முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேடன்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 19

வேடன்

6 April 2014


 

தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியளிக்கும் மூன்று நாட்கள் சுவிசேஷக் கூட்டங்கள் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது. அது மே மாதம், நான் வருடாந்தர விடுமுறைக்காக குடும்பத்தோடு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊரான சாயர்புரத்தில் இருந்தேன். சகோதரரின் கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்ற ஆவலோடிருந்த என் மனதில், அக்கூட்டங்களில் அவர் அளிக்கும் செய்திளை உலகெங்கும் இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் உண்டானது. முதல் நாள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டேன், சகோதரரின் செய்தியை ஒளிபரப்புவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் காரிலேயே செய்துவைத்திருந்தேன். இன்டெர்நெட் வசதி, கணணி மற்றும் ஒளிபரப்புவதற்குத் தேவையான அத்தனை உபகரணங்களும் காரிலேயே ஆயத்த நிலையில் இருந்தன. பாளையங்கோட்டையில் கூட்டம் நடக்கும் மைதானத்திற்குச் சென்றடைந்தேன். மேடையின் வலது புறத்தில் ஒளிபரப்பத் தேவையான தூரத்தில் காரை நான் நிறுத்தினேன். நான் யார் என்றும் எதற்காக அப்பகுதியில் காரை நிறுத்துகிறேன் என்பதையும் அறியாத சிலர் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தச் சொன்னபோது, நான் ஜெம்ஸ் மிஷனரி என்றும், சகோதரரின் செய்தியை நான் ஒளிபரப்பவேண்டும் என்ற விபரத்தையும் எடுத்துரைத்தேன். சிங்கப்பூரில் இருந்த சகோதரர்கள் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் செய்தியைக் கேட்க ஆயத்தமாயிருந்தனர்; அவ்வப்போது தொலைபேசியிலும் என்னுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் கூட்டம் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் வாகனம் மைதானத்தில் நுழைந்தது. சகோதரரின் வாகனத்தைக் கண்டதும் விரைந்து ஓடினேன். 'அண்ணன் உங்கள் செய்தியை இன்று இன்டெர்நெட் ரேடியோவில் ஒளிபரப்பப்போகிறேன்' என்று சொன்னேன். சற்று நேரம் யோசித்த சகோதரர், 'கிருபா, நான் பாளையங்கோட்டையில் உள்ள சகோதரர்களுக்கென்று பேசுவேன், அதனை மற்றவர்கள் கேட்டால், புரிந்துகொள்ளமுடியுமா? என்றார். அடுத்த நாள் காலையில், சகோதரரை தூத்துக்குடியில் அவரது இல்லத்தில் சந்தித்தபோதும், இதே பதில்தான் எனக்குக் கிடைத்தது. எனது வேகத்தை அவரது விவேகம் தணித்தது, இந்த வேடன் எந்தக் குருவியை குறி வைக்கிறான் என்று அப்போது எனக்குப் புரிந்தது. 


www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...