முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிய அற்புதம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்                

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 43

பெரிய அற்புதம்



2005-ம் ஆண்டு, நான் ஜெம்ஸ் வெளியீட்டுத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில், வெளிநாட்டு ஊழியர் ஒருவருடைய கூட்டங்கள் தென்னிந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த வெளிநாட்டு ஊழியரைக் குறித்து நான் ஆங்காகாங்கே ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்; மிகப் பிரபலமான பிரசங்கி என்றும், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்குபெறுவார்கள் என்றும் நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1996-ம் ஆண்டு நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், அவர் எழுதிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கின்றேன். இந்தியாவில் நடைபெற்ற அவரது எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தில்லை; எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டிகளையும், செய்திகளையும் கேட்டிருக்கிறேன். 2005-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் அவரது கூட்டங்கள் நடைபெறவிருப்பதை நான் அறிந்தபோது, அதனைக் குறித்த விபரங்களையும் அறிந்துகொள்ள அதிக ஆசையாயிருந்தேன். பல தினசரி பத்திரிக்கைகள் அவரது கூட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. அப்பொழுது, ஜெம்ஸ் ஊழியர்கள் மூலமாக சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அக்கூட்டத்தில் ஒருமுறை கலந்துகொண்டதாக அறிந்தேன். எனவே, சகோதரர் பீஹாருக்கு வந்ததும், அக்கூட்டத்தைப் பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினேன். தமிழகத்தில் தனது கூட்டங்களை முடித்துவிட்டு  பீஹார் திரும்பிய சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடத்தில், 'அண்ணன், அந்த வெளிநாட்டு ஊழியரின் கூட்டங்கள் எப்படியிருந்தன?' என்று கேட்டேன். அநேகர் வந்திருந்தார்கள், அநேகர் வியாதியிலிருந்து சுகமானார்கள்... என்று கூட்டத்தைப் பற்றிய சில காரியங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சகோதரர், 'ஆனால், கிறிஸ்துவின் சுவிசேஷம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படவில்லை' என்று சொன்னார். ஜனங்கள் அற்புதங்களைப் பெறுவதைக் காட்டிலும், அவரை (இயேசுவை) அறிந்துகொள்வதுதானே பெரிய அற்புதம் என்று சகோதரர் என்னிடத்தில் சொன்னபோது, எனது கண்களும் பெரிய அற்புதத்தை நோக்கியே திரும்பின.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 7 இது தமிழ்நாடு இல்ல; பீஹார்   ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 2003-ம் ஆண்டு நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொழிற்பயிற்சி மையம் அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாசன் உடன் நானும் இணைந்து அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அரசு அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் சில பொருட்களையும், இயந்திரங்களையும் வாங்க முற்பட்டோம். பொருட்கள் சிலவற்றை வாங்கும்படியாக, பீஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்த சகோதரர் ஜேசுதாசன், அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாயை ஜெம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்று ரயிலில் பாட்னா வந்து சேரும்படி கூறினார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த நான்,  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச்...