முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்க'

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

               

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 29

'நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்க'


 

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் எது மீடியா துறையின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கிருந்தவாறு என்னை அழைக்க, அவரது அறைக்குள் சென்றேன். அலுவலகப் பணி ஒன்றைச் செய்யும்படி என்னிடம் கொடுத்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். சகோதரரிடமிருந்து பெற்ற அப்பணியினை தேவ ஒத்தாசையுடன் செய்து முடித்தேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர், வழக்கம் போல, காலையில் அலுவலகத்திற்கு வந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்; தனது அலுவலகத்தில் பணியினைத் தொடர்ந்தார். நான் எனது இருக்கையில் அமர்ந்திருந்தவாறு அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். மதிய உணவிற்குச் செல்லும் நேரத்தில், சகோதரர் தனது அறையிலிருந்து எழும்பி, எனது இருக்கையை நோக்கி நவந்தார். ஏதோ அலுவலகப் பணியினிமித்தம் வந்திருக்கிறார் என்று நான் எண்ணி, அவரைக் கண்டதும், உடனே எழுந்து நின்றேன். சகோதரர் என்னை நோக்கி, 'கிருபா, நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்கன்னு நினைக்கிறேன்' என்றார். அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, இரண்டு மூன்று விநாடிகள் ஒன்றும் புரியாதவனைப் போல அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நான், 'எப்படி அண்ணன்' என்றேன் நான், அவரோ 'It seems like that'என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு தனது அறையை நோக்கித் திரும்பிச் சென்றார். அவர் கொடுத்த பணியினைச் சிறப்பாக, தேவ ஒத்தாசையுடன் நான் செய்து முடித்ததை மனதில் கொண்டே அப்படி அவர் சொன்னார் என்று அப்போது நான் புரிந்துகொண்டேன். தன்னுடன் பணிசெய்வோரும், தன்னைப் போன்று மாறவேண்டும் என்ற விருப்பம் கொண்ட தலைவர் அவர் என்பதை அவரது முகத்தின் மலர்ச்சி வெளிக்காட்டியது. கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே (எண்; 11:29) என்ற மோசேயின் வார்த்தைகள் அப்போது என் நினைவைத் தொட்டது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...