முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்க ஊரு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 34

எங்க ஊரு


 

ஒருமுறை ஜெம்ஸ் பணித்தளம் ஒன்றில் நடைபெறவிருந்த படைமுயற்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். பயணத்தின்போது வழக்கமாக நான் சகோதரரிடம் பேசிக்கொள்வதைப் போன்றே, அன்றும் சகோதரரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தின் வேலைகள் பலவற்றைத் தாண்டி, அழைக்கப்பட்டவனின் குணாதிசயங்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கிடைத்த வேளை அது. பல்வேறு காரியங்களைப் பேசிக்கொண்டிருந்த சகோதரர், திடீரென்று என்னை நோக்கி: ஒருமுறை ஜெம்ஸ் மிஷனரி ஒருவர் தமிழ்நாட்டிற்குச் சென்று மீண்டும் பீஹார் வந்தார். பணித்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் திரும்பி வந்ததை சொல்லியவாறும், என்னை நலம் விசாரித்தவாறும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று, 'எங்க ஊர்ல நல்ல வெயில்' என்று என்னிடத்தில் சொன்னார். 'எங்க ஊர்ல' என்று அவர் சொன்ன வார்த்தைகள் என்னைப் பாதித்தது. இத்தனை ஆண்டுகளாக பீஹாரில் மிஷனரியாக, சுவிசேஷத்தை அறிவிப்பராக பணிசெய்துகொண்டிருந்தபோதிலும், என்னுடன் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை 'எங்க ஊர்ல, எங்க ஊர்ல' என்று தமிழ்நாட்டில் உள்ள தனது பிறந்த ஊரையே இன்னும் அவர் தனது ஊர் என்று அடையாளப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, எனக்கோ வித்தியாசமாக இருந்தது. நானோ பீஹாரைத்தான் எனது ஊர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளுவேன். கர்த்தர் அழைத்த இடம்தான் எனது சொந்த ஊர். ஒரு மிஷனரி தான் இருக்கும் பணித்தளத்தைத்தான் தனது ஊராகப் பேசப் பழகவேண்டும்' என்று என்னிடத்தில் சொன்னார். பீஹாரில் பணித்தளத்திற்கு பார்வையிடவரும் ஜெபப்பங்காளர்கள் பலர், உங்களுக்கு எந்த ஊர்? என்று கேட்பார்கள்; தூத்துக்குடி என்று பதில் சொல்லுவேன், தூத்துக்குடியில எந்த பக்கம் என்று கேட்பார்கள்; சாயர்புரம் என்று பதில் சொல்லுவேன், சாயர்புரத்தில எந்தப் பக்கம் என்று கேட்கும்போது குறிப்பாக அருகிலுள்ள சிறிய கிராமம் செந்தியம்பலம் என்று பதில சொல்லும் மிஷனரியாகத்தான் நானும் இருக்கிறேன். ஆனால், சகோதரரின் மனநிலைக்கு இன்னும் நான் மனந்திரும்பவில்லை; காரணம், எந்த ஊரென்று என்னிடத்தில் யாராவது கேட்கும்போது, 'பீஹார்' என்று பதில் சொன்னால், அது சரியான உத்தரவல்ல என்றுதான் இன்றும் எனது சிந்தையில் நின்றுகொண்டிருக்கிறது. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்றாரே. அழைக்கப்பட்ட இடமே அழைக்கப்பட்டவனின் இல்லம் என்பது அப்போது என் உள்ளத்தில் பதிந்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...