முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொடுத்ததைக் கொட்டிவிடு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 24

கொடுத்ததைக் கொட்டிவிடு


 

செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், அனுபவங்கள், ஆலோசனைகள் மற்றும் கேள்வி பதில்கள் போன்றவைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டுவந்த நான், அதனை முழு உலகத்தினருக்கும் கொண்டுசெல்வது எப்படி என்ற கேள்வியுடன் ஒரு நாள் காலையில் அமர்ந்திருந்தேன்? அப்போது YOUTHLINE (தற்போது www.sinegithan.in என்ற பெயரில் இணையதளம் மாற்றப்பட்டுள்ளது) என்ற வார்த்தை எனது நினைவில் வந்தது. அதனைத் தொடந்து youthline என்ற பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் என் மனதில் உண்டானது. அடுத்தநாள் காலையில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரும்படியாக, சகோதரர் ராஜதுரை அவர்களுடன் வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோனிலிருந்து வாரனாசி நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, ஹைதராபாத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணிசெய்யும் சகோதரர் சுதர்சன்பால் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, youthline என்ற பெயரில் இணைதளம் உருவாக்குவதைக் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன். youthline என்ற பெயர் கிடைக்கவில்லை எனவே வேறொரு பெயரை வைக்கலாமா? என்று சகோதரன் கேட்டபோது, இல்லை, youthline என்ற பெயர்தான் வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன் நான். எப்படியோ, நாங்கள் வாரனாசி சென்று சேருவதற்கு முன்னர், youthline.in என்ற இணையதளத்தை வாங்க கர்த்தர் கிருபை செய்தார். அதனைத் தொடர்ந்து, ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ராஜேஷ் டத்தி அவர்களிடம் ஆலோசனை கேட்டபோது, அவருடைய வார்த்தைகளும் என்னை உற்சாகப்படுத்துவதாகவே அமைந்தன. இணையதளத்தைத் தொடங்கி தொடர்ந்து அதில் எழுதிக்கொண்டுவந்தேன். நான் செய்யும் இக்காரியம் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களுக்கும் தெரியும்படியாக, ஒரு நாள் சகோதரரைச் சந்தித்து youthline.in இணையதளத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். இணையதளத்தில் நான் எழுதிய சில செய்திகளையும் சகோதரரிடத்தில் கொடுத்தேன். அப்போது சகோதரர், நல்லது, தேவன் உங்களுக்குக் கொடுத்ததை உங்களோடு அடக்கிவைத்துவிடாமல் உலக்திற்குக் கொட்டிவிடுகிறீர்கள்; இதுதான் நாம் செய்யவேண்டியது என்றார். சகோதரரின் இந்த வார்த்தை என்னை மேலும் செயல்படும்படி உந்தியது. உடனிருப்போருக்குக் கொடுக்கப்பட்ட கிருபைகளை அறிந்து, உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை உதிர்க்கும் தலைவர்களாலேயே, தலைமுறையினர் தடங்களை உருவாக்குகின்றனர்.

உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். (2தீமோ 1:6)

எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும். (லூக். 12:48) 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...