முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிரியின் ஏவுகணை

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 22

எதிரியின் ஏவுகணை

 

சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவரது அலுவலகத்தில், அலுவலகப் பணியின் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றிருந்தேன். அது ஒரு மாலைப் பொழுது, சகோதரர் இருக்கையில் அமர்ந்தவாறு, தனக்கு வந்திருந்த கடிதங்களைப் வாசித்துக்கொண்டிருந்தார். எதிர் இருக்கையில் என்னை அமரச் சொல்லிய அவர், எனது வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டு இடையிடையே தனக்கு வந்த கடிதங்களையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும், தானே வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அவர். சில கடிதங்களை தனது உதவியாளரை அழைத்து, அவைகளுக்குப் பதில் எழுதும்படிச் சொன்னார். சில கடிதங்களின் மேல் குறிப்புகளை எழுதியவாறு தனது மேஜையிலேயே ஒரு முனையில் வைத்தார்; என்னுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். அப்பொழுது, ஒரு கடிதத்தை கையிலெடுத்த அவர், அதனை அப்படியே பார்த்துவிட்டு கிழித்துப் போட்டார். இதனைக் கண்ட நான், 'அண்ணன், அந்தக் கடிதத்தை இவ்வளவு சீக்கிரத்தில் வாசித்து முடித்துவிட்டீர்களா, உடனே ஏன் கிழித்துப்போட்டுவிட்டீர்கள்' என்று கேட்டேன். அதற்கு சகோதரர், இந்தக் கடிதம் எனது மனதைக் கெடுத்துவிடும். இந்த மனிதருக்கு என்னைத் திட்டி கெட்ட கெட்ட வார்த்தைகளினால் கடிதம் எழுதுவதே வழக்கமாகிவிட்டது. கடிதத்தைப் பார்த்தவுடன் அவர் என்ன எழுதியிருப்பார் என்று எனக்குத் தெரியும். வைராக்கியமாய் பிரசங்கிக்கும் என்னைத் திட்டி கெட்ட வார்த்தைகளால் விமர்சித்தே தொடர்ந்து கடிதங்களை எழுதுகின்றார். என் பிரசங்கத்தைக் குறித்தோ, ஊழியத்தைக் குறித்தோ விமர்சித்து எழுதினால் வாசிக்கலாம்; ஆனால், அசிங்கமான கெட்ட வார்த்தைகளை எழுதுவதால் அதனை வாசிக்க நான் விரும்புவதில்லை. இந்தக் கடிதத்தை வைத்திருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தாலோ, வாசித்துக்கொண்டிருந்தாலோ எனது சிந்தனை திசை திரும்பிவிடும், அவரது கடிதம் எனது மனதில் பதிந்துவிடும். அது என் மனதை விட்டு நீங்குவதற்கு ஆறு முதல் ஒரு வருடங்கள் ஆகும். கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கிக்கும் நான், இத்தகைய கடிதங்களால் என் இருதயத்தைக் கறைபடுத்த விரும்பவில்லை. அக்கடிதத்தை வேறு யாராவது வாசித்தாலும், அவர்களது மனதில் அது பதிந்துவிடும். எனவே, நானே அதனைக் கிழித்துப்போட்டுவிடுவேன் என்றார். சுவிசேஷத்தின் வசனத்தைச் சுமந்து செல்லும் மிஷனரியின் மனம், எதிரியின் ஏவுகணைகளைச் சுமந்து கறைபடக்கூடாது என்பது ஓர் நல்ல செய்தி. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...