச் செல்ல, தலைவர் அவர் கையாண்ட தந்திரமோ அது என அப்போது எனக்குச் சிந்திக்கத் தோன்றிற்று. நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம் (2கொரி 12:16) என்று பவுலும் சொன்னாரல்லவா.






www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...