முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேடன்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 19

வேடன்

6 April 2014


 

தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியளிக்கும் மூன்று நாட்கள் சுவிசேஷக் கூட்டங்கள் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. அது மே மாதம், நான் வருடாந்தர விடுமுறைக்காக குடும்பத்தோடு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊரான சாயர்புரத்தில் இருந்தேன். சகோதரரின் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்ற ஆவலோடிருந்த என் மனதில், அக்கூட்டங்களில் அவர் அளிக்கும் செய்திளை உலகெங்கும் இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் உண்டானது. முதல் நாள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன், சகோதரரின் செய்தியை ஒளிபரப்புவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் காரிலேயே செய்துவைத்திருந்தேன். இன்டெர்நெட் வசதி, கணணி மற்றும் ஒளிபரப்புவதற்குத் தேவையான அத்தனை உபகரணங்களும் காரிலேயே ஆயத்த நிலையில் இருந்தன. பாளையங்கோட்டையில் கூட்டம் நடக்கும் மைதானத்திற்குச் சென்றடைந்தேன். மேடையின் வலது புறத்தில் ஒளிபரப்பத் தேவையான தூரத்தில் காரை நான் நிறுத்தினேன். நான் யார் என்றும் எதற்காக அப்பகுதியில் காரை நிறுத்துகிறேன் என்பதையும் அறியாத சிலர் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தச் சொன்னபோது, நான் ஜெம்ஸ் மிஷனரி என்றும், சகோதரரின் செய்தியை நான் ஒளிபரப்பவேண்டும் என்ற விபரத்தையும் எடுத்துரைத்தேன். சிங்கப்பூரில் இருந்த சகோதரர்கள் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியைக் கேட்க ஆயத்தமாயிருந்தனர்; அவ்வப்போது தொலைபேசியிலும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வாகனம் மைதானத்தில் நுழைந்தது. சகோதரரின் வாகனத்தைக் கண்டதும் விரைந்து ஓடினேன். 'அண்ணன் உங்கள் செய்தியை இன்று இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பப்போகிறேன்' என்று சொன்னேன். சற்று நேரம் யோசித்த சகோதரர், 'கிருபா, நான் பாளையங்கோட்டையில் உள்ள சகோதரர்களுக்கென்று பேசுவேன், அதனை மற்றவர்கள் கேட்டால், புரிந்துகொள்ளமுடியுமா? என்றார். அடுத்த நாள் காலையில், சகோதரரை தூத்துக்குடியில் அவரது இல்லத்தில் சந்தித்தபோதும், இதே பதில்தான் எனக்குக் கிடைத்தது. எனது வேகத்தை அவரது விவேகம் தணித்தது, இந்த வேடன் எந்தக் குருவியை குறி வைக்கிறான் என்று அப்போது எனக்குப் புரிந்தது. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...