முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரியான இடம், சரியான ஊழியன்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்       


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 49

சரியான இடம், சரியான ஊழியன்


 

2002-ம் ஆண்டு நான் பீஹாரில் ஜெம்ஸ் ஊழியத்தில் இணைந்தேன். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை கருவந்தியா பவணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஊழியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். வாலிபர்கள் மத்தியில் பணிபுரிவது எனக்கு விருப்பமான அழைப்பு என்பதால், தொழிற்பயிற்சி மையத்தின் மாணவர்களை பணித்தளத்தின் ஆத்துமாக்களாகக் கருதி எனது பணியினைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். 2004-ம் ஆண்டு எனக்குத் திருமணம் ஆனது. திருமணம் முடிந்து மனைவியுடன் நான் தூத்துக்குடியிலிருந்து பீஹார் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்ட சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், 'தம்பி, நீங்க சிக்காரியா பணித்தளத்திலேயே இறங்கிவிடுங்கள்' என்று சொன்னார். 'சரி அண்ணன்' என்ற பதிலுடன், டெஹ்ரி ஆன் சோன் ரயில் நிலையத்தில் இறங்கி, மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினருடன் சிக்காரியா பணித்தளத்திற்கு வந்து சேர்ந்தேன். ஓரிரு நாட்கள், விருந்தினர் விடுதியிலேயே தங்கியிருந்தேன். அப்போது என்னைச் சந்தித்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் 'கிருபா, உங்களை ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன், உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்டார். நானோ பொறியியல் பயின்றவன், எனினும் சகோதரரிடம், 'அண்ணன், 'உங்களது விருப்பமே, எனது விருப்பம்' என்று பதில் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டேன். எனது மனைவி ஜெம்ஸ் ஆங்கிலப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டாள். ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டபோது, சகோ.பிரைட் கென்னடி மீடியா துறையின் மீடியா துறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். சகோ.ஞானராஜ், சகோ பெல்ஷாத், சகோ.பிரபாகரன் ஆகியோர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். துறையில் புலம் பெற்ற இத்தகையோருடன் இணைந்து ஓடுவது எனக்கு எப்படி சாத்தியமாகுமோ என்ற கலக்கம் எனக்கு தொடக்கத்தில் உண்டானது. தொடர்ந்து வந்த நாட்களில், மேற்கண்ட அனைவரும் வெவ்வேறு பணித்தளத்திற்கு மாறுதலாகிச் சென்றதால், ஜெம்ஸ் வெளியீட்டுத் துறை ஒருங்கிணைப்பாளராக நான் பணியில் அமர்த்தப்பட்டேன். அன்று முதல் எனக்குள் இருந்த எழுத்து தாலந்து மேலும் கர்த்தரால் வளர்க்கப்பட்டதை அறிந்தேன். எங்கும் சென்று தட்டச்சு பயிலாத எனது விரல்களை யுத்தத்திற்குப் பழக்குவித்தார் தேவன். எழுதிக்கொண்டிருந்த என்னை எழுத்தாளனாகவே மாற்றியது இந்த பணிமாற்றமே. சரியான இடத்தில், சரியான ஊழியரைப் பணியில் அமர்த்துபவராக சகோதரரைப் புரிந்துகொண்டேன். 
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.(சங் 144:1)

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...