முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 10


பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

28 March 2014

  

அனைத்து சபை ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் ஒழுங்கு செய்திருந்த கன்வென்ஷன் கூட்டங்கள் சந்துவாவில் நடைபெற்றது; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். சகோதரருடன் ஜெம்ஸ் மீடியா துறையினரான நாங்களும் உடன் சென்றிருந்தோம். அங்கிருந்த ஓர் ஊழியரின் வீட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தங்கவைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் கூட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற்றது; கூட்டங்களை முடித்து சகோதரர் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது, நானும் அவருடன் வாகனத்தில் சென்றேன், சகோதரர் அறைக்குள் நுழைந்ததும், அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று அவரை விட்டு விட்டு உடனே கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தேன். அடுத்த நாளோ மே 3, எனது பிறந்த நாள், எனவே காலையிலேயே சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவரும் நோக்கத்தில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் விக்டர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் சகோதரர். அவர்கள் உரையாடி முடிக்கட்டும் என்று அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சகோதரர், 'என்ன கிருபா, உள்ள வாங்க' என்று கூப்பிட்டார். அவரது அழைப்பினை ஏற்று அறைக்குள் நுழைந்தேன். அண்ணன் இன்று எனக்குப் பிறந்த நாள் ஜெபிப்பதற்காக வந்தேன் என்று சொன்னவாறு, உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த படுக்கைக்கு முன்னால் முழங்கால் படியிட்டேன். சகோதரர் ஜெபித்து முடித்தார்; நான் எழுந்து சற்று நேரம் அந்த அறைக்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, காற்றாடி ஓடாத நிலையில், அவரது உடல் வியர்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. அண்ணன், என்ன கரனட் இல்லையா என்று கேட்டேன். ஆமாம், என்று பதில் சொன்னார். நேற்று இரவு எப்படி தூங்கினீர்கள் என்று கேட்டேன், அது பீஹார்ல பழகிப்போச்சு என்று பதில் கொடுத்தார். ஒரு சின்ன ஜெனரேட்டர் இருக்கிறது, அதனை இங்கு கொண்டுவரட்டுமா என்று நான் கேட்டேன். நீங்க எந்த ஜெனரேட்டர்ல தூங்குகிறீர்கள் என்று கேட்டார்; மௌனமாய் நின்றேன். எனக்கு மட்டும் எதுக்கு ஜெனரேட்டர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார். இந்த தலையனை உரை வியர்வையாகிவிட்டது, அதை மட்டும் மாற்றினால் நன்றாயிருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உடன் ஊழியர் அந்தத் தலையணை உறையை மாற்றிக்கொடுத்தார். அவரது அறையை விட்டு வெளியே வந்த நான், சகோதரரிடம் மீண்டும் அனுமதி கோராமல், சின்ன ஜெனரேட்டரை எடுத்து, அவரது வாகன ஓட்டியாக இருந்த சகோதரர் சுஷில் அவர்களிடம், கொடுத்து, அதனை இயக்கி அவரது அறைக்கு கரன்ட் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தேன். தனிமையில் அவரது தன்மையைக் கண்ட நான் இவர் 'பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி' என்று அறிந்துகொண்டேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லாயிருக்கீங்களா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 40 நல்லாயிருக்கீங்களா?   நான் கருவந்தியா பணித்தளத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். இப்பணித்தளம், ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலுவலகப் பணியின் நிமித்தம் நான் ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வதுண்டு. சிக்காரியா பணித்தளத்திற்கு வரும்போதெல்லாம், அங்குள்ள தமிழ் சகோதரர்களைக் கண்டு, அவர்களுடன் ஊழியத்தின் காரியங்களைப் பற்றி பேசி, அவர்களது அனுபவங்களையும் கேட்டு உற்சாகமடைந்துவந்தேன்; அது, ஊழியத்தின் பாதையில் எனக்கு உதவியாகவும் இருந்தது. சகோதரர் சுரேஷ் (தற்போது வேதாகமக் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார்) அவர்கள் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், நான் பாடும் பழைய கீர்த்தனைப் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்று அவரோடு பேசி, பாடி, ஜெபித்த நினைவு இன்றும் என் நெஞ்சில் நீங்காதது. அப்போது, வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் எ...

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் ...

மரித்தும் பேசுகிறேன்!

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர்            உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 55 மரித்தும் பேசுகிறேன்!   2014, ஏப்ரல் மாதத்தின் ஓர் நாள், ஜெம்ஸ் வளாகத்திலுள்ள தனது வீட்டிலிருந்து ஜெம்ஸ் வளாகத்திலுள்ள ஜெம்ஸ் வேதாகமக் கல்லூரியின் அருகிலே நடந்துவந்துகொண்டிருந்தார்  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்.  தற்செயலாக சகோதரரை வழியில் சந்தித்த நான், வணக்கம் சொல்லியதைத் தொடர்ந்து, www.youthline.in இணையதளத்தின் 'Encounter' என்ற பகுதியில் அவரைக் குறித்து எழுதிக்கொண்டிருக்கும் தகவல்களைச் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். 2002-ம் ஆண்டு ஜெம்ஸ் ஊழியத்துடன் நான் இணைந்த நாட்களிலிருந்து பல்வேறு காரியங்களை உங்களிடமிருந்து கற்றிருக்கிறேன். என்னோடு நீங்கள் கொண்ட உரையாடல்கள் பல பறந்துவிடாமல் இன்னமும் என் மனதோடு உறைந்து நிற்கின்றது. ஒருநாள் வீட்டில் அமர்ந்தவனாக, சகோதரரிடம் நான் பெற்றுக்கொண்ட காரியங்களும், கற்றுக்கொண்ட காரியங்களும் எனக்கு மட்டுமா? என்ற கேள்வி எனக்குள் உண்டாக, உலகிற்கும் அதனை வெளிப்படுத்த விரும்பினேன்; அதன் விளை...