முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடினமல்ல, களிப்பு

 

        

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 21

கடினமல்ல, களிப்பு

 


ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியில் இணைந்த நாட்களில், 'GLIMPSES' என்ற பெயரில் ஆங்கில செய்தி மலர் ஒன்று வெளியிடப்பட்டுவந்தது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியினையும், ஜெம்ஸ் பணித்தள செய்திகளையும் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வாழும் ஜெபப் பங்காளர்களுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் இச்செய்திமலர் தயாரிக்கப்பட்டுவந்தது. இந்தச் செய்தி மலருக்காக சகோதரருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அந்நாட்களில் எனக்குக் கிடைத்தது. சுமார் 500-க்கும் அதிகமான அந்த செய்திமலர்களை, ஜெம்ஸ் அச்சகத்தில் அச்சடித்து, சகோதரரின் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்போம், ஒவ்வொரு மலரிலும் சகோதரர் கையெழுத்திடுவார், பின்னர் அது ஜெபப்பங்காளர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு முறையும் சகோதரர் அத்தனை மடலிலும் கையெழுத்திடுவதைக் கவனித்த நான், கையெழுத்துக்குப் பதிலாக சகோதரரின் கையெழுத்து அடங்கிய முத்திரை ஒன்றை தயாரிக்கலாமே, இதனால் சகோதரரின் வேலை எளிதாகிவிடுமே என்று எண்ணினேன். ஒருமுறை அவர் கையெழுத்திட்ட 'GLIMPSES' செய்தி மலர்களை எடுக்கும்படியாக அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அவரது மேஜையில் இருந்த அனைத்துப் செய்தி மலர்களிலும் அவர் கையெழுத்திட்டு ஆயத்தமாக வைத்திருந்தார். நான் அதனை கையில் எடுத்தவாறு, என் மனதின் எண்ணத்தை அவரிடம் சொல்லத் தொடங்கினனே;. 'அண்ணன், ஒவ்வொரு முறையும் இத்தனை கையெழுத்து போடுகிறீர்கள், உங்களுக்கு கை வலிக்கும், எனவே, உங்கள் கையெழுத்து அடங்கிய ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கலாம், நானே அதனை பதித்து அனுப்பிவிடுவேன், உங்கள் வேலை எளிதாகிவிடும்; இல்லையென்றால், அச்சடிக்கும்போதே, உங்கள் கையெழுத்தையும் சேர்த்து அச்சடித்துவிடலாம்' என்றேன். எனது வார்த்தைகளைக் கேட்டதும், சற்று நேரம் கூட யோசிக்காமல் சட்டென, 'கிருபா, எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு, இந்த ஊழியத்தைத் தாங்கிக்கொண்டுவருகின்றார்கள், அவர்களுக்கு அனுப்பப்படும் இந்தச் செய்தி மலரில் கையெடுத்து இடுவது எனக்கு கஷ்டமாயிருக்கு என்று நீங்க நினைக்கிறீங்களா?' என்றார். என்னிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் பதிலை அவரே சொல்லிவிடட்டும் என்று நான் அமைதியாயிருந்தேன். 'இந்தச் செய்தி மலரில் நான் கையொப்பம் இடுவது, அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் நான் கடிதம் அனுப்புகின்ற திருப்தியை எனது மனதிற்குக் கொடுக்கிறது' என்றார். ஊழியனின் உண்மை சந்தோஷம் அப்போது எனக்குப் புரிந்தது, அது கடினமல்ல, களிப்பு என்பதும் எனக்குத் தெரிந்தது. ஜெபப் பங்காளர்களுக்கு அவரது மனதில் இருக்கும் இடத்தை அன்று நான் அறிந்துகொண்டேன். பாடாகப் பார்த்த எனக்கு அது பாடமாக மாறியது. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...