Skip to main content

பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 10


பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி

28 March 2014

  

அனைத்து சபை ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள் ஒழுங்கு செய்திருந்த கன்வென்ஷன் கூட்டங்கள் சந்துவாவில் நடைபெற்றது; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். சகோதரருடன் ஜெம்ஸ் மீடியா துறையினரான நாங்களும் உடன் சென்றிருந்தோம். அங்கிருந்த ஓர் ஊழியரின் வீட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் தங்கவைக்கப்பட்டிருந்தார். முதல் நாள் கூட்டங்கள் சிறப்பாக நிறைவு பெற்றது; கூட்டங்களை முடித்து சகோதரர் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது, நானும் அவருடன் வாகனத்தில் சென்றேன், சகோதரர் அறைக்குள் நுழைந்ததும், அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று அவரை விட்டு விட்டு உடனே கூட்டம் நடக்கும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தேன். அடுத்த நாளோ மே 3, எனது பிறந்த நாள், எனவே காலையிலேயே சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவரும் நோக்கத்தில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் விக்டர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் சகோதரர். அவர்கள் உரையாடி முடிக்கட்டும் என்று அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த என்னைக் கண்ட சகோதரர், 'என்ன கிருபா, உள்ள வாங்க' என்று கூப்பிட்டார். அவரது அழைப்பினை ஏற்று அறைக்குள் நுழைந்தேன். அண்ணன் இன்று எனக்குப் பிறந்த நாள் ஜெபிப்பதற்காக வந்தேன் என்று சொன்னவாறு, உள்ளே நுழைந்து அவர் அமர்ந்திருந்த படுக்கைக்கு முன்னால் முழங்கால் படியிட்டேன். சகோதரர் ஜெபித்து முடித்தார்; நான் எழுந்து சற்று நேரம் அந்த அறைக்குள் நின்றுகொண்டிருந்தேன். அப்போது, காற்றாடி ஓடாத நிலையில், அவரது உடல் வியர்த்துக்கொட்டிக்கொண்டிருந்தது. அண்ணன், என்ன கரனட் இல்லையா என்று கேட்டேன். ஆமாம், என்று பதில் சொன்னார். நேற்று இரவு எப்படி தூங்கினீர்கள் என்று கேட்டேன், அது பீஹார்ல பழகிப்போச்சு என்று பதில் கொடுத்தார். ஒரு சின்ன ஜெனரேட்டர் இருக்கிறது, அதனை இங்கு கொண்டுவரட்டுமா என்று நான் கேட்டேன். நீங்க எந்த ஜெனரேட்டர்ல தூங்குகிறீர்கள் என்று கேட்டார்; மௌனமாய் நின்றேன். எனக்கு மட்டும் எதுக்கு ஜெனரேட்டர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார். இந்த தலையனை உரை வியர்வையாகிவிட்டது, அதை மட்டும் மாற்றினால் நன்றாயிருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உடன் ஊழியர் அந்தத் தலையணை உறையை மாற்றிக்கொடுத்தார். அவரது அறையை விட்டு வெளியே வந்த நான், சகோதரரிடம் மீண்டும் அனுமதி கோராமல், சின்ன ஜெனரேட்டரை எடுத்து, அவரது வாகன ஓட்டியாக இருந்த சகோதரர் சுஷில் அவர்களிடம், கொடுத்து, அதனை இயக்கி அவரது அறைக்கு கரன்ட் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தேன். தனிமையில் அவரது தன்மையைக் கண்ட நான் இவர் 'பீஹாருக்கு ஏற்ற பிரசங்கி' என்று அறிந்துகொண்டேன்.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை