முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்லாயிருக்கீங்களா?

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 40

நல்லாயிருக்கீங்களா?


 

நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இருந்ததினால், வாரம் ஒருமுறை சகோதரர் பிரபாகர் அவர்களிடம் வந்து வயலினையும் கற்றுக்கொண்டிருந்தேன். இருபது கி.மீட்டர் வரவேண்டியதிருந்தாலும், இசையின் மேல் பிரியமுள்ள எனக்கு அது கடினமாய்த் தோன்றவில்லை. எந்த ஒரு ஆயத்தமுமின்றி, எழுதிவைத்திராமல் நானாக இயற்றிப் பாடிய ஓர் கீர்த்தனைப் பாடலை சகோதரரிடம் பாடியபோது, 'இது, யூதர்களுடைய ஆராதனை முறைகளில் ஒன்று' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார். இப்படியாக, பல சகோதரர்களைச் சந்தித்து என்னை நானே உற்சாகப்படுத்திக்கொண்டபோதிலும், ஆவிக்குரிய ஆலோசனைக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரை அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்திக்கும் வழக்கம் எனக்கு இல்லாதிருந்தது; 'வணக்கம்' என்ற வார்த்தையோடுதான் அவரிடத்தில் நான் விடைபெற்றுக்கொண்டிருந்தேன். 2003-ம் ஆண்டு, ஒருமுறை அலுவலகப் பணியின் நிமித்தம் ஸ்கூட்டரில் தனியாக சிக்காரியா வந்திருந்தேன். அலுவலகத்தின் முன் பகுதியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, தலைமை அலுவலகத்தில் செய்யவேண்டிய பணிகளைச் செய்து முடித்துவிட்டு வளாகத்தின் பிரதான வாசல் அருகே நின்றுகொண்டிருந்தபோது, தற்செயலாக அங்கு வந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் என்னைக் கண்டார்; 'தம்பி, நல்லாயிருக்கீங்களா?' என்று கேட்டார். நானோ, நல்லாயிருக்கிறேன் என்ற வார்த்தையைக் கூட பதிலாகக் கூறாமல், சிரித்தவாறு, சொற்களையெல்லாம் தொண்டைக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அப்போது, எனக்கு அருகே நின்றுகொண்டிருந்த மற்றொரு ஜெம்ஸ் ஊழியர் என்னிடத்தில், 'நல்லாயிருக்கீங்களா?' என்று எல்லாரிடத்திலும் அண்ணன் கேட்டுக்கொண்டேயிருப்பதில்லை, அவருக்கு தோன்றுகிற நபர்களிடத்தில்தான் கேட்பார் என்று சொன்னார். 'நல்லாயிருக்கீங்களா?' என்று சகோதரர் கேட்டால், அதற்குள் அர்த்தங்கள் பல பொதிந்திருக்கும் என்றார் அவர். அர்த்தங்கள் எதுவாயிருந்தாலும், 'நல்லாயிருக்கீங்களா?' என்று என்னைப்பார்த்து அவர் பேசிய வார்த்தையின் சத்தமே அன்று எனக்குப் போதுமானதாயிருந்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...