Skip to main content

ஈச்சமரம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


 உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 3

 ஈச்சமரம்


 

ஜெம்ஸ் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களை நேரில் காணவும், பங்குபெறவும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெபப் பங்காளர்கள் சிலர் பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். ஒரு நாள் காலைப் பொழுதில், பணித்தளங்களைச் சுற்றிப் பார்க்க அவர்கள் புறப்படுவதற்கு முன், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களது வீட்டின் முற்புறத்தில் சகோதரருடன் குழுவாக நின்றவாறு உரையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது, நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வழியில் குழுவுடன் நின்றுகொண்டிருந்த சகோதரரைக் கண்டதும், காலை வணக்கம் சொல்லிவிட்டு தொடர்ந்து நடக்க முற்பட்ட என்னை, சகோதரர் 'கிருபா இங்க வாங்க' என்று அழைத்தார். உடனே நான் அங்கு விரைந்து சென்று, அக்குழுவினருடன் நின்றுகொண்டு, சகோதரர் பேசுவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது சகோதரர் சிங்கப்பூர் ஜெபப் பங்காளர்களை நோக்கி, 'பனையில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?, ஈச்ச மரத்தில் கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். எல்லாரும் மௌனமாய் நின்றுகொண்டிருந்தோம். அப்போது சகோதரர், பனை மரத்தில் கள் எடுப்பவர்கள் அதில் கலையத்தைத் தொங்கவிட்டுவிடுவார்கள் தானாக வடியும் பதனீரை எடுத்துக்கொண்டு வருவார்கள்; ஆனால், ஈச்சமரத்தில் கள் எடுப்பவர்கள் சிலர் மரத்தையே அறுத்து அறுத்து கள் எடுப்பார்கள்;கிருபாகரன் ஈச்சமரத்தில் கள் எடுக்கிற ஆள். அநேக காரியங்களை தன்னார்வமாக என்னிடம் கேட்டு கேட்டு அறிந்துகொள்பவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். ஆம், உயர்ந்து நிற்போரின் தனி வாழ்வின் ஆத்மீக வாழ்வின் ரகசியத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவன் நான். வெட்டியதில் குடிப்பவனல்ல, வெட்டியும் குடிப்பேன் நான் என்று அன்று எனக்குத் தெளிவாயிற்று. உங்கள் தாகம் தீர, தரட்டும் நீர் மற்றவரென காத்திருக்கவேண்டாம், மனமிருந்தால் மார்க்கமுண்டு. தண்ணீர் இறைக்கத்தான் நமக்குத் திறன் வேண்டும்.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை