முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிரியின் ஏவுகணை

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 22

எதிரியின் ஏவுகணை

 

சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவரது அலுவலகத்தில், அலுவலகப் பணியின் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றிருந்தேன். அது ஒரு மாலைப் பொழுது, சகோதரர் இருக்கையில் அமர்ந்தவாறு, தனக்கு வந்திருந்த கடிதங்களைப் வாசித்துக்கொண்டிருந்தார். எதிர் இருக்கையில் என்னை அமரச் சொல்லிய அவர், எனது வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டு இடையிடையே தனக்கு வந்த கடிதங்களையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும், தானே வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அவர். சில கடிதங்களை தனது உதவியாளரை அழைத்து, அவைகளுக்குப் பதில் எழுதும்படிச் சொன்னார். சில கடிதங்களின் மேல் குறிப்புகளை எழுதியவாறு தனது மேஜையிலேயே ஒரு முனையில் வைத்தார்; என்னுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். அப்பொழுது, ஒரு கடிதத்தை கையிலெடுத்த அவர், அதனை அப்படியே பார்த்துவிட்டு கிழித்துப் போட்டார். இதனைக் கண்ட நான், 'அண்ணன், அந்தக் கடிதத்தை இவ்வளவு சீக்கிரத்தில் வாசித்து முடித்துவிட்டீர்களா, உடனே ஏன் கிழித்துப்போட்டுவிட்டீர்கள்' என்று கேட்டேன். அதற்கு சகோதரர், இந்தக் கடிதம் எனது மனதைக் கெடுத்துவிடும். இந்த மனிதருக்கு என்னைத் திட்டி கெட்ட கெட்ட வார்த்தைகளினால் கடிதம் எழுதுவதே வழக்கமாகிவிட்டது. கடிதத்தைப் பார்த்தவுடன் அவர் என்ன எழுதியிருப்பார் என்று எனக்குத் தெரியும். வைராக்கியமாய் பிரசங்கிக்கும் என்னைத் திட்டி கெட்ட வார்த்தைகளால் விமர்சித்தே தொடர்ந்து கடிதங்களை எழுதுகின்றார். என் பிரசங்கத்தைக் குறித்தோ, ஊழியத்தைக் குறித்தோ விமர்சித்து எழுதினால் வாசிக்கலாம்; ஆனால், அசிங்கமான கெட்ட வார்த்தைகளை எழுதுவதால் அதனை வாசிக்க நான் விரும்புவதில்லை. இந்தக் கடிதத்தை வைத்திருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தாலோ, வாசித்துக்கொண்டிருந்தாலோ எனது சிந்தனை திசை திரும்பிவிடும், அவரது கடிதம் எனது மனதில் பதிந்துவிடும். அது என் மனதை விட்டு நீங்குவதற்கு ஆறு முதல் ஒரு வருடங்கள் ஆகும். கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கிக்கும் நான், இத்தகைய கடிதங்களால் என் இருதயத்தைக் கறைபடுத்த விரும்பவில்லை. அக்கடிதத்தை வேறு யாராவது வாசித்தாலும், அவர்களது மனதில் அது பதிந்துவிடும். எனவே, நானே அதனைக் கிழித்துப்போட்டுவிடுவேன் என்றார். சுவிசேஷத்தின் வசனத்தைச் சுமந்து செல்லும் மிஷனரியின் மனம், எதிரியின் ஏவுகணைகளைச் சுமந்து கறைபடக்கூடாது என்பது ஓர் நல்ல செய்தி. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...