முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழைப்பின் இரகசியம்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 8


அழைப்பின் இரகசியம்

 

2005-ம் ஆண்டு, பீஹார் ஜெம்ஸ் வளாகத்தின் வழியாகச் செல்லும் வெளிப்புறச் சாலையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் நின்றுகொண்டிருந்தபோது, சமூக விரோதிகள் உண்டாக்கிய கலவரத்தில் விரோதிகள் அவரை முகத்தில் தாக்கினார்கள்; மூக்கிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டிருந்தது. சட்டை எங்கும் இரத்தக் கறையுடன் நின்றுகொண்டிருந்தார் சகோதரர். ஒருபுறம், தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கேட்டுக்கொண்டிருந்தனர், இரத்தம் படிந்த அவரது ஆடைகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மறுபுறம், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வாசலுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது, ஜெம்ஸ் அலுவலகத்தின் முன் இருந்த பலா மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் அமர்ந்து சுற்றி நின்ற ஜெம்ஸ் உடன் ஊழியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் சகோதரர்; அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன். தன்னைச் சுற்றிலும் பயந்தவாறு நின்றுகொண்டிருந்த பல ஊழியர்களின் காதுகளை நோக்கி அவரது வாயின் வார்த்தைகள் வாழ்வின் பாடங்களாகப் பாய்ந்துகொண்டிருந்தன; கூட்டத்தில் அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். எதிரியின் தாக்குதல்கள் சரீரத்தைக் காயப்படுத்தலாம், ஆனால் நமது அழைப்பை நிலை குலையச் செய்துவிடக்கூடாது என்று ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று, தன்னைத் தாக்கியவர்களை மனதில் வைத்தவாறு, 'அவங்க என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும்; ஈசாக்கைப் போல பலிபீடத்தில் வைக்கப்பட்டு திரும்ப எடுக்கப்பட அல்ல, பலியாக மாறிவிடவே நான் பீஹாருக்கு வந்தேன்' என்றார். சகோதரரின் காயங்களைக் கண்டு மனதில் நொந்துபோன நெஞ்சோடு நின்றுகொண்டிருந்த பலருக்கு, அவரது வாயிலிருந்து புறப்பட்ட இந்த வாக்கியம், மருந்தானது மாத்திரமல்ல, காயங்கள் நம்மை என்ன செய்யும் என்று தங்களைப் பெலப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நெஞ்சதனை மரத்துப்போகச் செய்தது. என்னுடைய இதயத்திலோ, இந்த வார்த்தைகள் பசுமரத்தில் ஆணியால் எழுதப்பட்டதைப் போல பொறிக்கப்பட்டது. ஆறுதல் பெறும் நிலையிருந்த அவர், மற்றவர்களுக்கு ஆறுதலாகிப்போனது அழைத்தவரின் பெலத்தால் அவருக்குள் இருந்த அழைப்பின் இரகசியம்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...