முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்க'

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

               

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 29

'நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்க'


 

2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் எது மீடியா துறையின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கிருந்தவாறு என்னை அழைக்க, அவரது அறைக்குள் சென்றேன். அலுவலகப் பணி ஒன்றைச் செய்யும்படி என்னிடம் கொடுத்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். சகோதரரிடமிருந்து பெற்ற அப்பணியினை தேவ ஒத்தாசையுடன் செய்து முடித்தேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர், வழக்கம் போல, காலையில் அலுவலகத்திற்கு வந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்; தனது அலுவலகத்தில் பணியினைத் தொடர்ந்தார். நான் எனது இருக்கையில் அமர்ந்திருந்தவாறு அலுவலகப் பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். மதிய உணவிற்குச் செல்லும் நேரத்தில், சகோதரர் தனது அறையிலிருந்து எழும்பி, எனது இருக்கையை நோக்கி நவந்தார். ஏதோ அலுவலகப் பணியினிமித்தம் வந்திருக்கிறார் என்று நான் எண்ணி, அவரைக் கண்டதும், உடனே எழுந்து நின்றேன். சகோதரர் என்னை நோக்கி, 'கிருபா, நீங்க எனது ஆவிக்குள்ள வந்திட்டீங்கன்னு நினைக்கிறேன்' என்றார். அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, இரண்டு மூன்று விநாடிகள் ஒன்றும் புரியாதவனைப் போல அவரது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நான், 'எப்படி அண்ணன்' என்றேன் நான், அவரோ 'It seems like that'என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு தனது அறையை நோக்கித் திரும்பிச் சென்றார். அவர் கொடுத்த பணியினைச் சிறப்பாக, தேவ ஒத்தாசையுடன் நான் செய்து முடித்ததை மனதில் கொண்டே அப்படி அவர் சொன்னார் என்று அப்போது நான் புரிந்துகொண்டேன். தன்னுடன் பணிசெய்வோரும், தன்னைப் போன்று மாறவேண்டும் என்ற விருப்பம் கொண்ட தலைவர் அவர் என்பதை அவரது முகத்தின் மலர்ச்சி வெளிக்காட்டியது. கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே (எண்; 11:29) என்ற மோசேயின் வார்த்தைகள் அப்போது என் நினைவைத் தொட்டது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...