முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடினமல்ல, களிப்பு

 

        

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 21

கடினமல்ல, களிப்பு

 


ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியில் இணைந்த நாட்களில், 'GLIMPSES' என்ற பெயரில் ஆங்கில செய்தி மலர் ஒன்று வெளியிடப்பட்டுவந்தது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியினையும், ஜெம்ஸ் பணித்தள செய்திகளையும் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வாழும் ஜெபப் பங்காளர்களுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் இச்செய்திமலர் தயாரிக்கப்பட்டுவந்தது. இந்தச் செய்தி மலருக்காக சகோதரருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அந்நாட்களில் எனக்குக் கிடைத்தது. சுமார் 500-க்கும் அதிகமான அந்த செய்திமலர்களை, ஜெம்ஸ் அச்சகத்தில் அச்சடித்து, சகோதரரின் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்போம், ஒவ்வொரு மலரிலும் சகோதரர் கையெழுத்திடுவார், பின்னர் அது ஜெபப்பங்காளர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு முறையும் சகோதரர் அத்தனை மடலிலும் கையெழுத்திடுவதைக் கவனித்த நான், கையெழுத்துக்குப் பதிலாக சகோதரரின் கையெழுத்து அடங்கிய முத்திரை ஒன்றை தயாரிக்கலாமே, இதனால் சகோதரரின் வேலை எளிதாகிவிடுமே என்று எண்ணினேன். ஒருமுறை அவர் கையெழுத்திட்ட 'GLIMPSES' செய்தி மலர்களை எடுக்கும்படியாக அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அவரது மேஜையில் இருந்த அனைத்துப் செய்தி மலர்களிலும் அவர் கையெழுத்திட்டு ஆயத்தமாக வைத்திருந்தார். நான் அதனை கையில் எடுத்தவாறு, என் மனதின் எண்ணத்தை அவரிடம் சொல்லத் தொடங்கினனே;. 'அண்ணன், ஒவ்வொரு முறையும் இத்தனை கையெழுத்து போடுகிறீர்கள், உங்களுக்கு கை வலிக்கும், எனவே, உங்கள் கையெழுத்து அடங்கிய ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கலாம், நானே அதனை பதித்து அனுப்பிவிடுவேன், உங்கள் வேலை எளிதாகிவிடும்; இல்லையென்றால், அச்சடிக்கும்போதே, உங்கள் கையெழுத்தையும் சேர்த்து அச்சடித்துவிடலாம்' என்றேன். எனது வார்த்தைகளைக் கேட்டதும், சற்று நேரம் கூட யோசிக்காமல் சட்டென, 'கிருபா, எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு, இந்த ஊழியத்தைத் தாங்கிக்கொண்டுவருகின்றார்கள், அவர்களுக்கு அனுப்பப்படும் இந்தச் செய்தி மலரில் கையெடுத்து இடுவது எனக்கு கஷ்டமாயிருக்கு என்று நீங்க நினைக்கிறீங்களா?' என்றார். என்னிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் பதிலை அவரே சொல்லிவிடட்டும் என்று நான் அமைதியாயிருந்தேன். 'இந்தச் செய்தி மலரில் நான் கையொப்பம் இடுவது, அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் நான் கடிதம் அனுப்புகின்ற திருப்தியை எனது மனதிற்குக் கொடுக்கிறது' என்றார். ஊழியனின் உண்மை சந்தோஷம் அப்போது எனக்குப் புரிந்தது, அது கடினமல்ல, களிப்பு என்பதும் எனக்குத் தெரிந்தது. ஜெபப் பங்காளர்களுக்கு அவரது மனதில் இருக்கும் இடத்தை அன்று நான் அறிந்துகொண்டேன். பாடாகப் பார்த்த எனக்கு அது பாடமாக மாறியது. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...