முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒன்றுமில்லாதவனுக்கு ஒன்று

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 33

ஒன்றுமில்லாதவனுக்கு ஒன்று


 

2005-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று இரவு பத்து மணிக்கு பீஹார், சிக்காரியாவிலுள்ள ஜெம்ஸ் சபையில் புது வருட ஆராதனை தொடங்கியது; ஊழியர்கள் தங்களது அனுபவ சாட்சிகளைப் பகிர்ந்துகொண்டு, வாயாற கர்த்தரைப் புகழ்ந்து துதிக்க, 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் ஆராதனை நிறைவுற்றது. கடந்த ஆண்டின் ஆண்டவரது செயல்களை நினைத்து நன்றி செலுத்தியும், புத்தாண்டினை தேவ பாதத்தில் அமர்ந்து பெற்றவர்களாகவும் ஜனங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஆராதனை முடிந்ததும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சிறியோர், பெரியோர் என அனைவரையும் சந்தித்து கரம் குலக்கினவராக புது வருட வாழ்த்தினைச் சொல்லிக்கொண்டிருந்தார்; பரஸ்பரம் ஜனங்களும் சகோதரருடன் வாழ்த்துக்களைப் பரிமாரிக்கொண்டிருந்தனர். ஆராதனை முடிந்ததும் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. ஜனங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்திக்கொண்டிருந்தனர். ஜனவரி 1 அன்று காலை சுமார் 7 மணிக்கு ஜெம்ஸ் வளாகத்தில் இருந்த ஊழியர்கள் சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவர குடும்பமாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். ஜனங்கள் ஜெபிக்கச் செல்வதைக் கண்ட நானும் எனது மனைவியும் சகோதரரைச் சந்திக்க ஆயத்தமானோம். சகோதரரின் இல்லத்தின் முன் அறையில் ஜனங்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள், அங்கிருந்து வரிசையாக சகோதரரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தனர்; சகோதரர் வீட்டின் அறை ஒன்றின் அமர்ந்து ஒவ்வொருவருக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார். ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் இயக்குநரைச் சந்திக்கப் போகிறோம், அவருக்கு எப்படி கையில் பணத்தைக் கொடுப்பது என்ற எண்ணத்தில் வெறுங்கையாகவே நாங்கள் சென்றிருந்தோம்; பணப்பையைக் கூட நான் உடன் எடுத்துச் சென்றிருக்கவில்லை. நானும் எனது மனைவியும் வரிசையில் எழுந்து நின்றோம். அறை கதவினை நெருங்கினோம், எங்களுக்கு முன்னர் நின்றுகொண்டிருந்த ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் சர்ச்சில் கையில் காணிக்கையினை வைத்த வண்ணம் நின்றுகொண்டிருப்பதைக் கணட்ட நான் எனது மனைவியை நோக்கி, 'எல்லாரும் காணிக்கை கொண்டு போகிறார்கள், நாம் ஒன்றும் கொண்டுவரவில்லையே, நான் போய் எடுத்து வரட்டுமா?' என்று கேட்டேன். வரிசை நெருங்கிவிட்டபடியினால், இறுதியில் இருவரும் ஒருமித்து முடிவெடுத்து காணிக்கையின்றி சகோதரரைச் சந்திக்க அறையின் உள்ளே நுழைந்தோம். சகோதரரோ ஜனங்களுக்காக ஜெபிப்பதிலேயே கருத்தாயிருந்தார். சகோதரரைக் கண்டதும் முன்னே முழங்கால் படியிட்ட எங்களது தலையில் கைவைத்து 'ஆண்டவரே, இல்லறத்து ஆசீர்வாதங்களால் இவர்களை ஆசீர்வதியும்' என்று ஜெபித்தார். அவரது ஜெபத்தைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு கருவுற்ற எனது மனைவி, 2007 ஜுலை 5 அன்று ஆண் குழந்தையினைப் பெற்றெடுத்தாள். ஒன்றுமில்லாமல் அவரைச் சந்தித்து ஜெபித்த எங்களுக்கு ஒன்று கிடைத்தது. 'சமாதானத்துடனே போளூ நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக' (1சாமு 1:17) என்று தேவ ஊழியனான ஏலி அன்னாளை நோக்கி அந்நாளில் சொன்ன வாக்கைப் போலவே, எங்கள் வாழ்க்கையிலும் வந்து பலித்தது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...