Skip to main content

கடினமல்ல, களிப்பு

 

        

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 21

கடினமல்ல, களிப்பு

 


ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியில் இணைந்த நாட்களில், 'GLIMPSES' என்ற பெயரில் ஆங்கில செய்தி மலர் ஒன்று வெளியிடப்பட்டுவந்தது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியினையும், ஜெம்ஸ் பணித்தள செய்திகளையும் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வாழும் ஜெபப் பங்காளர்களுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் இச்செய்திமலர் தயாரிக்கப்பட்டுவந்தது. இந்தச் செய்தி மலருக்காக சகோதரருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அந்நாட்களில் எனக்குக் கிடைத்தது. சுமார் 500-க்கும் அதிகமான அந்த செய்திமலர்களை, ஜெம்ஸ் அச்சகத்தில் அச்சடித்து, சகோதரரின் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்போம், ஒவ்வொரு மலரிலும் சகோதரர் கையெழுத்திடுவார், பின்னர் அது ஜெபப்பங்காளர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும். ஒவ்வொரு முறையும் சகோதரர் அத்தனை மடலிலும் கையெழுத்திடுவதைக் கவனித்த நான், கையெழுத்துக்குப் பதிலாக சகோதரரின் கையெழுத்து அடங்கிய முத்திரை ஒன்றை தயாரிக்கலாமே, இதனால் சகோதரரின் வேலை எளிதாகிவிடுமே என்று எண்ணினேன். ஒருமுறை அவர் கையெழுத்திட்ட 'GLIMPSES' செய்தி மலர்களை எடுக்கும்படியாக அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அவரது மேஜையில் இருந்த அனைத்துப் செய்தி மலர்களிலும் அவர் கையெழுத்திட்டு ஆயத்தமாக வைத்திருந்தார். நான் அதனை கையில் எடுத்தவாறு, என் மனதின் எண்ணத்தை அவரிடம் சொல்லத் தொடங்கினனே;. 'அண்ணன், ஒவ்வொரு முறையும் இத்தனை கையெழுத்து போடுகிறீர்கள், உங்களுக்கு கை வலிக்கும், எனவே, உங்கள் கையெழுத்து அடங்கிய ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தயாரிக்கலாம், நானே அதனை பதித்து அனுப்பிவிடுவேன், உங்கள் வேலை எளிதாகிவிடும்; இல்லையென்றால், அச்சடிக்கும்போதே, உங்கள் கையெழுத்தையும் சேர்த்து அச்சடித்துவிடலாம்' என்றேன். எனது வார்த்தைகளைக் கேட்டதும், சற்று நேரம் கூட யோசிக்காமல் சட்டென, 'கிருபா, எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு, இந்த ஊழியத்தைத் தாங்கிக்கொண்டுவருகின்றார்கள், அவர்களுக்கு அனுப்பப்படும் இந்தச் செய்தி மலரில் கையெடுத்து இடுவது எனக்கு கஷ்டமாயிருக்கு என்று நீங்க நினைக்கிறீங்களா?' என்றார். என்னிடமிருந்து அவர் எதிர்பார்க்கும் பதிலை அவரே சொல்லிவிடட்டும் என்று நான் அமைதியாயிருந்தேன். 'இந்தச் செய்தி மலரில் நான் கையொப்பம் இடுவது, அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் நான் கடிதம் அனுப்புகின்ற திருப்தியை எனது மனதிற்குக் கொடுக்கிறது' என்றார். ஊழியனின் உண்மை சந்தோஷம் அப்போது எனக்குப் புரிந்தது, அது கடினமல்ல, களிப்பு என்பதும் எனக்குத் தெரிந்தது. ஜெபப் பங்காளர்களுக்கு அவரது மனதில் இருக்கும் இடத்தை அன்று நான் அறிந்துகொண்டேன். பாடாகப் பார்த்த எனக்கு அது பாடமாக மாறியது. 


www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை