Skip to main content

சரியான இடம், சரியான ஊழியன்

 

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்       


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 49

சரியான இடம், சரியான ஊழியன்


 

2002-ம் ஆண்டு நான் பீஹாரில் ஜெம்ஸ் ஊழியத்தில் இணைந்தேன். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை கருவந்தியா பவணித்தளத்தில் உள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஊழியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். வாலிபர்கள் மத்தியில் பணிபுரிவது எனக்கு விருப்பமான அழைப்பு என்பதால், தொழிற்பயிற்சி மையத்தின் மாணவர்களை பணித்தளத்தின் ஆத்துமாக்களாகக் கருதி எனது பணியினைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். 2004-ம் ஆண்டு எனக்குத் திருமணம் ஆனது. திருமணம் முடிந்து மனைவியுடன் நான் தூத்துக்குடியிலிருந்து பீஹார் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்ட சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார், 'தம்பி, நீங்க சிக்காரியா பணித்தளத்திலேயே இறங்கிவிடுங்கள்' என்று சொன்னார். 'சரி அண்ணன்' என்ற பதிலுடன், டெஹ்ரி ஆன் சோன் ரயில் நிலையத்தில் இறங்கி, மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினருடன் சிக்காரியா பணித்தளத்திற்கு வந்து சேர்ந்தேன். ஓரிரு நாட்கள், விருந்தினர் விடுதியிலேயே தங்கியிருந்தேன். அப்போது என்னைச் சந்தித்த சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் 'கிருபா, உங்களை ஜெம்ஸ் வெளியீட்டுத் துறைக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன், உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்டார். நானோ பொறியியல் பயின்றவன், எனினும் சகோதரரிடம், 'அண்ணன், 'உங்களது விருப்பமே, எனது விருப்பம்' என்று பதில் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டேன். எனது மனைவி ஜெம்ஸ் ஆங்கிலப்பள்ளியில் பணியமர்த்தப்பட்டாள். ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியமர்த்தப்பட்டபோது, சகோ.பிரைட் கென்னடி மீடியா துறையின் மீடியா துறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். சகோ.ஞானராஜ், சகோ பெல்ஷாத், சகோ.பிரபாகரன் ஆகியோர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். துறையில் புலம் பெற்ற இத்தகையோருடன் இணைந்து ஓடுவது எனக்கு எப்படி சாத்தியமாகுமோ என்ற கலக்கம் எனக்கு தொடக்கத்தில் உண்டானது. தொடர்ந்து வந்த நாட்களில், மேற்கண்ட அனைவரும் வெவ்வேறு பணித்தளத்திற்கு மாறுதலாகிச் சென்றதால், ஜெம்ஸ் வெளியீட்டுத் துறை ஒருங்கிணைப்பாளராக நான் பணியில் அமர்த்தப்பட்டேன். அன்று முதல் எனக்குள் இருந்த எழுத்து தாலந்து மேலும் கர்த்தரால் வளர்க்கப்பட்டதை அறிந்தேன். எங்கும் சென்று தட்டச்சு பயிலாத எனது விரல்களை யுத்தத்திற்குப் பழக்குவித்தார் தேவன். எழுதிக்கொண்டிருந்த என்னை எழுத்தாளனாகவே மாற்றியது இந்த பணிமாற்றமே. சரியான இடத்தில், சரியான ஊழியரைப் பணியில் அமர்த்துபவராக சகோதரரைப் புரிந்துகொண்டேன். 
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.(சங் 144:1)

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை