முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிரியின் ஏவுகணை

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 22

எதிரியின் ஏவுகணை

 

சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை அவரது அலுவலகத்தில், அலுவலகப் பணியின் நிமித்தமாகச் சந்திக்கச் சென்றிருந்தேன். அது ஒரு மாலைப் பொழுது, சகோதரர் இருக்கையில் அமர்ந்தவாறு, தனக்கு வந்திருந்த கடிதங்களைப் வாசித்துக்கொண்டிருந்தார். எதிர் இருக்கையில் என்னை அமரச் சொல்லிய அவர், எனது வார்த்தைகளையும் கேட்டுக்கொண்டு இடையிடையே தனக்கு வந்த கடிதங்களையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்தையும், தானே வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் அவர். சில கடிதங்களை தனது உதவியாளரை அழைத்து, அவைகளுக்குப் பதில் எழுதும்படிச் சொன்னார். சில கடிதங்களின் மேல் குறிப்புகளை எழுதியவாறு தனது மேஜையிலேயே ஒரு முனையில் வைத்தார்; என்னுடனும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். அப்பொழுது, ஒரு கடிதத்தை கையிலெடுத்த அவர், அதனை அப்படியே பார்த்துவிட்டு கிழித்துப் போட்டார். இதனைக் கண்ட நான், 'அண்ணன், அந்தக் கடிதத்தை இவ்வளவு சீக்கிரத்தில் வாசித்து முடித்துவிட்டீர்களா, உடனே ஏன் கிழித்துப்போட்டுவிட்டீர்கள்' என்று கேட்டேன். அதற்கு சகோதரர், இந்தக் கடிதம் எனது மனதைக் கெடுத்துவிடும். இந்த மனிதருக்கு என்னைத் திட்டி கெட்ட கெட்ட வார்த்தைகளினால் கடிதம் எழுதுவதே வழக்கமாகிவிட்டது. கடிதத்தைப் பார்த்தவுடன் அவர் என்ன எழுதியிருப்பார் என்று எனக்குத் தெரியும். வைராக்கியமாய் பிரசங்கிக்கும் என்னைத் திட்டி கெட்ட வார்த்தைகளால் விமர்சித்தே தொடர்ந்து கடிதங்களை எழுதுகின்றார். என் பிரசங்கத்தைக் குறித்தோ, ஊழியத்தைக் குறித்தோ விமர்சித்து எழுதினால் வாசிக்கலாம்; ஆனால், அசிங்கமான கெட்ட வார்த்தைகளை எழுதுவதால் அதனை வாசிக்க நான் விரும்புவதில்லை. இந்தக் கடிதத்தை வைத்திருந்தாலோ அல்லது திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருந்தாலோ, வாசித்துக்கொண்டிருந்தாலோ எனது சிந்தனை திசை திரும்பிவிடும், அவரது கடிதம் எனது மனதில் பதிந்துவிடும். அது என் மனதை விட்டு நீங்குவதற்கு ஆறு முதல் ஒரு வருடங்கள் ஆகும். கர்த்தருடைய வசனத்தைப் பிரசங்கிக்கும் நான், இத்தகைய கடிதங்களால் என் இருதயத்தைக் கறைபடுத்த விரும்பவில்லை. அக்கடிதத்தை வேறு யாராவது வாசித்தாலும், அவர்களது மனதில் அது பதிந்துவிடும். எனவே, நானே அதனைக் கிழித்துப்போட்டுவிடுவேன் என்றார். சுவிசேஷத்தின் வசனத்தைச் சுமந்து செல்லும் மிஷனரியின் மனம், எதிரியின் ஏவுகணைகளைச் சுமந்து கறைபடக்கூடாது என்பது ஓர் நல்ல செய்தி. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...