Skip to main content

மனப்பூர்வமான மன்னிப்பு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      

        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 46

மனப்பூர்வமான மன்னிப்பு


 

2005-ம் ஆண்டு சமூக விரோதிகள் உருவாக்கிய பிரச்சனையில், ஜெம்ஸ் வளாகத்தைச் சுற்றிய கிராமத்தினர் அனைவரும் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தனர். தேர்தலில் ஆதாயம் பெற விரும்பிய வாக்காளர் ஒருவர், ஜெம்ஸ் ஊழியங்களுக்கு விரோதமாக செயல்பட்டு தனது பெயரைப் பெருக்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜெம்ஸ் ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டனர்; நானும் தாக்கப்பட்டேன். கிராமத்து மக்களில் சிலர் கோர்ட்டில் எங்களுக்கு விரோதமாக வழக்கு தொடர்ந்தனர். அதனால் அவ்வப்போது, கோர்ட்டிற்கு சென்று திரும்பும் நிலை உருவானது. தீர்ப்பு வரும் நாள் நெருங்கியது; அந்நாளில் கோர்ட்டிலிருந்து எங்களுக்கு அழைப்பு வர, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் அடிக்கப்பட்ட ஊழியர்கள் சிலரும் கோர்ட்டிற்குச் சென்றிருந்தோம். விசாரிக்கப்படும் நேரம் வரும் வரை சகோதரருடன் கோர்ட் வளாகத்திற்கு வெளியிலேயே வாகனத்தில் காத்துக்கொண்டிருந்தோம். நேரமாகிக்கொண்டேயிருந்தபடியினால், அருகிலிருந்த கடைகளில் தேனீர் மற்றும் திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். தீர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு விரோதமாகவே அமைந்துவிட்டதை அப்போது நாங்கள் அறிந்திருந்தோம். அப்போது, நீதிபதி விசாரிக்கும் நேரத்தில் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை ஊழியர்களாகிய எங்களுக்கு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவர்களை மன்னிப்பது நமது கடமை' எனவே, நீதிபதி என்ன கேட்டாலும், 'தண்டணை வேண்டாம் மன்னித்துவிடுங்கள்' என்பதையே பதிலாகச் சொல்லும்படி சகோதரர் சொல்லிக்கொண்டிருந்தார். சகோதரர், வாகனத்தின் முன்புற இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருந்தார். அப்போது, ஒரு தாய் கண்களில் கண்ணீரோடு சகோதரரைச் சந்திக்க வந்தார். அவர் யாரென்பதை நான் அறியாதவனாயிருந்தேன், எனினும், இரு கரங்களைக் கூப்பியவாறு சகோதரரிடம் செய்த தவற்றிற்காக மன்னிப்பு கேட்பதை அந்தத் தாயின் செய்கையிலும், வார்த்தைகளிலும் கண்டுகொண்டேன். கோர்ட் கூடியது, சகோதரர் அழைக்கப்பட்டபோது, 'தான் அவர்களை மனப்பூர்வமாக மன்னிப்பதாகவும், தண்டணை வழக்கவேண்டாம்' என்றும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். சகோதரரைத் தொடர்ந்து ஊழியர்களாகிய நாங்கள் அழைக்கப்பட்டோம்; நீதிபதி ஒவ்வொருவராக எங்களை அழைக்க, நாங்களும் சகோதரர் கற்றுத்தந்த பிரகாரம், எதிராளிகளை மன்னிக்கும்படி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டோம். என்னை அழைத்த நீதிபதி, 'உன்னை அடித்தது இவன்தானா? கையில் என்ன வைத்திருந்தான்? எப்படி அடித்தான்? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்? மன்னித்துவிடுங்கள் என்று சகோததரர் கற்றுத் தந்தது போலவே நானும் மாறுத்தரம் சொன்னேன். விசாரணைக்குப் பின்னர் வீடு திரும்பினோம். தொடர்ந்து, கிறிஸ்துவின் அன்பினை வெளிக்காட்டும் பொருட்டு, வெகுமதிகளுடன் அவர்களது இல்லங்களுக்கும் சென்று அவர்களைச் சந்தித்தோம். சகோதரருடன் கிராமத்திற்குள் வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்தது எனக்கு புதியதோர் அனுபவம். கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படியே நம்மை வெளிக்காட்டவேண்டும் என்று சகோதரர் செய்த செயல், மனப்பூரணமான மன்னிப்பை ஊழியர்களாகிய எங்கள் உள்ளங்களில் அனுபவிக்கச் செய்தது. 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை