முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'எனது டேபிள் கிளீனா இருக்கு'

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 25

'எனது டேபிள் கிளீனா இருக்கு'


 

ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். ஊழியத்தினிமித்தம் மறுநாள் அவர் வெளியூர் புறப்படவேண்டியதிருந்தபடியினால், முந்தைய தினமே ஜெம்ஸ் மீடியா துறையின் அலுவலக பணிகளுக்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளும்படியாக அவரைச் சந்திக்கச் சென்றேன். சகோதரர் தனது வேலையில் கருத்தாயிருந்தார். உள்ளே நுழைந்ததும், 'உட்காருங்கள்' என்று சொல்வது சகோதரரின் பண்பாடு. அத்தனை வேலைகளின் மத்தியிலும், 'உட்காருங்கள்' என்று என்னையும் கேட்டுக்கொண்டார். அமர்ந்தவாறு பேசத் தொடங்கினேன். சகோதரரைச் சந்திக்கச் செல்லும்போது, என்னென்ன பேசவேண்டும் என்பதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி எடுத்துச் செல்வதும், அவர் சொல்பவற்றை எழுத ஆயத்தமாகவும் செல்வது எனது வழக்கம். இல்லையெனில், பலமுறை நான் அவர் பேசும் வார்த்தைகளிலேயே முழ்கி, நான் பேசவேண்டுமென்றிருந்தவைகளை பேசாமல் மறந்துவந்திருக்கிறேன் அல்லது அவர் சொன்னவைகளை மறந்துவிடுவேன். அப்படியே, அன்றும் எனது கையிலிருந்த துண்டு காகிதத்தின் அலுவலகத்தைப் பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக அவரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் தரும் ஆலோசனைகளையும் கையிலிருந்த காகிதத்தில் நான் எழுதிக்கொண்டேயிருந்தேன். அது ஒரு மாலை நேரம்; வழக்கமாக அலுவலகத்திலிருந்து சகோதரர் புறப்படும் நேரத்தைக் காட்டிலும் அன்று அதிக நேரம் அமர்ந்திருந்தார். சந்திப்பை முடித்துவிட்டு, நான் எழுந்தேன். சகோதரரும் புறப்பட ஆயத்தமானார். அப்போது, சகோதரர் என்னை நோக்கி: நாளை நான் வெளியூர் கிளம்பவேண்டும், எனவே இன்றே எனது மேஜையில் உள்ள அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டேன்; 'எனது டேபிள் கிளீனா இருக்கு' என்று கண்களால் மேஜையைப் பார்த்தவாறும், இரண்டு கைகளை மேலே உயர்த்தியவாறும் சொன்னார். அவரது செயலைக் கண்ட நான் மௌனமாய் நின்றுகொண்டிருந்தேன். இந்த வார்த்தையை அவரது வாயிலிருந்து எனது காதுகள் வாங்கிய பின்னர், பல நாட்கள் அவரை தொடர்ந்து கவனித்த நான், அந்த வார்த்தை அவரது வாயில் உள்ளது அல்ல, அவரது வாழ்க்கையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...