Skip to main content

வியாதியுள்ளவங்கய்யா, தொந்தரவு செய்யாதீங்க

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் 

         

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 45

வியாதியுள்ளவங்கய்யா,

தொந்தரவு செய்யாதீங்க


 

ஒருமுறை, அலுவலகப் பணியின் நிமித்தம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களைச் சந்திக்கும்படியாக நானும், ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜதுரை அவர்களும் சென்றிருந்தோம். அந்நாட்களில், நான் ஜெம்ஸ் வாகனத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்; அத்துறையின் பொறுப்பாளராக சகோதரர் ராஜதுரை பணிசெய்துகொண்டிருந்தார். சகோதரரின் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சில அலுவலகக் காரியங்களை நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சில விஷயங்களில் பாட்னாவில் இருந்த ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை தொடர்புகொள்ளவேண்டிய சூழ்நிலை உண்டானது. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையினிடம், சகோதரர் E.C.ஜான்சனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி, தனது நேர்முக உதவியாளர் சகோதரி ஷீலா டத்தியிடம் சொல்லச் சொன்னார். சகோதரி ஷீலா டத்தி பலமுறை E.C.ஜான்சன் அவர்களுக்குப் போன் செய்துகொண்டேயிருந்தார், ஆனால், வீட்டிலோ தொலைபேசியினை யாரும் எடுக்கவில்லை. 'அண்ணன், E.C.ஜான்சன் வீட்ல யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை' என்ற தகவலை சகோதரர் ராஜதுரை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அலுவலகக் காரியங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். இடையில், மீண்டும் சகோதரி ஷீலா டத்தி அவரைத் தொடர்பு கொண்ட போது, அவரது வீட்டில் இருந்த ஒருவர் தொலைபேசியினை எடுத்தவாறு, 'அண்ணன், தூங்கிக்கொண்டிருக்கிறார்' என்று பதில் சொன்னதாகச் சகோதரி சொன்னார். இதனைக் கேட்ட சகோதரர் ராஜதுரை 'அகஸ்டின் அண்ணன் கூப்பிடுகிறார்னு சொல்லுங்க' என்று சொல்லியவாறு சகோதரரின் அறையிலிருந்து வெளியே சென்று சகோதரர் E.C.ஜான்சன் அவர்களை மீண்டும் தொலைபேசியில் அழைக்கச் சென்றார். அப்போது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சகோதரர் ராஜதுரையை நோக்கி: 'அவங்கல்லாம் வியாதியுள்ளவங்கய்யா, தூங்கட்டும், தொந்தரவு செய்யாதீங்க' என்றார். தான் அழைத்தும் அவர் எழும்பவில்லையே என்ற கோபம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் முகத்தில் காணப்படாததை அப்போது நான் கண்டேன். அவசரமான காரியமாயிருந்தபோதிலும், வியாதியுள்ளவர்கள் மேல் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருக்கு இருந்த கரிசனை அப்போது எனக்குத் தெரிந்தது.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை