முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈச்சமரம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


 உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 3

 ஈச்சமரம்


 

ஜெம்ஸ் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களை நேரில் காணவும், பங்குபெறவும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். ஒரு நாள் காலைப் பொழுதில், பணித்தளங்களைச் சுற்றிப் பார்க்க அவர்கள் புறப்படுவதற்கு முன், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது வீட்டின் முற்புறத்தில் சகோதரருடன் குழுவாக நின்றவாறு உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது, நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வழியில் குழுவுடன் நின்றுகொண்டிருந்த சகோதரரைக் கண்டதும், காலை வணக்கம் சொல்லிவிட்டு தொடர்ந்து நடக்க முற்பட்ட என்னை, சகோதரர் 'கிருபா இங்க வாங்க' என்று அழைத்தார். உடனே நான் அங்கு விரைந்து சென்று, அக்குழுவினருடன் நின்றுகொண்டு, சகோதரர் பேசுவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது சகோதரர் சிங்கப்பூர் ஜெபப் பங்காளர்களை நோக்கி, 'பனையில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?, ஈச்ச மரத்தில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். எல்லாரும் மௌனமாய் நின்றுகொண்டிருந்தோம். அப்போது சகோதரர், பனை மரத்தில் கள் எடுப்பவர்கள் அதில் கலையத்தைத் தொங்கவிட்டுவிடுவார்கள் தானாக வடியும் பதனீரை எடுத்துக்கொண்டு வருவார்கள்; ஆனால், ஈச்சமரத்தில் கள் எடுப்பவர்கள் சிலர் மரத்தையே அறுத்து அறுத்து கள் எடுப்பார்கள்;கிருபாகரன் ஈச்சமரத்தில் கள் எடுக்கிற ஆள். அநேக காரியங்களை தன்னார்வமாக என்னிடம் கேட்டு கேட்டு அறிந்துகொள்பவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். ஆம், உயர்ந்து நிற்போரின் தனி வாழ்வின் ஆத்மீக வாழ்வின் ரகசியத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவன் நான். வெட்டியதில் குடிப்பவனல்ல, வெட்டியும் குடிப்பேன் நான் என்று அன்று எனக்குத் தெளிவாயிற்று. உங்கள் தாகம் தீர, தரட்டும் நீர் மற்றவரென காத்திருக்கவேண்டாம், மனமிருந்தால் மார்க்கமுண்டு. தண்ணீர் இறைக்கத்தான் நமக்குத் திறன் வேண்டும்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...