முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈச்சமரம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


 உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 3

 ஈச்சமரம்


 

ஜெம்ஸ் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களை நேரில் காணவும், பங்குபெறவும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். ஒரு நாள் காலைப் பொழுதில், பணித்தளங்களைச் சுற்றிப் பார்க்க அவர்கள் புறப்படுவதற்கு முன், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது வீட்டின் முற்புறத்தில் சகோதரருடன் குழுவாக நின்றவாறு உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது, நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வழியில் குழுவுடன் நின்றுகொண்டிருந்த சகோதரரைக் கண்டதும், காலை வணக்கம் சொல்லிவிட்டு தொடர்ந்து நடக்க முற்பட்ட என்னை, சகோதரர் 'கிருபா இங்க வாங்க' என்று அழைத்தார். உடனே நான் அங்கு விரைந்து சென்று, அக்குழுவினருடன் நின்றுகொண்டு, சகோதரர் பேசுவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது சகோதரர் சிங்கப்பூர் ஜெபப் பங்காளர்களை நோக்கி, 'பனையில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?, ஈச்ச மரத்தில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். எல்லாரும் மௌனமாய் நின்றுகொண்டிருந்தோம். அப்போது சகோதரர், பனை மரத்தில் கள் எடுப்பவர்கள் அதில் கலையத்தைத் தொங்கவிட்டுவிடுவார்கள் தானாக வடியும் பதனீரை எடுத்துக்கொண்டு வருவார்கள்; ஆனால், ஈச்சமரத்தில் கள் எடுப்பவர்கள் சிலர் மரத்தையே அறுத்து அறுத்து கள் எடுப்பார்கள்;கிருபாகரன் ஈச்சமரத்தில் கள் எடுக்கிற ஆள். அநேக காரியங்களை தன்னார்வமாக என்னிடம் கேட்டு கேட்டு அறிந்துகொள்பவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். ஆம், உயர்ந்து நிற்போரின் தனி வாழ்வின் ஆத்மீக வாழ்வின் ரகசியத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவன் நான். வெட்டியதில் குடிப்பவனல்ல, வெட்டியும் குடிப்பேன் நான் என்று அன்று எனக்குத் தெளிவாயிற்று. உங்கள் தாகம் தீர, தரட்டும் நீர் மற்றவரென காத்திருக்கவேண்டாம், மனமிருந்தால் மார்க்கமுண்டு. தண்ணீர் இறைக்கத்தான் நமக்குத் திறன் வேண்டும்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்

       சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 9 தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்   2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமத...