முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடி இப்பவே ரெடி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்       

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 35

இடி இப்பவே ரெடி


 

2014, ஜுலை 2 அன்று காலை சுமார் பதினோரு மணி; அலுவலகத்தில் நான் எனது பணியிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவரது அறையில் பணியிலுமாக அமர்ந்துகொண்டிருந்தோம். மீடியா துறையின் சக ஊழியர்கள் தத்தம் பணியினை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அலுவலகப் பணியினிமித்தம் நான் சகோதரரைச் சந்திக்கச் சென்றேன். சந்திப்பு முடிந்ததும், ஆவிக்குரிய வாழ்க்கையின் சில காரியங்களைக் குறித்து சகோதரரோடு உரையாடிக்கொண்டிருந்த நான், 2013-ம் ஆண்டு, உடுமலைப்பேட்டையில், மிஷனரி தரிசன ஐக்கிய ஆராதனையில் சகோதரர் அளித்த 'உண்மை சபை' என்ற செய்தியைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். youtube இணையதளத்தில் https://www.youtube.com/watch?v=vka5_ffQfkA என்ற வலைய முகவரியில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் செய்தியினை அன்றுவரை 26,092 பேர் கேட்டிருந்தனர். அப்பொழுது சகோதரர், 'சென்ற ஞாயிற்றுக் கிழமை (29 ஜுன் 2014) பீஹார் ஆலயத்தில் தான் அளித்த செய்தி, அந்நேரத்தில் ஆண்டவரால் அருளப்பட்டது' என்று சொன்னார்; தொடர்ந்து, '2015-ம் ஆண்டு, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியும் எனக்குக் கிடைத்துவிட்டது' என்று சொன்னார். எனக்கோ வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு, முன்னதாக இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டாரே சகோதரர் என்று எண்ணியவாறு, சகோதரரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நான், 'அண்ணன், அது எப்படி சாத்தியமாகிறது?' இடையில் இன்னும் எத்தனையோ கூட்டங்கள் இருக்கின்றனவே. ஆறு மாதங்களுக்குள்ளாக இன்னும் எத்தனையோ இடங்களில் நீங்கள் பிரசங்கிக்கவேண்டியதிருக்கிறதே, அப்படியிருக்க, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியை இப்பொழுதே எப்படி பெற்றுக்கொண்டீர்கள் அடையாளங் கண்டுகொண்டீர்கள்? நானாக இருந்தால், கூட்டம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர்தான் செய்தியை தேவனிடத்தில் கேட்டிருப்பேன் என்று சொன்னேன். அப்பொழுது சகோதரர், 'கர்த்தர், எனக்குக் கொடுத்த அந்தச் செய்தி சென்னைக் கூட்டத்திற்கானது' என்று தான் அறிந்துகொண்டதாகச் சொன்னார். என் மனதில் எழுந்த வார்த்தைகளை மீண்டும் அவரிடத்தில் கேள்வியாக்கினேன். 'அண்ணன், நீங்கள் 2015-ஜனவரி சென்னை கூட்டத்திற்காக இப்பொழுதே ஜெபிக்கத் தொடங்கிவிட்டீர்களா' என்றேன்; சிரித்த முகத்துடன் 'ஆம்' என்ற பதில் வந்தது. 2015, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான மழை மறுவருடம் பெய்யப்போகிறது, ஆனால், இடி இப்பவே ரெடி என்று என் மனது என்னிடத்திலேயே சொல்லிக்கொள்ள, அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆயத்தத்தைக் கண்டு சற்று அதிர்ந்தவனாக அலுவலகப் பணியினைத் தொடர்ந்தேன். அந்நேரத்தில் தரப்பட்டாலும், முந்நேரத்தில் தரப்பட்டாலும், எந்நேரத்தில் தரப்பட்டாலும் எந்தச் செய்தி யாருக்கு என்று அடையாளம் கண்டுகொண்டால் மாத்திரமே, உரிய கூட்டத்தாருக்கு அதனை உரித்தாக்க முடியும்; ஏதோ, ஆயத்மாயிருக்கும் செய்தியை யாருக்கோ பிரசங்கிப்பது பொருத்தமானது அல்ல என்பது அப்போது நான் கற்ற பாடம். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...