Skip to main content

கொடுத்ததைக் கொட்டிவிடு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 24

கொடுத்ததைக் கொட்டிவிடு


 

செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், அனுபவங்கள், ஆலோசனைகள் மற்றும் கேள்வி பதில்கள் போன்றவைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டுவந்த நான், அதனை முழு உலகத்தினருக்கும் கொண்டுசெல்வது எப்படி என்ற கேள்வியுடன் ஒரு நாள் காலையில் அமர்ந்திருந்தேன்? அப்போது YOUTHLINE (தற்போது www.sinegithan.in என்ற பெயரில் இணையதளம் மாற்றப்பட்டுள்ளது) என்ற வார்த்தை எனது நினைவில் வந்தது. அதனைத் தொடந்து youthline என்ற பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் என் மனதில் உண்டானது. அடுத்தநாள் காலையில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரும்படியாக, சகோதரர் ராஜதுரை அவர்களுடன் வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோனிலிருந்து வாரனாசி நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, ஹைதராபாத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணிசெய்யும் சகோதரர் சுதர்சன்பால் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, youthline என்ற பெயரில் இணைதளம் உருவாக்குவதைக் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். youthline என்ற பெயர் கிடைக்கவில்லை எனவே வேறொரு பெயரை வைக்கலாமா? என்று சகோதரன் கேட்டபோது, இல்லை, youthline என்ற பெயர்தான் வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன் நான். எப்படியோ, நாங்கள் வாரனாசி சென்று சேருவதற்கு முன்னர், youthline.in என்ற இணையதளத்தை வாங்க கர்த்தர் கிருபை செய்தார். அதனைத் தொடர்ந்து, ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜேஷ் டத்தி அவர்களிடம் ஆலோசனை கேட்டபோது, அவருடைய வார்த்தைகளும் என்னை உற்சாகப்படுத்துவதாகவே அமைந்தன. இணையதளத்தைத் தொடங்கி தொடர்ந்து அதில் எழுதிக்கொண்டுவந்தேன். நான் செய்யும் இக்காரியம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுக்கும் தெரியும்படியாக, ஒரு நாள் சகோதரரைச் சந்தித்து youthline.in இணையதளத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். இணையதளத்தில் நான் எழுதிய சில செய்திகளையும் சகோதரரிடத்தில் கொடுத்தேன். அப்போது சகோதரர், நல்லது, தேவன் உங்களுக்குக் கொடுத்ததை உங்களோடு அடக்கிவைத்துவிடாமல் உலக்திற்குக் கொட்டிவிடுகிறீர்கள்; இதுதான் நாம் செய்யவேண்டியது என்றார். சகோதரரின் இந்த வார்த்தை என்னை மேலும் செயல்படும்படி உந்தியது. உடனிருப்போருக்குக் கொடுக்கப்பட்ட கிருபைகளை அறிந்து, உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை உதிர்க்கும் தலைவர்களாலேயே, தலைமுறையினர் தடங்களை உருவாக்குகின்றனர்.

உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். (2தீமோ 1:6)

எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். (லூக். 12:48) 


www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை