Skip to main content

'எனது டேபிள் கிளீனா இருக்கு'

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 25

'எனது டேபிள் கிளீனா இருக்கு'


 

ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். ஊழியத்தினிமித்தம் மறுநாள் அவர் வெளியூர் புறப்படவேண்டியதிருந்தபடியினால், முந்தைய தினமே ஜெம்ஸ் மீடியா துறையின் அலுவலக பணிகளுக்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளும்படியாக அவரைச் சந்திக்கச் சென்றேன். சகோதரர் தனது வேலையில் கருத்தாயிருந்தார். உள்ளே நுழைந்ததும், 'உட்காருங்கள்' என்று சொல்வது சகோதரரின் பண்பாடு. அத்தனை வேலைகளின் மத்தியிலும், 'உட்காருங்கள்' என்று என்னையும் கேட்டுக்கொண்டார். அமர்ந்தவாறு பேசத் தொடங்கினேன். சகோதரரைச் சந்திக்கச் செல்லும்போது, என்னென்ன பேசவேண்டும் என்பதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி எடுத்துச் செல்வதும், அவர் சொல்பவற்றை எழுத ஆயத்தமாகவும் செல்வது எனது வழக்கம். இல்லையெனில், பலமுறை நான் அவர் பேசும் வார்த்தைகளிலேயே முழ்கி, நான் பேசவேண்டுமென்றிருந்தவைகளை பேசாமல் மறந்துவந்திருக்கிறேன் அல்லது அவர் சொன்னவைகளை மறந்துவிடுவேன். அப்படியே, அன்றும் எனது கையிலிருந்த துண்டு காகிதத்தின் அலுவலகத்தைப் பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக அவரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் தரும் ஆலோசனைகளையும் கையிலிருந்த காகிதத்தில் நான் எழுதிக்கொண்டேயிருந்தேன். அது ஒரு மாலை நேரம்; வழக்கமாக அலுவலகத்திலிருந்து சகோதரர் புறப்படும் நேரத்தைக் காட்டிலும் அன்று அதிக நேரம் அமர்ந்திருந்தார். சந்திப்பை முடித்துவிட்டு, நான் எழுந்தேன். சகோதரரும் புறப்பட ஆயத்தமானார். அப்போது, சகோதரர் என்னை நோக்கி: நாளை நான் வெளியூர் கிளம்பவேண்டும், எனவே இன்றே எனது மேஜையில் உள்ள அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டேன்; 'எனது டேபிள் கிளீனா இருக்கு' என்று கண்களால் மேஜையைப் பார்த்தவாறும், இரண்டு கைகளை மேலே உயர்த்தியவாறும் சொன்னார். அவரது செயலைக் கண்ட நான் மௌனமாய் நின்றுகொண்டிருந்தேன். இந்த வார்த்தையை அவரது வாயிலிருந்து எனது காதுகள் வாங்கிய பின்னர், பல நாட்கள் அவரை தொடர்ந்து கவனித்த நான், அந்த வார்த்தை அவரது வாயில் உள்ளது அல்ல, அவரது வாழ்க்கையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். 


www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை