Skip to main content

கல்லெடுத்த சிறு கைகள்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

                              

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 47

கல்லெடுத்த சிறு கைகள்


 

23 ஜுலை 2014 அன்று காலை சுமார் 11.10 மணி, செப்டம்பர் 2014 மாதத்தின் ஜெம்ஸ் சத்தம் பத்திரிக்கையில் வெளிவரவிருக்கும் சகோதரி ரூபலேகா ஜெபக்குமார் எழுதிய 'திருப்தியான வாழ்வு' என்ற செய்தியினைக் காட்டுவதற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் அலுவலக அறைக்குள் நுழைந்தேன். அதனைக் கையில் வாங்கிக்கொண்ட அவர், திடீரென, அன்று காலை ஜெம்ஸ் வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் தான் பகிர்ந்துகொண்ட தியானச் செய்தியை என்னுடன் பகிர்ந்துகொள்ளத்தொடங்கினார். 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்' என்று இயேசு சொன்னது எப்போது? என்று என்னிடத்தில் சகோதரர் கேட்டபோது, பதில் ஏதும் நான் சொல்லாமல், அத்தனையும் அவரிடமிருந்தே வெளிவரட்டும் எனக் காத்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லப்போகும் வேத தியானத்தைக் கேட்க ஆயத்தமானேன். அப்போது அவர்: விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்ட ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் கல்லெறியும்படி இயேசுவினிடத்தில் கொண்டுவந்த சம்பவத்தைக் குறித்து (யோவான் 8:3-9) பேசிக்கொண்டிருந்தார். ஸ்திரீயை இயேசுவுக்கு முன்பாக நிறுத்தி, நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறியப்படவேண்டும் என்று மோசேயின் வார்த்தைகளை அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, இயேசுவோ, 'உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்' என்று சொல்லி, குனிந்து தரையிலே எழுதினார். அப்போது, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள் (யோவா 8:9) என்று வேதத்தில் போடப்பட்டிருக்கின்றதே. ஒருவேளை, பெரியோர் தங்கள் பாவங்களை உணர்ந்து போயிருக்கலாம்; ஆனால், சிறியவர்களும் அங்கு கல்லெறிய வந்திருந்தார்களே; சிறியவர்கள் அங்கு வந்ததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியை முன் வைத்தார். பெரியவர்கள் என்ன செய்கின்றார்களோ அதையே செய்யும் சிறுவர்கள் இவர்கள் என்று சொன்னார். என்னவென்றும், எதற்கென்றும் தெரியாது ஆனால், பெரியவர்களின் செய்கைகளைப் பார்த்து அப்படியே செய்பவர்கள் அவர்கள் என்று சொன்னர். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், நாம் என்ன செய்கின்றோமோ அதைத்தான் நம்மைத் தொடருவோரும் செய்வார்கள்; எனவே, நாம் நமது செய்கைகளில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தார். நாம் பாதையில் நடப்பவர்கள் மாத்திரமல்ல, பாதை காட்டுபவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை சகோதரரின் சந்திப்பு நினைப்பூட்டியது.

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் (1கொரி. 11:1,2) என்ற பவுலின் வார்த்தைகளை நானும் சொல்லத் தகுதியாகவேண்டுமே என அப்போது நினைத்தேன். 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை