முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வியாதியுள்ளவங்கய்யா, தொந்தரவு செய்யாதீங்க

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் 

         

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 45

வியாதியுள்ளவங்கய்யா,

தொந்தரவு செய்யாதீங்க


 

ஒருமுறை, அலுவலகப் பணியின் நிமித்தம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைச் சந்திக்கும்படியாக நானும், ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை அவர்களும் சென்றிருந்தோம். அந்நாட்களில், நான் ஜெம்ஸ் வாகனத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்; அத்துறையின் பொறுப்பாளராக சகோதரர் ராஜதுரை பணிசெய்துகொண்டிருந்தார். சகோதரரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சில அலுவலகக் காரியங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சில விஷயங்களில் பாட்னாவில் இருந்த ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை தொடர்புகொள்ளவேண்டிய சூழ்நிலை உண்டானது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையினிடம், சகோதரர் E.C.ஜான்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி, தனது நேர்முக உதவியாளர் சகோதரி ஷீலா டத்தியிடம் சொல்லச் சொன்னார். சகோதரி ஷீலா டத்தி பலமுறை E.C.ஜான்சன் அவர்களுக்குப் போன் செய்துகொண்டேயிருந்தார், ஆனால், வீட்டிலோ தொலைபேசியினை யாரும் எடுக்கவில்லை. 'அண்ணன், E.C.ஜான்சன் வீட்ல யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை' என்ற தகவலை சகோதரர் ராஜதுரை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அலுவலகக் காரியங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். இடையில், மீண்டும் சகோதரி ஷீலா டத்தி அவரைத் தொடர்பு கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த ஒருவர் தொலைபேசியினை எடுத்தவாறு, 'அண்ணன், தூங்கிக்கொண்டிருக்கிறார்' என்று பதில் சொன்னதாகச் சகோதரி சொன்னார். இதனைக் கேட்ட சகோதரர் ராஜதுரை 'அகஸ்டின் அண்ணன் கூப்பிடுகிறார்னு சொல்லுங்க' என்று சொல்லியவாறு சகோதரரின் அறையிலிருந்து வெளியே சென்று சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைக்கச் சென்றார். அப்போது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையை நோக்கி: 'அவங்கல்லாம் வியாதியுள்ளவங்கய்யா, தூங்கட்டும், தொந்தரவு செய்யாதீங்க' என்றார். தான் அழைத்தும் அவர் எழும்பவில்லையே என்ற கோபம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் முகத்தில் காணப்படாததை அப்போது நான் கண்டேன். அவசரமான காரியமாயிருந்தபோதிலும், வியாதியுள்ளவர்கள் மேல் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கு இருந்த கரிசனை அப்போது எனக்குத் தெரிந்தது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...