முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடி இப்பவே ரெடி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்       

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 35

இடி இப்பவே ரெடி


 

2014, ஜுலை 2 அன்று காலை சுமார் பதினோரு மணி; அலுவலகத்தில் நான் எனது பணியிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவரது அறையில் பணியிலுமாக அமர்ந்துகொண்டிருந்தோம். மீடியா துறையின் சக ஊழியர்கள் தத்தம் பணியினை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அலுவலகப் பணியினிமித்தம் நான் சகோதரரைச் சந்திக்கச் சென்றேன். சந்திப்பு முடிந்ததும், ஆவிக்குரிய வாழ்க்கையின் சில காரியங்களைக் குறித்து சகோதரரோடு உரையாடிக்கொண்டிருந்த நான், 2013-ம் ஆண்டு, உடுமலைப்பேட்டையில், மிஷனரி தரிசன ஐக்கிய ஆராதனையில் சகோதரர் அளித்த 'உண்மை சபை' என்ற செய்தியைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். youtube இணையதளத்தில் https://www.youtube.com/watch?v=vka5_ffQfkA என்ற வலைய முகவரியில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் செய்தியினை அன்றுவரை 26,092 பேர் கேட்டிருந்தனர். அப்பொழுது சகோதரர், 'சென்ற ஞாயிற்றுக் கிழமை (29 ஜுன் 2014) பீஹார் ஆலயத்தில் தான் அளித்த செய்தி, அந்நேரத்தில் ஆண்டவரால் அருளப்பட்டது' என்று சொன்னார்; தொடர்ந்து, '2015-ம் ஆண்டு, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியும் எனக்குக் கிடைத்துவிட்டது' என்று சொன்னார். எனக்கோ வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு, முன்னதாக இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டாரே சகோதரர் என்று எண்ணியவாறு, சகோதரரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நான், 'அண்ணன், அது எப்படி சாத்தியமாகிறது?' இடையில் இன்னும் எத்தனையோ கூட்டங்கள் இருக்கின்றனவே. ஆறு மாதங்களுக்குள்ளாக இன்னும் எத்தனையோ இடங்களில் நீங்கள் பிரசங்கிக்கவேண்டியதிருக்கிறதே, அப்படியிருக்க, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியை இப்பொழுதே எப்படி பெற்றுக்கொண்டீர்கள் அடையாளங் கண்டுகொண்டீர்கள்? நானாக இருந்தால், கூட்டம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர்தான் செய்தியை தேவனிடத்தில் கேட்டிருப்பேன் என்று சொன்னேன். அப்பொழுது சகோதரர், 'கர்த்தர், எனக்குக் கொடுத்த அந்தச் செய்தி சென்னைக் கூட்டத்திற்கானது' என்று தான் அறிந்துகொண்டதாகச் சொன்னார். என் மனதில் எழுந்த வார்த்தைகளை மீண்டும் அவரிடத்தில் கேள்வியாக்கினேன். 'அண்ணன், நீங்கள் 2015-ஜனவரி சென்னை கூட்டத்திற்காக இப்பொழுதே ஜெபிக்கத் தொடங்கிவிட்டீர்களா' என்றேன்; சிரித்த முகத்துடன் 'ஆம்' என்ற பதில் வந்தது. 2015, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான மழை மறுவருடம் பெய்யப்போகிறது, ஆனால், இடி இப்பவே ரெடி என்று என் மனது என்னிடத்திலேயே சொல்லிக்கொள்ள, அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆயத்தத்தைக் கண்டு சற்று அதிர்ந்தவனாக அலுவலகப் பணியினைத் தொடர்ந்தேன். அந்நேரத்தில் தரப்பட்டாலும், முந்நேரத்தில் தரப்பட்டாலும், எந்நேரத்தில் தரப்பட்டாலும் எந்தச் செய்தி யாருக்கு என்று அடையாளம் கண்டுகொண்டால் மாத்திரமே, உரிய கூட்டத்தாருக்கு அதனை உரித்தாக்க முடியும்; ஏதோ, ஆயத்மாயிருக்கும் செய்தியை யாருக்கோ பிரசங்கிப்பது பொருத்தமானது அல்ல என்பது அப்போது நான் கற்ற பாடம். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...