Skip to main content

'நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்க'

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

               

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 29

'நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்க'


 

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் எது மீடியா துறையின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கிருந்தவாறு என்னை அழைக்க, அவரது அறைக்குள் சென்றேன். அலுவலகப் பணி ஒன்றைச் செய்யும்படி என்னிடம் கொடுத்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். சகோதரரிடமிருந்து பெற்ற அப்பணியினை தேவ ஒத்தாசையுடன் செய்து முடித்தேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர், வழக்கம் போல, காலையில் அலுவலகத்திற்கு வந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்; தனது அலுவலகத்தில் பணியினைத் தொடர்ந்தார். நான் எனது இருக்கையில் அமர்ந்திருந்தவாறு அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். மதிய உணவிற்குச் செல்லும் நேரத்தில், சகோதரர் தனது அறையிலிருந்து எழும்பி, எனது இருக்கையை நோக்கி நவந்தார். ஏதோ அலுவலகப் பணியினிமித்தம் வந்திருக்கிறார் என்று நான் எண்ணி, அவரைக் கண்டதும், உடனே எழுந்து நின்றேன். சகோதரர் என்னை நோக்கி, 'கிருபா, நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்கன்னு நினைக்கிறேன்' என்றார். அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, இரண்டு மூன்று விநாடிகள் ஒன்றும் புரியாதவனைப் போல அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நான், 'எப்படி அண்ணன்' என்றேன் நான், அவரோ 'It seems like that'என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு தனது அறையை நோக்கித் திரும்பிச் சென்றார். அவர் கொடுத்த பணியினைச் சிறப்பாக, தேவ ஒத்தாசையுடன் நான் செய்து முடித்ததை மனதில் கொண்டே அப்படி அவர் சொன்னார் என்று அப்போது நான் புரிந்துகொண்டேன். தன்னுடன் பணிசெய்வோரும், தன்னைப் போன்று மாறவேண்டும் என்ற விருப்பம் கொண்ட தலைவர் அவர் என்பதை அவரது முகத்தின் மலர்ச்சி வெளிக்காட்டியது. கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே (எண்; 11:29) என்ற மோசேயின் வார்த்தைகள் அப்போது என் நினைவைத் தொட்டது. 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை