முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிய அற்புதம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்                

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 43

பெரிய அற்புதம்



2005-ம் ஆண்டு, நான் ஜெம்ஸ் வெளியீட்டுத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில், வெளிநாட்டு ஊழியர் ஒருவருடைய கூட்டங்கள் தென்னிந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த வெளிநாட்டு ஊழியரைக் குறித்து நான் ஆங்காகாங்கே ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்; மிகப் பிரபலமான பிரசங்கி என்றும், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்குபெறுவார்கள் என்றும் நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1996-ம் ஆண்டு நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், அவர் எழுதிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கின்றேன். இந்தியாவில் நடைபெற்ற அவரது எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தில்லை; எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டிகளையும், செய்திகளையும் கேட்டிருக்கிறேன். 2005-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் அவரது கூட்டங்கள் நடைபெறவிருப்பதை நான் அறிந்தபோது, அதனைக் குறித்த விபரங்களையும் அறிந்துகொள்ள அதிக ஆசையாயிருந்தேன். பல தினசரி பத்திரிக்கைகள் அவரது கூட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. அப்பொழுது, ஜெம்ஸ் ஊழியர்கள் மூலமாக சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அக்கூட்டத்தில் ஒருமுறை கலந்துகொண்டதாக அறிந்தேன். எனவே, சகோதரர் பீஹாருக்கு வந்ததும், அக்கூட்டத்தைப் பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினேன். தமிழகத்தில் தனது கூட்டங்களை முடித்துவிட்டு  பீஹார் திரும்பிய சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடத்தில், 'அண்ணன், அந்த வெளிநாட்டு ஊழியரின் கூட்டங்கள் எப்படியிருந்தன?' என்று கேட்டேன். அநேகர் வந்திருந்தார்கள், அநேகர் வியாதியிலிருந்து சுகமானார்கள்... என்று கூட்டத்தைப் பற்றிய சில காரியங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சகோதரர், 'ஆனால், கிறிஸ்துவின் சுவிசேஷம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படவில்லை' என்று சொன்னார். ஜனங்கள் அற்புதங்களைப் பெறுவதைக் காட்டிலும், அவரை (இயேசுவை) அறிந்துகொள்வதுதானே பெரிய அற்புதம் என்று சகோதரர் என்னிடத்தில் சொன்னபோது, எனது கண்களும் பெரிய அற்புதத்தை நோக்கியே திரும்பின.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...