முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்தகாரத்தின் தந்திரம்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 12


அந்தகாரத்தின் தந்திரம்

30 March 2014

 

பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில் பங்கேற்றனர், சாதுக்கள் கூட்டம் நடந்த மைதானமோ காலியாகக் கிடந்தது. வெகு தொலைவிலிருந்து கால்நடையாகவே மக்கள் ஜெம்ஸ் கூட்டங்களுக்கு நடந்து வந்திருந்தனர். ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டுவிட்டால், நாங்கள் பாதுகாப்பு தர முடியாது என்று காவல்துறையினர் எச்சரித்திருந்த நிலையில்; சகோதரரின் செய்தியினால் தொடப்பட்ட பாட்னா ஐ.ஜி ஒருவரின் மனைவி அக்கூட்டத்தில் தினந்தோறும் பங்குபெற்றார்; அவருடன் காவல்துறையினர் பலரும் பாட்னாவிலிருந்து வருகை தந்திருந்தனர். ஐ.ஜி-யின் மனைவிக்கு பாதுகாப்புக் கொடுப்பதுடன், சகோதரருக்கும் பாதுகாப்பு தருவதில் முனைந்து நின்றனர் காவல் துறையினர். நான் வழக்கம்போல, மேடையின் மீது கண் வைத்தவனாக, மைதானத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தேன். முதல் நாள் கூட்டம் முடிந்தது, மேடையிலிருந்து சகோதரர் கீழே இறங்கும்போது, அவரது கால்களைத் தொடுவதற்காக, 'பாபா' 'பாபா' என்ற சத்தத்துடன் ஜனங்கள் மேடையை நெருங்கினர். இதனைக் கண்ட நான், சில வாலிபர்களை உடன் வைத்துக்கொண்டு, வாகனத்தை மேடைக்கு அருகே வரச்சொல்லி, பாதுகாப்பு வளையத்துடன் சகோதரரை வாகனத்தில் ஏற்றும் நிலை உண்டானது. சகோதரர் பாதுகாப்பு வேண்டாம் என்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் மறுத்த போதிலும் கூட, சகோதரரின் வாகனத்திற்கு முன்னே வலுக்கட்டாயமாகச் சென்றது ஐ.ஜி அனுப்பியிருந்த காவல்துறையின் பாதுகாப்புப் பணி வாகனம். என்மேல் கரிசனை கொண்டு, அந்த ஐ.ஜி இப்படிச் செய்கிறாரே என்று சொல்லிக்கொண்டிருந்தார் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.

இரண்டாம் நாள் கூட்டங்களின் போது, ஆடியோ கேசட்டுகளுடன், சகோதரரின் படம் அடங்கிய காலண்டர் ஒன்றையும் விற்பனைக்கு நாங்கள் வைத்திருந்தோம். சகோதரரின் படத்தைப் பார்த்த கூட்டத்தின் மக்கள். பாபா, பாபா, என்று முண்டியடித்துக்கொண்டு காலண்டரை வாங்கி முடித்தனர். படைமுயற்சிக் கூட்டங்களில் வழக்கமாகச் செய்யப்படுவதைப் போன்று, சகோதரரின் செய்திக்கு முன், இயேசுவின் சிலுவைக் காட்சியைச் சித்தரிக்கும் திரைப்படத்தினைக் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தோம்; மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மைதானம் இருளாயிருந்த நேரத்தில், மைதானத்தின் பின்புறத்திலிருந்து கூச்சலும், குழப்பமுமான சண்டையின் சத்தம் கேட்டது. மைதானத்தின் பின்பபகுதிக்குச் சென்று பார்த்த நான், அங்கு சண்டை நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். ஜெம்ஸ் புத்தக நிலையத்தில் இருந்த ஆடியோ கேசட்டுக்களை பலர் திருடிக்கொண்டுச் சென்றனர். மேடையில் அமர்ந்திருந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரிடம் ஓடி வந்தேன்; 'அண்ணன், பின் பகுதியில் சண்டை நடக்கிறது, லைட்டை ஆன் பண்ணுவோமா?' என்று கேட்டேன். சகோதரர் சற்றும் யோசிக்காமல், 'கிருபா, கூட்டத்திற்குத் தடை இப்படித்தான் வரும், நீங்க பதட்டப்படாமல் அமைதியாக இருந்து பாருங்க, எல்லாம் கொஞ்ச நேரத்தில சரியாகிவிடும், சத்துருவின் இந்த தந்திரத்திற்கு நாம் அடிபணிந்துவிடக்கூடாது' என்று ஆலோசனை கொடுத்தார். நான் மேடையிலிருந்து இறங்கியபோது, சற்று நேரத்தில் அமளி அனைத்தும் அடங்கியது. சகோதரர் மீண்டும் தனது பிரசங்கத்தைத் தொடங்கினார். அந்தகாரத்தின் தந்திரத்தை அன்று நான் அறிந்துகொண்டேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...