Skip to main content

எதிரியின் ஏவுகணை

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 22

எதிரியின் ஏவுகணை

 

சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவரது அலுவலகத்தில், அலுவலகப் பணியின் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றிருந்தேன். அது ஒரு மாலைப் பொழுது, சகோதரர் இருக்கையில் அமர்ந்தவாறு, தனக்கு வந்திருந்த கடிதங்களைப் வாசித்துக்கொண்டிருந்தார். எதிர் இருக்கையில் என்னை அமரச் சொல்லிய அவர், எனது வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டு இடையிடையே தனக்கு வந்த கடிதங்களையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும், தானே வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அவர். சில கடிதங்களை தனது உதவியாளரை அழைத்து, அவைகளுக்குப் பதில் எழுதும்படிச் சொன்னார். சில கடிதங்களின் மேல் குறிப்புகளை எழுதியவாறு தனது மேஜையிலேயே ஒரு முனையில் வைத்தார்; என்னுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். அப்பொழுது, ஒரு கடிதத்தை கையிலெடுத்த அவர், அதனை அப்படியே பார்த்துவிட்டு கிழித்துப் போட்டார். இதனைக் கண்ட நான், 'அண்ணன், அந்தக் கடிதத்தை இவ்வளவு சீக்கிரத்தில் வாசித்து முடித்துவிட்டீர்களா, உடனே ஏன் கிழித்துப்போட்டுவிட்டீர்கள்' என்று கேட்டேன். அதற்கு சகோதரர், இந்தக் கடிதம் எனது மனதைக் கெடுத்துவிடும். இந்த மனிதருக்கு என்னைத் திட்டி கெட்ட கெட்ட வார்த்தைகளினால் கடிதம் எழுதுவதே வழக்கமாகிவிட்டது. கடிதத்தைப் பார்த்தவுடன் அவர் என்ன எழுதியிருப்பார் என்று எனக்குத் தெரியும். வைராக்கியமாய் பிரசங்கிக்கும் என்னைத் திட்டி கெட்ட வார்த்தைகளால் விமர்சித்தே தொடர்ந்து கடிதங்களை எழுதுகின்றார். என் பிரசங்கத்தைக் குறித்தோ, ஊழியத்தைக் குறித்தோ விமர்சித்து எழுதினால் வாசிக்கலாம்; ஆனால், அசிங்கமான கெட்ட வார்த்தைகளை எழுதுவதால் அதனை வாசிக்க நான் விரும்புவதில்லை. இந்தக் கடிதத்தை வைத்திருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தாலோ, வாசித்துக்கொண்டிருந்தாலோ எனது சிந்தனை திசை திரும்பிவிடும், அவரது கடிதம் எனது மனதில் பதிந்துவிடும். அது என் மனதை விட்டு நீங்குவதற்கு ஆறு முதல் ஒரு வருடங்கள் ஆகும். கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கிக்கும் நான், இத்தகைய கடிதங்களால் என் இருதயத்தைக் கறைபடுத்த விரும்பவில்லை. அக்கடிதத்தை வேறு யாராவது வாசித்தாலும், அவர்களது மனதில் அது பதிந்துவிடும். எனவே, நானே அதனைக் கிழித்துப்போட்டுவிடுவேன் என்றார். சுவிசேஷத்தின் வசனத்தைச் சுமந்து செல்லும் மிஷனரியின் மனம், எதிரியின் ஏவுகணைகளைச் சுமந்து கறைபடக்கூடாது என்பது ஓர் நல்ல செய்தி. 


www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை