முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'எனது டேபிள் கிளீனா இருக்கு'

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 25

'எனது டேபிள் கிளீனா இருக்கு'


 

ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். ஊழியத்தினிமித்தம் மறுநாள் அவர் வெளியூர் புறப்படவேண்டியதிருந்தபடியினால், முந்தைய தினமே ஜெம்ஸ் மீடியா துறையின் அலுவலக பணிகளுக்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளும்படியாக அவரைச் சந்திக்கச் சென்றேன். சகோதரர் தனது வேலையில் கருத்தாயிருந்தார். உள்ளே நுழைந்ததும், 'உட்காருங்கள்' என்று சொல்வது சகோதரரின் பண்பாடு. அத்தனை வேலைகளின் மத்தியிலும், 'உட்காருங்கள்' என்று என்னையும் கேட்டுக்கொண்டார். அமர்ந்தவாறு பேசத் தொடங்கினேன். சகோதரரைச் சந்திக்கச் செல்லும்போது, என்னென்ன பேசவேண்டும் என்பதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி எடுத்துச் செல்வதும், அவர் சொல்பவற்றை எழுத ஆயத்தமாகவும் செல்வது எனது வழக்கம். இல்லையெனில், பலமுறை நான் அவர் பேசும் வார்த்தைகளிலேயே முழ்கி, நான் பேசவேண்டுமென்றிருந்தவைகளை பேசாமல் மறந்துவந்திருக்கிறேன் அல்லது அவர் சொன்னவைகளை மறந்துவிடுவேன். அப்படியே, அன்றும் எனது கையிலிருந்த துண்டு காகிதத்தின் அலுவலகத்தைப் பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக அவரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் தரும் ஆலோசனைகளையும் கையிலிருந்த காகிதத்தில் நான் எழுதிக்கொண்டேயிருந்தேன். அது ஒரு மாலை நேரம்; வழக்கமாக அலுவலகத்திலிருந்து சகோதரர் புறப்படும் நேரத்தைக் காட்டிலும் அன்று அதிக நேரம் அமர்ந்திருந்தார். சந்திப்பை முடித்துவிட்டு, நான் எழுந்தேன். சகோதரரும் புறப்பட ஆயத்தமானார். அப்போது, சகோதரர் என்னை நோக்கி: நாளை நான் வெளியூர் கிளம்பவேண்டும், எனவே இன்றே எனது மேஜையில் உள்ள அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டேன்; 'எனது டேபிள் கிளீனா இருக்கு' என்று கண்களால் மேஜையைப் பார்த்தவாறும், இரண்டு கைகளை மேலே உயர்த்தியவாறும் சொன்னார். அவரது செயலைக் கண்ட நான் மௌனமாய் நின்றுகொண்டிருந்தேன். இந்த வார்த்தையை அவரது வாயிலிருந்து எனது காதுகள் வாங்கிய பின்னர், பல நாட்கள் அவரை தொடர்ந்து கவனித்த நான், அந்த வார்த்தை அவரது வாயில் உள்ளது அல்ல, அவரது வாழ்க்கையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...