Skip to main content

அழைப்பின் இரகசியம்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 8


அழைப்பின் இரகசியம்

 

2005-ம் ஆண்டு, பீஹார் ஜெம்ஸ் வளாகத்தின் வழியாகச் செல்லும் வெளிப்புறச் சாலையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் நின்றுகொண்டிருந்தபோது, சமூக விரோதிகள் உண்டாக்கிய கலவரத்தில் விரோதிகள் அவரை முகத்தில் தாக்கினார்கள்; மூக்கிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டிருந்தது. சட்டை எங்கும் இரத்தக் கறையுடன் நின்றுகொண்டிருந்தார் சகோதரர். ஒருபுறம், தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கேட்டுக்கொண்டிருந்தனர், இரத்தம் படிந்த அவரது ஆடைகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மறுபுறம், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வாசலுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது, ஜெம்ஸ் அலுவலகத்தின் முன் இருந்த பலா மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் அமர்ந்து சுற்றி நின்ற ஜெம்ஸ் உடன் ஊழியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் சகோதரர்; அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன். தன்னைச் சுற்றிலும் பயந்தவாறு நின்றுகொண்டிருந்த பல ஊழியர்களின் காதுகளை நோக்கி அவரது வாயின் வார்த்தைகள் வாழ்வின் பாடங்களாகப் பாய்ந்துகொண்டிருந்தன; கூட்டத்தில் அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். எதிரியின் தாக்குதல்கள் சரீரத்தைக் காயப்படுத்தலாம், ஆனால் நமது அழைப்பை நிலை குலையச் செய்துவிடக்கூடாது என்று ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று, தன்னைத் தாக்கியவர்களை மனதில் வைத்தவாறு, 'அவங்க என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும்; ஈசாக்கைப் போல பலிபீடத்தில் வைக்கப்பட்டு திரும்ப எடுக்கப்பட அல்ல, பலியாக மாறிவிடவே நான் பீஹாருக்கு வந்தேன்' என்றார். சகோதரரின் காயங்களைக் கண்டு மனதில் நொந்துபோன நெஞ்சோடு நின்றுகொண்டிருந்த பலருக்கு, அவரது வாயிலிருந்து புறப்பட்ட இந்த வாக்கியம், மருந்தானது மாத்திரமல்ல, காயங்கள் நம்மை என்ன செய்யும் என்று தங்களைப் பெலப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நெஞ்சதனை மரத்துப்போகச் செய்தது. என்னுடைய இதயத்திலோ, இந்த வார்த்தைகள் பசுமரத்தில் ஆணியால் எழுதப்பட்டதைப் போல பொறிக்கப்பட்டது. ஆறுதல் பெறும் நிலையிருந்த அவர், மற்றவர்களுக்கு ஆறுதலாகிப்போனது அழைத்தவரின் பெலத்தால் அவருக்குள் இருந்த அழைப்பின் இரகசியம்.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை