Skip to main content

சுஜி என்றால் ரவ்வை

 

     

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 17

சுஜி என்றால் ரவ்வை

4 April 2014

 

நான் பீஹாருக்கு வந்திருந்த தொடக்க நாட்கள் அவை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை; பீஹார், சிக்கரியாவிலுள்ள ஜெம்ஸ் ஆலயத்தில் ஆராதனை காலை 8 மணிக்குத் தொடங்கியது. நானும் குடும்பத்துடன் ஆராதனைக்குச் சென்றிருந்தேன். பாடல்வேளை முடிந்து, ஆராதனை வேளையும் முடிவுற்றது; காணிக்கை வேளையைத் தொடர்ந்து, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அளிக்கவிருக்கும் செய்திக்குக் காத்திருந்தேன் நான். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியினைப் பகிர்ந்துகொள்ள ஆயத்தமானார். சிக்கரியாவில் ஹிந்தி மொழி பேசுவோருடன், தமிழ் மொழி பேசுவோரும் அதிகம் இருப்பதினால், அங்கு நடைபெறும் எல்லா கூட்டங்களிலும் தமிழில் வழங்கப்படும் செய்திகள் ஹிந்தியிலும், அப்படியே ஹிந்தியில் வழங்கப்படும் செய்திகள் தமிழிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்படும். அந்த ஞாயிற்றுக் கிழமையில், வழக்கமாக சகோதரருக்கு மொழிபெயர்ப்பு செய்யும் சகோதரர் பாபு ராஜரீகன் இல்லாததினால், யாரைக் கூப்பிடலாம் என்று தேடிய சகோதரரின் கண்கள் என்னைப் பிடித்தது. 'கிருபா வாங்க' என்று மேடையிலிருந்து என்னை அழைத்தார் சகோதரர். எனக்கோ நடுக்கம் தலைக்கு ஏறியது. இப்போதுதான் பீஹாருக்கு வந்திருக்கிறேன், ஹிந்தி மொழியை இன்னும் சரிவரக் கற்றுக்கொள்ளவில்லையே, இந்த நிலையில் எந்த நம்பிக்கையில் சகோதரர் என்னை அழைக்கிறார் என்று எனக்குள்ளே கேள்வி எழும்பியபோதிலும், இருந்த இடத்திலிருந்து எழும்பி மேடைக்குச் சென்றேன். 'அண்ணன்.... நான் எப்படி மொழிபெயர்க்கப்போகிறேனோ....' என்று சந்தேகத்தில் முன் ஜாமீன் வாங்கிக்கொண்டேன். அதற்கு பிரசங்க பீடத்திலேயே அவர் கொடுத்த பதில், 'தண்ணிக்குள்ள தள்ளிவிட்டாத்தான் நீச்சல் கத்துக்க முடியும்' என்பதே. சகோதரர் ஹிந்தி மொழியில் பிரசங்கத்தைத் தொடங்கினார், எனக்கோ வார்த்தைகள் நடுங்கியது. அகத்தில் ஏற்படும் நடுக்கத்தை முகத்தில் காட்டாதவாறு மொழிபெயர்ப்பைத் தொடர்ந்தேன். தீடீரென்று 'சுஜி' என்றார் சகோதரர், சிக்கிக்கொண்டேன். அவரது முகத்தைப் பார்த்தேன், அவர் என்முகத்தைப் பார்த்தவாறு, 'நீர் வீட்ல சரியா சமைக்கலன்னு நினைக்கிறேன், அதனாலதான் சுஜி தெரியல, 'சுஜி' என்றால் ரவ்வை என்று மேடையிலேயே கற்றுக்கொடுத்தார். குழுமியிருந்த மக்கள் மக்கள் முகத்தில் என் நிமித்தம் உண்டான சிரிப்பைக் கண்டு நானும் சிரித்துக்கொண்டேன். பிரசங்கம் தொடர்ந்தது, சற்றுநேரத்தில் 'சந்த்' என்றார், நான் 'சந்ததி' என்று மொழிபெயர்த்தேன்; அவரோ சந்த் என்றால் சந்ததி இல்லை நீதிமான் என்று சொன்னார். பிரசங்கம் சீக்கிரத்தில் முடிந்துவிடாதா என்று தொடக்கத்தில் பயந்த என்னை அவரே உதவிக்கரம் நீட்டி இறுதிவரை இழுத்துச் சென்றார். வளரும் தலைமுறையை உருவாக்க, வேண்டும் இத்தகைய தலைவர்கள்.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை