முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'எனது டேபிள் கிளீனா இருக்கு'

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 25

'எனது டேபிள் கிளீனா இருக்கு'


 

ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவர்களது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். ஊழியத்தினிமித்தம் மறுநாள் அவர் வெளியூர் புறப்படவேண்டியதிருந்தபடியினால், முந்தைய தினமே ஜெம்ஸ் மீடியா துறையின் அலுவலக பணிகளுக்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ளும்படியாக அவரைச் சந்திக்கச் சென்றேன். சகோதரர் தனது வேலையில் கருத்தாயிருந்தார். உள்ளே நுழைந்ததும், 'உட்காருங்கள்' என்று சொல்வது சகோதரரின் பண்பாடு. அத்தனை வேலைகளின் மத்தியிலும், 'உட்காருங்கள்' என்று என்னையும் கேட்டுக்கொண்டார். அமர்ந்தவாறு பேசத் தொடங்கினேன். சகோதரரைச் சந்திக்கச் செல்லும்போது, என்னென்ன பேசவேண்டும் என்பதை ஒரு துண்டு காகிதத்தில் எழுதி எடுத்துச் செல்வதும், அவர் சொல்பவற்றை எழுத ஆயத்தமாகவும் செல்வது எனது வழக்கம். இல்லையெனில், பலமுறை நான் அவர் பேசும் வார்த்தைகளிலேயே முழ்கி, நான் பேசவேண்டுமென்றிருந்தவைகளை பேசாமல் மறந்துவந்திருக்கிறேன் அல்லது அவர் சொன்னவைகளை மறந்துவிடுவேன். அப்படியே, அன்றும் எனது கையிலிருந்த துண்டு காகிதத்தின் அலுவலகத்தைப் பற்றிய குறிப்புகளை ஒவ்வொன்றாக அவரிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் தரும் ஆலோசனைகளையும் கையிலிருந்த காகிதத்தில் நான் எழுதிக்கொண்டேயிருந்தேன். அது ஒரு மாலை நேரம்; வழக்கமாக அலுவலகத்திலிருந்து சகோதரர் புறப்படும் நேரத்தைக் காட்டிலும் அன்று அதிக நேரம் அமர்ந்திருந்தார். சந்திப்பை முடித்துவிட்டு, நான் எழுந்தேன். சகோதரரும் புறப்பட ஆயத்தமானார். அப்போது, சகோதரர் என்னை நோக்கி: நாளை நான் வெளியூர் கிளம்பவேண்டும், எனவே இன்றே எனது மேஜையில் உள்ள அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டேன்; 'எனது டேபிள் கிளீனா இருக்கு' என்று கண்களால் மேஜையைப் பார்த்தவாறும், இரண்டு கைகளை மேலே உயர்த்தியவாறும் சொன்னார். அவரது செயலைக் கண்ட நான் மௌனமாய் நின்றுகொண்டிருந்தேன். இந்த வார்த்தையை அவரது வாயிலிருந்து எனது காதுகள் வாங்கிய பின்னர், பல நாட்கள் அவரை தொடர்ந்து கவனித்த நான், அந்த வார்த்தை அவரது வாயில் உள்ளது அல்ல, அவரது வாழ்க்கையில் உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...