Skip to main content

அண்ணே! உங்க கூட ஒரு படம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 38

அண்ணே! உங்க கூட ஒரு படம்


 

சென்னையைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் ஜெம்ஸ் ஊழியங்களையும், பணித்தளங்களையும் பார்வையிடும்படியாக பீஹார் வருகைதந்திருந்தனர். பணித்தளங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, குழுவாக ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலுள்ள ஜெம்ஸ் வளாகத்திற்கு வருகை தந்தனர். சிக்காரியா பணித்தள ஊழிய அலுவலகங்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்வையிட்ட அவர்கள், ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தினுள் நின்றுகொண்டிருந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அக்குழுவில் பெண்களே அதிகம் காணப்பட்டனர். ஊழியங்களைக் குறித்து பரஸ்பரம் பேசி முடித்த பின்னர், சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். அப்போது, நானும் ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தின் உள்ளே அவர்கள் அருகிலே நின்றுகொண்டிருந்தேன். குழுவிலிருந்த தாயார் ஒருவர், புகைப்படம் எடுக்கும்படி தனது கேமராவை என்னிடத்தில் நீட்டினார். அப்போது நான், அந்த தாயாரிடம்: 'அம்மா, உங்களிடம் இருக்கின்ற கேமராவினை விட என்னிடம் இருக்கின்ற இந்தக் கேமராவில் எடுத்தால் மிக நன்றாக இருக்கும், எனவே. என்னுடைய கேமராவிலேயே எடுத்து அதனை உங்களுக்கு அனுப்பித் தருகிறேன்' என்று சொல்லி, அவருடைய கேமராவை வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். எல்லோரும் நின்று நான் புகைப்படம் எடுத்து முடிந்த பின்னர், அந்தத் தாயார் தானே வந்து, தனது கேமராவில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைக் கண்டபோது, நான் எனது தவற்றினை உணர்ந்தேன், அந்தத் தாயின் விருப்பப்படி அவருடைய கேமராவிலும் ஒரு படம் எடுத்துக்கொடுத்திருக்கலாமே என்று நினைத்தேன். நான் படமெடுத்து முடிந்ததும், அனைவரும் கலைந்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர். அப்போது அதே தாயார் சகோதரரிடத்தில் வந்து, 'அண்ணன், உங்களோடு கூட ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்' என்று சொன்னார். சகோதரரோ, 'பெண்கள் யாருடனும் நான் தனியாக நின்று படம் எடுக்கிறதில்லை, இது எனது வழக்கம்' என்று திட்டமாகச் சொன்னார். என்றபோதிலும், அந்தத் தாயார் தொடர்ந்து சகோதரரைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்; நரைத்த முடியுடன் இருந்த அந்தத் தாயின் விருப்பத்தைக் கண்ட சகோதரர் சற்று தளர்ந்தார், அந்தத் தாயின் விருப்பப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்தார்; அந்தப் படத்தினை அந்தத் தாயாருடைய கேமராவில் நானே எடுத்தேன். இறுக்கமாக இருந்தபோதிலும், இளகிய சகோதரரைக் கண்டபோது, என் செயல் என் நினைவை வாட்டியது. பிறரது விருப்பத்தை ஏற்கும் சகோதரரின் மனநிலைகூட என்னிடம் இல்லாமல் போய்விட்டதே என்று அன்று மனம் வருந்தினேன். 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை