முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழைப்பின் இரகசியம்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 8


அழைப்பின் இரகசியம்

 

2005-ம் ஆண்டு, பீஹார் ஜெம்ஸ் வளாகத்தின் வழியாகச் செல்லும் வெளிப்புறச் சாலையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் நின்றுகொண்டிருந்தபோது, சமூக விரோதிகள் உண்டாக்கிய கலவரத்தில் விரோதிகள் அவரை முகத்தில் தாக்கினார்கள்; மூக்கிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டிருந்தது. சட்டை எங்கும் இரத்தக் கறையுடன் நின்றுகொண்டிருந்தார் சகோதரர். ஒருபுறம், தொலைக்காட்சி நிருபர்கள் பேட்டி கேட்டுக்கொண்டிருந்தனர், இரத்தம் படிந்த அவரது ஆடைகளைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். மறுபுறம், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வாசலுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது, ஜெம்ஸ் அலுவலகத்தின் முன் இருந்த பலா மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் அமர்ந்து சுற்றி நின்ற ஜெம்ஸ் உடன் ஊழியர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் சகோதரர்; அங்கு நின்றுகொண்டிருந்தவர்களுள் நானும் ஒருவன். தன்னைச் சுற்றிலும் பயந்தவாறு நின்றுகொண்டிருந்த பல ஊழியர்களின் காதுகளை நோக்கி அவரது வாயின் வார்த்தைகள் வாழ்வின் பாடங்களாகப் பாய்ந்துகொண்டிருந்தன; கூட்டத்தில் அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். எதிரியின் தாக்குதல்கள் சரீரத்தைக் காயப்படுத்தலாம், ஆனால் நமது அழைப்பை நிலை குலையச் செய்துவிடக்கூடாது என்று ஆலோசனை கொடுத்துக்கொண்டிருந்தார். திடீரென்று, தன்னைத் தாக்கியவர்களை மனதில் வைத்தவாறு, 'அவங்க என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும்; ஈசாக்கைப் போல பலிபீடத்தில் வைக்கப்பட்டு திரும்ப எடுக்கப்பட அல்ல, பலியாக மாறிவிடவே நான் பீஹாருக்கு வந்தேன்' என்றார். சகோதரரின் காயங்களைக் கண்டு மனதில் நொந்துபோன நெஞ்சோடு நின்றுகொண்டிருந்த பலருக்கு, அவரது வாயிலிருந்து புறப்பட்ட இந்த வாக்கியம், மருந்தானது மாத்திரமல்ல, காயங்கள் நம்மை என்ன செய்யும் என்று தங்களைப் பெலப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு நெஞ்சதனை மரத்துப்போகச் செய்தது. என்னுடைய இதயத்திலோ, இந்த வார்த்தைகள் பசுமரத்தில் ஆணியால் எழுதப்பட்டதைப் போல பொறிக்கப்பட்டது. ஆறுதல் பெறும் நிலையிருந்த அவர், மற்றவர்களுக்கு ஆறுதலாகிப்போனது அழைத்தவரின் பெலத்தால் அவருக்குள் இருந்த அழைப்பின் இரகசியம்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...