முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்க ஊரு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 34

எங்க ஊரு


 

ஒருமுறை ஜெம்ஸ் பணித்தளம் ஒன்றில் நடைபெறவிருந்த படைமுயற்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தேன். பயணத்தின்போது வழக்கமாக நான் சகோதரரிடம் பேசிக்கொள்வதைப் போன்றே, அன்றும் சகோதரரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தின் வேலைகள் பலவற்றைத் தாண்டி, அழைக்கப்பட்டவனின் குணாதிசயங்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கிடைத்த வேளை அது. பல்வேறு காரியங்களைப் பேசிக்கொண்டிருந்த சகோதரர், திடீரென்று என்னை நோக்கி: ஒருமுறை ஜெம்ஸ் மிஷனரி ஒருவர் தமிழ்நாட்டிற்குச் சென்று மீண்டும் பீஹார் வந்தார். பணித்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் திரும்பி வந்ததை சொல்லியவாறும், என்னை நலம் விசாரித்தவாறும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று, 'எங்க ஊர்ல நல்ல வெயில்' என்று என்னிடத்தில் சொன்னார். 'எங்க ஊர்ல' என்று அவர் சொன்ன வார்த்தைகள் என்னைப் பாதித்தது. இத்தனை ஆண்டுகளாக பீஹாரில் மிஷனரியாக, சுவிசேஷத்தை அறிவிப்பராக பணிசெய்துகொண்டிருந்தபோதிலும், என்னுடன் பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை 'எங்க ஊர்ல, எங்க ஊர்ல' என்று தமிழ்நாட்டில் உள்ள தனது பிறந்த ஊரையே இன்னும் அவர் தனது ஊர் என்று அடையாளப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, எனக்கோ வித்தியாசமாக இருந்தது. நானோ பீஹாரைத்தான் எனது ஊர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளுவேன். கர்த்தர் அழைத்த இடம்தான் எனது சொந்த ஊர். ஒரு மிஷனரி தான் இருக்கும் பணித்தளத்தைத்தான் தனது ஊராகப் பேசப் பழகவேண்டும்' என்று என்னிடத்தில் சொன்னார். பீஹாரில் பணித்தளத்திற்கு பார்வையிடவரும் ஜெபப்பங்காளர்கள் பலர், உங்களுக்கு எந்த ஊர்? என்று கேட்பார்கள்; தூத்துக்குடி என்று பதில் சொல்லுவேன், தூத்துக்குடியில எந்த பக்கம் என்று கேட்பார்கள்; சாயர்புரம் என்று பதில் சொல்லுவேன், சாயர்புரத்தில எந்தப் பக்கம் என்று கேட்கும்போது குறிப்பாக அருகிலுள்ள சிறிய கிராமம் செந்தியம்பலம் என்று பதில சொல்லும் மிஷனரியாகத்தான் நானும் இருக்கிறேன். ஆனால், சகோதரரின் மனநிலைக்கு இன்னும் நான் மனந்திரும்பவில்லை; காரணம், எந்த ஊரென்று என்னிடத்தில் யாராவது கேட்கும்போது, 'பீஹார்' என்று பதில் சொன்னால், அது சரியான உத்தரவல்ல என்றுதான் இன்றும் எனது சிந்தையில் நின்றுகொண்டிருக்கிறது. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி 12:1) என்றாரே. அழைக்கப்பட்ட இடமே அழைக்கப்பட்டவனின் இல்லம் என்பது அப்போது என் உள்ளத்தில் பதிந்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்

       சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 9 தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்   2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமத...