Skip to main content

வேடன்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 19

வேடன்

6 April 2014


 

தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியளிக்கும் மூன்று நாட்கள் சுவிசேஷக் கூட்டங்கள் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. அது மே மாதம், நான் வருடாந்தர விடுமுறைக்காக குடும்பத்தோடு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊரான சாயர்புரத்தில் இருந்தேன். சகோதரரின் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்ற ஆவலோடிருந்த என் மனதில், அக்கூட்டங்களில் அவர் அளிக்கும் செய்திளை உலகெங்கும் இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் உண்டானது. முதல் நாள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன், சகோதரரின் செய்தியை ஒளிபரப்புவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் காரிலேயே செய்துவைத்திருந்தேன். இன்டெர்நெட் வசதி, கணணி மற்றும் ஒளிபரப்புவதற்குத் தேவையான அத்தனை உபகரணங்களும் காரிலேயே ஆயத்த நிலையில் இருந்தன. பாளையங்கோட்டையில் கூட்டம் நடக்கும் மைதானத்திற்குச் சென்றடைந்தேன். மேடையின் வலது புறத்தில் ஒளிபரப்பத் தேவையான தூரத்தில் காரை நான் நிறுத்தினேன். நான் யார் என்றும் எதற்காக அப்பகுதியில் காரை நிறுத்துகிறேன் என்பதையும் அறியாத சிலர் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தச் சொன்னபோது, நான் ஜெம்ஸ் மிஷனரி என்றும், சகோதரரின் செய்தியை நான் ஒளிபரப்பவேண்டும் என்ற விபரத்தையும் எடுத்துரைத்தேன். சிங்கப்பூரில் இருந்த சகோதரர்கள் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியைக் கேட்க ஆயத்தமாயிருந்தனர்; அவ்வப்போது தொலைபேசியிலும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வாகனம் மைதானத்தில் நுழைந்தது. சகோதரரின் வாகனத்தைக் கண்டதும் விரைந்து ஓடினேன். 'அண்ணன் உங்கள் செய்தியை இன்று இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பப்போகிறேன்' என்று சொன்னேன். சற்று நேரம் யோசித்த சகோதரர், 'கிருபா, நான் பாளையங்கோட்டையில் உள்ள சகோதரர்களுக்கென்று பேசுவேன், அதனை மற்றவர்கள் கேட்டால், புரிந்துகொள்ளமுடியுமா? என்றார். அடுத்த நாள் காலையில், சகோதரரை தூத்துக்குடியில் அவரது இல்லத்தில் சந்தித்தபோதும், இதே பதில்தான் எனக்குக் கிடைத்தது. எனது வேகத்தை அவரது விவேகம் தணித்தது, இந்த வேடன் எந்தக் குருவியை குறி வைக்கிறான் என்று அப்போது எனக்குப் புரிந்தது. 


www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை