முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடி இப்பவே ரெடி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்       

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 35

இடி இப்பவே ரெடி


 

2014, ஜுலை 2 அன்று காலை சுமார் பதினோரு மணி; அலுவலகத்தில் நான் எனது பணியிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவரது அறையில் பணியிலுமாக அமர்ந்துகொண்டிருந்தோம். மீடியா துறையின் சக ஊழியர்கள் தத்தம் பணியினை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அலுவலகப் பணியினிமித்தம் நான் சகோதரரைச் சந்திக்கச் சென்றேன். சந்திப்பு முடிந்ததும், ஆவிக்குரிய வாழ்க்கையின் சில காரியங்களைக் குறித்து சகோதரரோடு உரையாடிக்கொண்டிருந்த நான், 2013-ம் ஆண்டு, உடுமலைப்பேட்டையில், மிஷனரி தரிசன ஐக்கிய ஆராதனையில் சகோதரர் அளித்த 'உண்மை சபை' என்ற செய்தியைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். youtube இணையதளத்தில் https://www.youtube.com/watch?v=vka5_ffQfkA என்ற வலைய முகவரியில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் செய்தியினை அன்றுவரை 26,092 பேர் கேட்டிருந்தனர். அப்பொழுது சகோதரர், 'சென்ற ஞாயிற்றுக் கிழமை (29 ஜுன் 2014) பீஹார் ஆலயத்தில் தான் அளித்த செய்தி, அந்நேரத்தில் ஆண்டவரால் அருளப்பட்டது' என்று சொன்னார்; தொடர்ந்து, '2015-ம் ஆண்டு, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியும் எனக்குக் கிடைத்துவிட்டது' என்று சொன்னார். எனக்கோ வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு, முன்னதாக இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டாரே சகோதரர் என்று எண்ணியவாறு, சகோதரரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நான், 'அண்ணன், அது எப்படி சாத்தியமாகிறது?' இடையில் இன்னும் எத்தனையோ கூட்டங்கள் இருக்கின்றனவே. ஆறு மாதங்களுக்குள்ளாக இன்னும் எத்தனையோ இடங்களில் நீங்கள் பிரசங்கிக்கவேண்டியதிருக்கிறதே, அப்படியிருக்க, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியை இப்பொழுதே எப்படி பெற்றுக்கொண்டீர்கள் அடையாளங் கண்டுகொண்டீர்கள்? நானாக இருந்தால், கூட்டம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர்தான் செய்தியை தேவனிடத்தில் கேட்டிருப்பேன் என்று சொன்னேன். அப்பொழுது சகோதரர், 'கர்த்தர், எனக்குக் கொடுத்த அந்தச் செய்தி சென்னைக் கூட்டத்திற்கானது' என்று தான் அறிந்துகொண்டதாகச் சொன்னார். என் மனதில் எழுந்த வார்த்தைகளை மீண்டும் அவரிடத்தில் கேள்வியாக்கினேன். 'அண்ணன், நீங்கள் 2015-ஜனவரி சென்னை கூட்டத்திற்காக இப்பொழுதே ஜெபிக்கத் தொடங்கிவிட்டீர்களா' என்றேன்; சிரித்த முகத்துடன் 'ஆம்' என்ற பதில் வந்தது. 2015, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான மழை மறுவருடம் பெய்யப்போகிறது, ஆனால், இடி இப்பவே ரெடி என்று என் மனது என்னிடத்திலேயே சொல்லிக்கொள்ள, அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆயத்தத்தைக் கண்டு சற்று அதிர்ந்தவனாக அலுவலகப் பணியினைத் தொடர்ந்தேன். அந்நேரத்தில் தரப்பட்டாலும், முந்நேரத்தில் தரப்பட்டாலும், எந்நேரத்தில் தரப்பட்டாலும் எந்தச் செய்தி யாருக்கு என்று அடையாளம் கண்டுகொண்டால் மாத்திரமே, உரிய கூட்டத்தாருக்கு அதனை உரித்தாக்க முடியும்; ஏதோ, ஆயத்மாயிருக்கும் செய்தியை யாருக்கோ பிரசங்கிப்பது பொருத்தமானது அல்ல என்பது அப்போது நான் கற்ற பாடம். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...