முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணே! உங்க கூட ஒரு படம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 38

அண்ணே! உங்க கூட ஒரு படம்


 

சென்னையைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் ஜெம்ஸ் ஊழியங்களையும், பணித்தளங்களையும் பார்வையிடும்படியாக பீஹார் வருகைதந்திருந்தனர். பணித்தளங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, குழுவாக ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலுள்ள ஜெம்ஸ் வளாகத்திற்கு வருகை தந்தனர். சிக்காரியா பணித்தள ஊழிய அலுவலகங்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்வையிட்ட அவர்கள், ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தினுள் நின்றுகொண்டிருந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அக்குழுவில் பெண்களே அதிகம் காணப்பட்டனர். ஊழியங்களைக் குறித்து பரஸ்பரம் பேசி முடித்த பின்னர், சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். அப்போது, நானும் ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தின் உள்ளே அவர்கள் அருகிலே நின்றுகொண்டிருந்தேன். குழுவிலிருந்த தாயார் ஒருவர், புகைப்படம் எடுக்கும்படி தனது கேமராவை என்னிடத்தில் நீட்டினார். அப்போது நான், அந்த தாயாரிடம்: 'அம்மா, உங்களிடம் இருக்கின்ற கேமராவினை விட என்னிடம் இருக்கின்ற இந்தக் கேமராவில் எடுத்தால் மிக நன்றாக இருக்கும், எனவே. என்னுடைய கேமராவிலேயே எடுத்து அதனை உங்களுக்கு அனுப்பித் தருகிறேன்' என்று சொல்லி, அவருடைய கேமராவை வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். எல்லோரும் நின்று நான் புகைப்படம் எடுத்து முடிந்த பின்னர், அந்தத் தாயார் தானே வந்து, தனது கேமராவில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைக் கண்டபோது, நான் எனது தவற்றினை உணர்ந்தேன், அந்தத் தாயின் விருப்பப்படி அவருடைய கேமராவிலும் ஒரு படம் எடுத்துக்கொடுத்திருக்கலாமே என்று நினைத்தேன். நான் படமெடுத்து முடிந்ததும், அனைவரும் கலைந்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர். அப்போது அதே தாயார் சகோதரரிடத்தில் வந்து, 'அண்ணன், உங்களோடு கூட ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்' என்று சொன்னார். சகோதரரோ, 'பெண்கள் யாருடனும் நான் தனியாக நின்று படம் எடுக்கிறதில்லை, இது எனது வழக்கம்' என்று திட்டமாகச் சொன்னார். என்றபோதிலும், அந்தத் தாயார் தொடர்ந்து சகோதரரைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்; நரைத்த முடியுடன் இருந்த அந்தத் தாயின் விருப்பத்தைக் கண்ட சகோதரர் சற்று தளர்ந்தார், அந்தத் தாயின் விருப்பப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்தார்; அந்தப் படத்தினை அந்தத் தாயாருடைய கேமராவில் நானே எடுத்தேன். இறுக்கமாக இருந்தபோதிலும், இளகிய சகோதரரைக் கண்டபோது, என் செயல் என் நினைவை வாட்டியது. பிறரது விருப்பத்தை ஏற்கும் சகோதரரின் மனநிலைகூட என்னிடம் இல்லாமல் போய்விட்டதே என்று அன்று மனம் வருந்தினேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...