முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணே! உங்க கூட ஒரு படம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்        

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 38

அண்ணே! உங்க கூட ஒரு படம்


 

சென்னையைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் ஜெம்ஸ் ஊழியங்களையும், பணித்தளங்களையும் பார்வையிடும்படியாக பீஹார் வருகைதந்திருந்தனர். பணித்தளங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, குழுவாக ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலுள்ள ஜெம்ஸ் வளாகத்திற்கு வருகை தந்தனர். சிக்காரியா பணித்தள ஊழிய அலுவலகங்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்வையிட்ட அவர்கள், ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தினுள் நின்றுகொண்டிருந்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அக்குழுவில் பெண்களே அதிகம் காணப்பட்டனர். ஊழியங்களைக் குறித்து பரஸ்பரம் பேசி முடித்த பின்னர், சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். அப்போது, நானும் ஜெம்ஸ் ஆடிட்டோரியத்தின் உள்ளே அவர்கள் அருகிலே நின்றுகொண்டிருந்தேன். குழுவிலிருந்த தாயார் ஒருவர், புகைப்படம் எடுக்கும்படி தனது கேமராவை என்னிடத்தில் நீட்டினார். அப்போது நான், அந்த தாயாரிடம்: 'அம்மா, உங்களிடம் இருக்கின்ற கேமராவினை விட என்னிடம் இருக்கின்ற இந்தக் கேமராவில் எடுத்தால் மிக நன்றாக இருக்கும், எனவே. என்னுடைய கேமராவிலேயே எடுத்து அதனை உங்களுக்கு அனுப்பித் தருகிறேன்' என்று சொல்லி, அவருடைய கேமராவை வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். எல்லோரும் நின்று நான் புகைப்படம் எடுத்து முடிந்த பின்னர், அந்தத் தாயார் தானே வந்து, தனது கேமராவில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைக் கண்டபோது, நான் எனது தவற்றினை உணர்ந்தேன், அந்தத் தாயின் விருப்பப்படி அவருடைய கேமராவிலும் ஒரு படம் எடுத்துக்கொடுத்திருக்கலாமே என்று நினைத்தேன். நான் படமெடுத்து முடிந்ததும், அனைவரும் கலைந்து ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தனர். அப்போது அதே தாயார் சகோதரரிடத்தில் வந்து, 'அண்ணன், உங்களோடு கூட ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன்' என்று சொன்னார். சகோதரரோ, 'பெண்கள் யாருடனும் நான் தனியாக நின்று படம் எடுக்கிறதில்லை, இது எனது வழக்கம்' என்று திட்டமாகச் சொன்னார். என்றபோதிலும், அந்தத் தாயார் தொடர்ந்து சகோதரரைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்; நரைத்த முடியுடன் இருந்த அந்தத் தாயின் விருப்பத்தைக் கண்ட சகோதரர் சற்று தளர்ந்தார், அந்தத் தாயின் விருப்பப்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள சம்மதித்தார்; அந்தப் படத்தினை அந்தத் தாயாருடைய கேமராவில் நானே எடுத்தேன். இறுக்கமாக இருந்தபோதிலும், இளகிய சகோதரரைக் கண்டபோது, என் செயல் என் நினைவை வாட்டியது. பிறரது விருப்பத்தை ஏற்கும் சகோதரரின் மனநிலைகூட என்னிடம் இல்லாமல் போய்விட்டதே என்று அன்று மனம் வருந்தினேன். 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...