முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 10


பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

28 March 2014

  

அனைத்து சபை ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் ஒழுங்கு செய்திருந்த கன்வென்ஷன் கூட்டங்கள் சந்துவாவில் நடைபெற்றது; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். சகோதரருடன் ஜெம்ஸ் மீடியா துறையினரான நாங்களும் உடன் சென்றிருந்தோம். அங்கிருந்த ஓர் ஊழியரின் வீட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தங்கவைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் கூட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற்றது; கூட்டங்களை முடித்து சகோதரர் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது, நானும் அவருடன் வாகனத்தில் சென்றேன், சகோதரர் அறைக்குள் நுழைந்ததும், அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று அவரை விட்டு விட்டு உடனே கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தேன். அடுத்த நாளோ மே 3, எனது பிறந்த நாள், எனவே காலையிலேயே சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவரும் நோக்கத்தில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் விக்டர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் சகோதரர். அவர்கள் உரையாடி முடிக்கட்டும் என்று அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சகோதரர், 'என்ன கிருபா, உள்ள வாங்க' என்று கூப்பிட்டார். அவரது அழைப்பினை ஏற்று அறைக்குள் நுழைந்தேன். அண்ணன் இன்று எனக்குப் பிறந்த நாள் ஜெபிப்பதற்காக வந்தேன் என்று சொன்னவாறு, உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த படுக்கைக்கு முன்னால் முழங்கால் படியிட்டேன். சகோதரர் ஜெபித்து முடித்தார்; நான் எழுந்து சற்று நேரம் அந்த அறைக்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, காற்றாடி ஓடாத நிலையில், அவரது உடல் வியர்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. அண்ணன், என்ன கரனட் இல்லையா என்று கேட்டேன். ஆமாம், என்று பதில் சொன்னார். நேற்று இரவு எப்படி தூங்கினீர்கள் என்று கேட்டேன், அது பீஹார்ல பழகிப்போச்சு என்று பதில் கொடுத்தார். ஒரு சின்ன ஜெனரேட்டர் இருக்கிறது, அதனை இங்கு கொண்டுவரட்டுமா என்று நான் கேட்டேன். நீங்க எந்த ஜெனரேட்டர்ல தூங்குகிறீர்கள் என்று கேட்டார்; மௌனமாய் நின்றேன். எனக்கு மட்டும் எதுக்கு ஜெனரேட்டர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார். இந்த தலையனை உரை வியர்வையாகிவிட்டது, அதை மட்டும் மாற்றினால் நன்றாயிருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உடன் ஊழியர் அந்தத் தலையணை உறையை மாற்றிக்கொடுத்தார். அவரது அறையை விட்டு வெளியே வந்த நான், சகோதரரிடம் மீண்டும் அனுமதி கோராமல், சின்ன ஜெனரேட்டரை எடுத்து, அவரது வாகன ஓட்டியாக இருந்த சகோதரர் சுஷில் அவர்களிடம், கொடுத்து, அதனை இயக்கி அவரது அறைக்கு கரன்ட் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தேன். தனிமையில் அவரது தன்மையைக் கண்ட நான் இவர் 'பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி' என்று அறிந்துகொண்டேன்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...