முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்க ஊரு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 34

எங்க ஊரு


 

ஒருமுறை ஜெம்ஸ் பணித்தளம் ஒன்றில் நடைபெறவிருந்த படைமுயற்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். பயணத்தின்போது வழக்கமாக நான் சகோதரரிடம் பேசிக்கொள்வதைப் போன்றே, அன்றும் சகோதரரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தின் வேலைகள் பலவற்றைத் தாண்டி, அழைக்கப்பட்டவனின் குணாதிசயங்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கிடைத்த வேளை அது. பல்வேறு காரியங்களைப் பேசிக்கொண்டிருந்த சகோதரர், திடீரென்று என்னை நோக்கி: ஒருமுறை ஜெம்ஸ் மிஷனரி ஒருவர் தமிழ்நாட்டிற்குச் சென்று மீண்டும் பீஹார் வந்தார். பணித்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் திரும்பி வந்ததை சொல்லியவாறும், என்னை நலம் விசாரித்தவாறும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று, 'எங்க ஊர்ல நல்ல வெயில்' என்று என்னிடத்தில் சொன்னார். 'எங்க ஊர்ல' என்று அவர் சொன்ன வார்த்தைகள் என்னைப் பாதித்தது. இத்தனை ஆண்டுகளாக பீஹாரில் மிஷனரியாக, சுவிசேஷத்தை அறிவிப்பராக பணிசெய்துகொண்டிருந்தபோதிலும், என்னுடன் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை 'எங்க ஊர்ல, எங்க ஊர்ல' என்று தமிழ்நாட்டில் உள்ள தனது பிறந்த ஊரையே இன்னும் அவர் தனது ஊர் என்று அடையாளப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, எனக்கோ வித்தியாசமாக இருந்தது. நானோ பீஹாரைத்தான் எனது ஊர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளுவேன். கர்த்தர் அழைத்த இடம்தான் எனது சொந்த ஊர். ஒரு மிஷனரி தான் இருக்கும் பணித்தளத்தைத்தான் தனது ஊராகப் பேசப் பழகவேண்டும்' என்று என்னிடத்தில் சொன்னார். பீஹாரில் பணித்தளத்திற்கு பார்வையிடவரும் ஜெபப்பங்காளர்கள் பலர், உங்களுக்கு எந்த ஊர்? என்று கேட்பார்கள்; தூத்துக்குடி என்று பதில் சொல்லுவேன், தூத்துக்குடியில எந்த பக்கம் என்று கேட்பார்கள்; சாயர்புரம் என்று பதில் சொல்லுவேன், சாயர்புரத்தில எந்தப் பக்கம் என்று கேட்கும்போது குறிப்பாக அருகிலுள்ள சிறிய கிராமம் செந்தியம்பலம் என்று பதில சொல்லும் மிஷனரியாகத்தான் நானும் இருக்கிறேன். ஆனால், சகோதரரின் மனநிலைக்கு இன்னும் நான் மனந்திரும்பவில்லை; காரணம், எந்த ஊரென்று என்னிடத்தில் யாராவது கேட்கும்போது, 'பீஹார்' என்று பதில் சொன்னால், அது சரியான உத்தரவல்ல என்றுதான் இன்றும் எனது சிந்தையில் நின்றுகொண்டிருக்கிறது. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்றாரே. அழைக்கப்பட்ட இடமே அழைக்கப்பட்டவனின் இல்லம் என்பது அப்போது என் உள்ளத்தில் பதிந்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...