முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வியாதியுள்ளவங்கய்யா, தொந்தரவு செய்யாதீங்க

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் 

         

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 45

வியாதியுள்ளவங்கய்யா,

தொந்தரவு செய்யாதீங்க


 

ஒருமுறை, அலுவலகப் பணியின் நிமித்தம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைச் சந்திக்கும்படியாக நானும், ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை அவர்களும் சென்றிருந்தோம். அந்நாட்களில், நான் ஜெம்ஸ் வாகனத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்; அத்துறையின் பொறுப்பாளராக சகோதரர் ராஜதுரை பணிசெய்துகொண்டிருந்தார். சகோதரரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சில அலுவலகக் காரியங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சில விஷயங்களில் பாட்னாவில் இருந்த ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை தொடர்புகொள்ளவேண்டிய சூழ்நிலை உண்டானது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையினிடம், சகோதரர் E.C.ஜான்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி, தனது நேர்முக உதவியாளர் சகோதரி ஷீலா டத்தியிடம் சொல்லச் சொன்னார். சகோதரி ஷீலா டத்தி பலமுறை E.C.ஜான்சன் அவர்களுக்குப் போன் செய்துகொண்டேயிருந்தார், ஆனால், வீட்டிலோ தொலைபேசியினை யாரும் எடுக்கவில்லை. 'அண்ணன், E.C.ஜான்சன் வீட்ல யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை' என்ற தகவலை சகோதரர் ராஜதுரை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அலுவலகக் காரியங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். இடையில், மீண்டும் சகோதரி ஷீலா டத்தி அவரைத் தொடர்பு கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த ஒருவர் தொலைபேசியினை எடுத்தவாறு, 'அண்ணன், தூங்கிக்கொண்டிருக்கிறார்' என்று பதில் சொன்னதாகச் சகோதரி சொன்னார். இதனைக் கேட்ட சகோதரர் ராஜதுரை 'அகஸ்டின் அண்ணன் கூப்பிடுகிறார்னு சொல்லுங்க' என்று சொல்லியவாறு சகோதரரின் அறையிலிருந்து வெளியே சென்று சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைக்கச் சென்றார். அப்போது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையை நோக்கி: 'அவங்கல்லாம் வியாதியுள்ளவங்கய்யா, தூங்கட்டும், தொந்தரவு செய்யாதீங்க' என்றார். தான் அழைத்தும் அவர் எழும்பவில்லையே என்ற கோபம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் முகத்தில் காணப்படாததை அப்போது நான் கண்டேன். அவசரமான காரியமாயிருந்தபோதிலும், வியாதியுள்ளவர்கள் மேல் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கு இருந்த கரிசனை அப்போது எனக்குத் தெரிந்தது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...