முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனப்பூர்வமான மன்னிப்பு

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      

        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 46

மனப்பூர்வமான மன்னிப்பு


 

2005-ம் ஆண்டு சமூக விரோதிகள் உருவாக்கிய பிரச்சனையில், ஜெம்ஸ் வளாகத்தைச் சுற்றிய கிராமத்தினர் அனைவரும் கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தனர். தேர்தலில் ஆதாயம் பெற விரும்பிய வாக்காளர் ஒருவர், ஜெம்ஸ் ஊழியங்களுக்கு விரோதமாக செயல்பட்டு தனது பெயரைப் பெருக்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜெம்ஸ் ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டனர்; நானும் தாக்கப்பட்டேன். கிராமத்து மக்களில் சிலர் கோர்ட்டில் எங்களுக்கு விரோதமாக வழக்கு தொடர்ந்தனர். அதனால் அவ்வப்போது, கோர்ட்டிற்கு சென்று திரும்பும் நிலை உருவானது. தீர்ப்பு வரும் நாள் நெருங்கியது; அந்நாளில் கோர்ட்டிலிருந்து எங்களுக்கு அழைப்பு வர, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாருடன் அடிக்கப்பட்ட ஊழியர்கள் சிலரும் கோர்ட்டிற்குச் சென்றிருந்தோம். விசாரிக்கப்படும் நேரம் வரும் வரை சகோதரருடன் கோர்ட் வளாகத்திற்கு வெளியிலேயே வாகனத்தில் காத்துக்கொண்டிருந்தோம். நேரமாகிக்கொண்டேயிருந்தபடியினால், அருகிலிருந்த கடைகளில் தேனீர் மற்றும் திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். தீர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு விரோதமாகவே அமைந்துவிட்டதை அப்போது நாங்கள் அறிந்திருந்தோம். அப்போது, நீதிபதி விசாரிக்கும் நேரத்தில் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை ஊழியர்களாகிய எங்களுக்கு சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவர்களை மன்னிப்பது நமது கடமை' எனவே, நீதிபதி என்ன கேட்டாலும், 'தண்டணை வேண்டாம் மன்னித்துவிடுங்கள்' என்பதையே பதிலாகச் சொல்லும்படி சகோதரர் சொல்லிக்கொண்டிருந்தார். சகோதரர், வாகனத்தின் முன்புற இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருந்தார். அப்போது, ஒரு தாய் கண்களில் கண்ணீரோடு சகோதரரைச் சந்திக்க வந்தார். அவர் யாரென்பதை நான் அறியாதவனாயிருந்தேன், எனினும், இரு கரங்களைக் கூப்பியவாறு சகோதரரிடம் செய்த தவற்றிற்காக மன்னிப்பு கேட்பதை அந்தத் தாயின் செய்கையிலும், வார்த்தைகளிலும் கண்டுகொண்டேன். கோர்ட் கூடியது, சகோதரர் அழைக்கப்பட்டபோது, 'தான் அவர்களை மனப்பூர்வமாக மன்னிப்பதாகவும், தண்டணை வழக்கவேண்டாம்' என்றும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். சகோதரரைத் தொடர்ந்து ஊழியர்களாகிய நாங்கள் அழைக்கப்பட்டோம்; நீதிபதி ஒவ்வொருவராக எங்களை அழைக்க, நாங்களும் சகோதரர் கற்றுத்தந்த பிரகாரம், எதிராளிகளை மன்னிக்கும்படி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டோம். என்னை அழைத்த நீதிபதி, 'உன்னை அடித்தது இவன்தானா? கையில் என்ன வைத்திருந்தான்? எப்படி அடித்தான்? என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்? மன்னித்துவிடுங்கள் என்று சகோததரர் கற்றுத் தந்தது போலவே நானும் மாறுத்தரம் சொன்னேன். விசாரணைக்குப் பின்னர் வீடு திரும்பினோம். தொடர்ந்து, கிறிஸ்துவின் அன்பினை வெளிக்காட்டும் பொருட்டு, வெகுமதிகளுடன் அவர்களது இல்லங்களுக்கும் சென்று அவர்களைச் சந்தித்தோம். சகோதரருடன் கிராமத்திற்குள் வீடு வீடாகச் சென்று அவர்களைச் சந்தித்தது எனக்கு புதியதோர் அனுபவம். கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படியே நம்மை வெளிக்காட்டவேண்டும் என்று சகோதரர் செய்த செயல், மனப்பூரணமான மன்னிப்பை ஊழியர்களாகிய எங்கள் உள்ளங்களில் அனுபவிக்கச் செய்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...