முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிய அற்புதம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்                

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 43

பெரிய அற்புதம்



2005-ம் ஆண்டு, நான் ஜெம்ஸ் வெளியீட்டுத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில், வெளிநாட்டு ஊழியர் ஒருவருடைய கூட்டங்கள் தென்னிந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த வெளிநாட்டு ஊழியரைக் குறித்து நான் ஆங்காகாங்கே ஒரு சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன்; மிகப் பிரபலமான பிரசங்கி என்றும், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் லட்சக்கணக்கானோர் பங்குபெறுவார்கள் என்றும் நான் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1996-ம் ஆண்டு நான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், அவர் எழுதிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கின்றேன். இந்தியாவில் நடைபெற்ற அவரது எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தில்லை; எனினும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டிகளையும், செய்திகளையும் கேட்டிருக்கிறேன். 2005-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் அவரது கூட்டங்கள் நடைபெறவிருப்பதை நான் அறிந்தபோது, அதனைக் குறித்த விபரங்களையும் அறிந்துகொள்ள அதிக ஆசையாயிருந்தேன். பல தினசரி பத்திரிக்கைகள் அவரது கூட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன. அப்பொழுது, ஜெம்ஸ் ஊழியர்கள் மூலமாக சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அக்கூட்டத்தில் ஒருமுறை கலந்துகொண்டதாக அறிந்தேன். எனவே, சகோதரர் பீஹாருக்கு வந்ததும், அக்கூட்டத்தைப் பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினேன். தமிழகத்தில் தனது கூட்டங்களை முடித்துவிட்டு  பீஹார் திரும்பிய சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடத்தில், 'அண்ணன், அந்த வெளிநாட்டு ஊழியரின் கூட்டங்கள் எப்படியிருந்தன?' என்று கேட்டேன். அநேகர் வந்திருந்தார்கள், அநேகர் வியாதியிலிருந்து சுகமானார்கள்... என்று கூட்டத்தைப் பற்றிய சில காரியங்களைச் சொல்லிக்கொண்டிருந்த சகோதரர், 'ஆனால், கிறிஸ்துவின் சுவிசேஷம் தெளிவாகப் பிரசங்கிக்கப்படவில்லை' என்று சொன்னார். ஜனங்கள் அற்புதங்களைப் பெறுவதைக் காட்டிலும், அவரை (இயேசுவை) அறிந்துகொள்வதுதானே பெரிய அற்புதம் என்று சகோதரர் என்னிடத்தில் சொன்னபோது, எனது கண்களும் பெரிய அற்புதத்தை நோக்கியே திரும்பின.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...