Skip to main content

ஒன்றுமில்லாதவனுக்கு ஒன்று

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 33

ஒன்றுமில்லாதவனுக்கு ஒன்று


 

2005-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று இரவு பத்து மணிக்கு பீஹார், சிக்காரியாவிலுள்ள ஜெம்ஸ் சபையில் புது வருட ஆராதனை தொடங்கியது; ஊழியர்கள் தங்களது அனுபவ சாட்சிகளைப் பகிர்ந்துகொண்டு, வாயாற கர்த்தரைப் புகழ்ந்து துதிக்க, 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் ஆராதனை நிறைவுற்றது. கடந்த ஆண்டின் ஆண்டவரது செயல்களை நினைத்து நன்றி செலுத்தியும், புத்தாண்டினை தேவ பாதத்தில் அமர்ந்து பெற்றவர்களாகவும் ஜனங்கள் ஆலயத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஆராதனை முடிந்ததும், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சிறியோர், பெரியோர் என அனைவரையும் சந்தித்து கரம் குலக்கினவராக புது வருட வாழ்த்தினைச் சொல்லிக்கொண்டிருந்தார்; பரஸ்பரம் ஜனங்களும் சகோதரருடன் வாழ்த்துக்களைப் பரிமாரிக்கொண்டிருந்தனர். ஆராதனை முடிந்ததும் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. ஜனங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்திக்கொண்டிருந்தனர். ஜனவரி 1 அன்று காலை சுமார் 7 மணிக்கு ஜெம்ஸ் வளாகத்தில் இருந்த ஊழியர்கள் சகோதரரைச் சந்தித்து ஜெபித்துவர குடும்பமாகப் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். ஜனங்கள் ஜெபிக்கச் செல்வதைக் கண்ட நானும் எனது மனைவியும் சகோதரரைச் சந்திக்க ஆயத்தமானோம். சகோதரரின் இல்லத்தின் முன் அறையில் ஜனங்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள், அங்கிருந்து வரிசையாக சகோதரரைச் சந்திக்கச் சென்றுகொண்டிருந்தனர்; சகோதரர் வீட்டின் அறை ஒன்றின் அமர்ந்து ஒவ்வொருவருக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார். ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் இயக்குநரைச் சந்திக்கப் போகிறோம், அவருக்கு எப்படி கையில் பணத்தைக் கொடுப்பது என்ற எண்ணத்தில் வெறுங்கையாகவே நாங்கள் சென்றிருந்தோம்; பணப்பையைக் கூட நான் உடன் எடுத்துச் சென்றிருக்கவில்லை. நானும் எனது மனைவியும் வரிசையில் எழுந்து நின்றோம். அறை கதவினை நெருங்கினோம், எங்களுக்கு முன்னர் நின்றுகொண்டிருந்த ஜெம்ஸ் ஊழியர் சகோதரர் சர்ச்சில் கையில் காணிக்கையினை வைத்த வண்ணம் நின்றுகொண்டிருப்பதைக் கணட்ட நான் எனது மனைவியை நோக்கி, 'எல்லாரும் காணிக்கை கொண்டு போகிறார்கள், நாம் ஒன்றும் கொண்டுவரவில்லையே, நான் போய் எடுத்து வரட்டுமா?' என்று கேட்டேன். வரிசை நெருங்கிவிட்டபடியினால், இறுதியில் இருவரும் ஒருமித்து முடிவெடுத்து காணிக்கையின்றி சகோதரரைச் சந்திக்க அறையின் உள்ளே நுழைந்தோம். சகோதரரோ ஜனங்களுக்காக ஜெபிப்பதிலேயே கருத்தாயிருந்தார். சகோதரரைக் கண்டதும் முன்னே முழங்கால் படியிட்ட எங்களது தலையில் கைவைத்து 'ஆண்டவரே, இல்லறத்து ஆசீர்வாதங்களால் இவர்களை ஆசீர்வதியும்' என்று ஜெபித்தார். அவரது ஜெபத்தைத் தொடர்ந்து, 2006-ம் ஆண்டு கருவுற்ற எனது மனைவி, 2007 ஜுலை 5 அன்று ஆண் குழந்தையினைப் பெற்றெடுத்தாள். ஒன்றுமில்லாமல் அவரைச் சந்தித்து ஜெபித்த எங்களுக்கு ஒன்று கிடைத்தது. 'சமாதானத்துடனே போளூ நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக' (1சாமு 1:17) என்று தேவ ஊழியனான ஏலி அன்னாளை நோக்கி அந்நாளில் சொன்ன வாக்கைப் போலவே, எங்கள் வாழ்க்கையிலும் வந்து பலித்தது.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை