Skip to main content

இடி இப்பவே ரெடி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்       

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 35

இடி இப்பவே ரெடி


 

2014, ஜுலை 2 அன்று காலை சுமார் பதினோரு மணி; அலுவலகத்தில் நான் எனது பணியிலும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவரது அறையில் பணியிலுமாக அமர்ந்துகொண்டிருந்தோம். மீடியா துறையின் சக ஊழியர்கள் தத்தம் பணியினை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அலுவலகப் பணியினிமித்தம் நான் சகோதரரைச் சந்திக்கச் சென்றேன். சந்திப்பு முடிந்ததும், ஆவிக்குரிய வாழ்க்கையின் சில காரியங்களைக் குறித்து சகோதரரோடு உரையாடிக்கொண்டிருந்த நான், 2013-ம் ஆண்டு, உடுமலைப்பேட்டையில், மிஷனரி தரிசன ஐக்கிய ஆராதனையில் சகோதரர் அளித்த 'உண்மை சபை' என்ற செய்தியைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். youtube இணையதளத்தில் https://www.youtube.com/watch?v=vka5_ffQfkA என்ற வலைய முகவரியில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் செய்தியினை அன்றுவரை 26,092 பேர் கேட்டிருந்தனர். அப்பொழுது சகோதரர், 'சென்ற ஞாயிற்றுக் கிழமை (29 ஜுன் 2014) பீஹார் ஆலயத்தில் தான் அளித்த செய்தி, அந்நேரத்தில் ஆண்டவரால் அருளப்பட்டது' என்று சொன்னார்; தொடர்ந்து, '2015-ம் ஆண்டு, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியும் எனக்குக் கிடைத்துவிட்டது' என்று சொன்னார். எனக்கோ வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு, முன்னதாக இப்பொழுதே ஆயத்தமாகிவிட்டாரே சகோதரர் என்று எண்ணியவாறு, சகோதரரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த நான், 'அண்ணன், அது எப்படி சாத்தியமாகிறது?' இடையில் இன்னும் எத்தனையோ கூட்டங்கள் இருக்கின்றனவே. ஆறு மாதங்களுக்குள்ளாக இன்னும் எத்தனையோ இடங்களில் நீங்கள் பிரசங்கிக்கவேண்டியதிருக்கிறதே, அப்படியிருக்க, 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான செய்தியை இப்பொழுதே எப்படி பெற்றுக்கொண்டீர்கள் அடையாளங் கண்டுகொண்டீர்கள்? நானாக இருந்தால், கூட்டம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னர்தான் செய்தியை தேவனிடத்தில் கேட்டிருப்பேன் என்று சொன்னேன். அப்பொழுது சகோதரர், 'கர்த்தர், எனக்குக் கொடுத்த அந்தச் செய்தி சென்னைக் கூட்டத்திற்கானது' என்று தான் அறிந்துகொண்டதாகச் சொன்னார். என் மனதில் எழுந்த வார்த்தைகளை மீண்டும் அவரிடத்தில் கேள்வியாக்கினேன். 'அண்ணன், நீங்கள் 2015-ஜனவரி சென்னை கூட்டத்திற்காக இப்பொழுதே ஜெபிக்கத் தொடங்கிவிட்டீர்களா' என்றேன்; சிரித்த முகத்துடன் 'ஆம்' என்ற பதில் வந்தது. 2015, ஜனவரியில், சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கான மழை மறுவருடம் பெய்யப்போகிறது, ஆனால், இடி இப்பவே ரெடி என்று என் மனது என்னிடத்திலேயே சொல்லிக்கொள்ள, அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆயத்தத்தைக் கண்டு சற்று அதிர்ந்தவனாக அலுவலகப் பணியினைத் தொடர்ந்தேன். அந்நேரத்தில் தரப்பட்டாலும், முந்நேரத்தில் தரப்பட்டாலும், எந்நேரத்தில் தரப்பட்டாலும் எந்தச் செய்தி யாருக்கு என்று அடையாளம் கண்டுகொண்டால் மாத்திரமே, உரிய கூட்டத்தாருக்கு அதனை உரித்தாக்க முடியும்; ஏதோ, ஆயத்மாயிருக்கும் செய்தியை யாருக்கோ பிரசங்கிப்பது பொருத்தமானது அல்ல என்பது அப்போது நான் கற்ற பாடம். 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை