முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிய அற்புதம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்                

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 43

பெரிய அற்புதம்



2005-ம் ஆண்டு, நான் ஜெம்ஸ் வெளியீட்டுத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில், வெளிநாட்டு ஊழியர் ஒருவருடைய கூட்டங்கள் தென்னிந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த வெளிநாட்டு ஊழியரைக் குறித்து நான் ஆங்காகாங்கே ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்; மிகப் பிரபலமான பிரசங்கி என்றும், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்குபெறுவார்கள் என்றும் நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1996-ம் ஆண்டு நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், அவர் எழுதிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கின்றேன். இந்தியாவில் நடைபெற்ற அவரது எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தில்லை; எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டிகளையும், செய்திகளையும் கேட்டிருக்கிறேன். 2005-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் அவரது கூட்டங்கள் நடைபெறவிருப்பதை நான் அறிந்தபோது, அதனைக் குறித்த விபரங்களையும் அறிந்துகொள்ள அதிக ஆசையாயிருந்தேன். பல தினசரி பத்திரிக்கைகள் அவரது கூட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. அப்பொழுது, ஜெம்ஸ் ஊழியர்கள் மூலமாக சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அக்கூட்டத்தில் ஒருமுறை கலந்துகொண்டதாக அறிந்தேன். எனவே, சகோதரர் பீஹாருக்கு வந்ததும், அக்கூட்டத்தைப் பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினேன். தமிழகத்தில் தனது கூட்டங்களை முடித்துவிட்டு  பீஹார் திரும்பிய சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடத்தில், 'அண்ணன், அந்த வெளிநாட்டு ஊழியரின் கூட்டங்கள் எப்படியிருந்தன?' என்று கேட்டேன். அநேகர் வந்திருந்தார்கள், அநேகர் வியாதியிலிருந்து சுகமானார்கள்... என்று கூட்டத்தைப் பற்றிய சில காரியங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சகோதரர், 'ஆனால், கிறிஸ்துவின் சுவிசேஷம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படவில்லை' என்று சொன்னார். ஜனங்கள் அற்புதங்களைப் பெறுவதைக் காட்டிலும், அவரை (இயேசுவை) அறிந்துகொள்வதுதானே பெரிய அற்புதம் என்று சகோதரர் என்னிடத்தில் சொன்னபோது, எனது கண்களும் பெரிய அற்புதத்தை நோக்கியே திரும்பின.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்

       சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 9 தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்   2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமத...