முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேடன்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 19

வேடன்

6 April 2014


 

தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியளிக்கும் மூன்று நாட்கள் சுவிசேஷக் கூட்டங்கள் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. அது மே மாதம், நான் வருடாந்தர விடுமுறைக்காக குடும்பத்தோடு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊரான சாயர்புரத்தில் இருந்தேன். சகோதரரின் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்ற ஆவலோடிருந்த என் மனதில், அக்கூட்டங்களில் அவர் அளிக்கும் செய்திளை உலகெங்கும் இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் உண்டானது. முதல் நாள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன், சகோதரரின் செய்தியை ஒளிபரப்புவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் காரிலேயே செய்துவைத்திருந்தேன். இன்டெர்நெட் வசதி, கணணி மற்றும் ஒளிபரப்புவதற்குத் தேவையான அத்தனை உபகரணங்களும் காரிலேயே ஆயத்த நிலையில் இருந்தன. பாளையங்கோட்டையில் கூட்டம் நடக்கும் மைதானத்திற்குச் சென்றடைந்தேன். மேடையின் வலது புறத்தில் ஒளிபரப்பத் தேவையான தூரத்தில் காரை நான் நிறுத்தினேன். நான் யார் என்றும் எதற்காக அப்பகுதியில் காரை நிறுத்துகிறேன் என்பதையும் அறியாத சிலர் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தச் சொன்னபோது, நான் ஜெம்ஸ் மிஷனரி என்றும், சகோதரரின் செய்தியை நான் ஒளிபரப்பவேண்டும் என்ற விபரத்தையும் எடுத்துரைத்தேன். சிங்கப்பூரில் இருந்த சகோதரர்கள் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியைக் கேட்க ஆயத்தமாயிருந்தனர்; அவ்வப்போது தொலைபேசியிலும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வாகனம் மைதானத்தில் நுழைந்தது. சகோதரரின் வாகனத்தைக் கண்டதும் விரைந்து ஓடினேன். 'அண்ணன் உங்கள் செய்தியை இன்று இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பப்போகிறேன்' என்று சொன்னேன். சற்று நேரம் யோசித்த சகோதரர், 'கிருபா, நான் பாளையங்கோட்டையில் உள்ள சகோதரர்களுக்கென்று பேசுவேன், அதனை மற்றவர்கள் கேட்டால், புரிந்துகொள்ளமுடியுமா? என்றார். அடுத்த நாள் காலையில், சகோதரரை தூத்துக்குடியில் அவரது இல்லத்தில் சந்தித்தபோதும், இதே பதில்தான் எனக்குக் கிடைத்தது. எனது வேகத்தை அவரது விவேகம் தணித்தது, இந்த வேடன் எந்தக் குருவியை குறி வைக்கிறான் என்று அப்போது எனக்குப் புரிந்தது. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...