முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 10


பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

28 March 2014

  

அனைத்து சபை ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் ஒழுங்கு செய்திருந்த கன்வென்ஷன் கூட்டங்கள் சந்துவாவில் நடைபெற்றது; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். சகோதரருடன் ஜெம்ஸ் மீடியா துறையினரான நாங்களும் உடன் சென்றிருந்தோம். அங்கிருந்த ஓர் ஊழியரின் வீட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தங்கவைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் கூட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற்றது; கூட்டங்களை முடித்து சகோதரர் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது, நானும் அவருடன் வாகனத்தில் சென்றேன், சகோதரர் அறைக்குள் நுழைந்ததும், அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று அவரை விட்டு விட்டு உடனே கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தேன். அடுத்த நாளோ மே 3, எனது பிறந்த நாள், எனவே காலையிலேயே சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவரும் நோக்கத்தில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் விக்டர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் சகோதரர். அவர்கள் உரையாடி முடிக்கட்டும் என்று அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சகோதரர், 'என்ன கிருபா, உள்ள வாங்க' என்று கூப்பிட்டார். அவரது அழைப்பினை ஏற்று அறைக்குள் நுழைந்தேன். அண்ணன் இன்று எனக்குப் பிறந்த நாள் ஜெபிப்பதற்காக வந்தேன் என்று சொன்னவாறு, உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த படுக்கைக்கு முன்னால் முழங்கால் படியிட்டேன். சகோதரர் ஜெபித்து முடித்தார்; நான் எழுந்து சற்று நேரம் அந்த அறைக்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, காற்றாடி ஓடாத நிலையில், அவரது உடல் வியர்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. அண்ணன், என்ன கரனட் இல்லையா என்று கேட்டேன். ஆமாம், என்று பதில் சொன்னார். நேற்று இரவு எப்படி தூங்கினீர்கள் என்று கேட்டேன், அது பீஹார்ல பழகிப்போச்சு என்று பதில் கொடுத்தார். ஒரு சின்ன ஜெனரேட்டர் இருக்கிறது, அதனை இங்கு கொண்டுவரட்டுமா என்று நான் கேட்டேன். நீங்க எந்த ஜெனரேட்டர்ல தூங்குகிறீர்கள் என்று கேட்டார்; மௌனமாய் நின்றேன். எனக்கு மட்டும் எதுக்கு ஜெனரேட்டர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார். இந்த தலையனை உரை வியர்வையாகிவிட்டது, அதை மட்டும் மாற்றினால் நன்றாயிருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உடன் ஊழியர் அந்தத் தலையணை உறையை மாற்றிக்கொடுத்தார். அவரது அறையை விட்டு வெளியே வந்த நான், சகோதரரிடம் மீண்டும் அனுமதி கோராமல், சின்ன ஜெனரேட்டரை எடுத்து, அவரது வாகன ஓட்டியாக இருந்த சகோதரர் சுஷில் அவர்களிடம், கொடுத்து, அதனை இயக்கி அவரது அறைக்கு கரன்ட் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தேன். தனிமையில் அவரது தன்மையைக் கண்ட நான் இவர் 'பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி' என்று அறிந்துகொண்டேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...