முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 14

இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்

1 April 2014

 

ஒருமுறை, பாட்னாவில் நடைபெறவிருந்த IMPACT ஊழியர் கருத்தரங்கு கூட்டத்திற்கு பகல் 12:30 –க்கு வளாகத்திலிருந்து புறப்படவேண்டும் என்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லியிருந்தார். உடன் ஊழியர்களாகிய நாங்கள் ஜெம்ஸ் வளாகத்தினுள் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தோம். 12.15-க்கு ஓட்டுநர் டெம்போ டிராவலர் வாகனத்தைக் கொண்டு வந்தார். நாங்கள் எங்கள் பொருட்களை வாகனத்தில் வைத்தவாறு, சகோதரரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தார் சகோதரர். ஓர் சிறிய ஜெபத்துடன் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்; வாகனம் புறப்பட்டது. ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசலிலிருந்து வாகனம் சுமார் பத்து அடி வெளியே சென்றதும், 'அண்ணன், அலுவலகத்தில் டீசல் போடுவதற்கான சீட்டு வாங்க மறந்துவிட்டேன், உடனே வாங்கிக்கொண்டு வந்துவிடுகின்றேன்' என்று ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். அதனைக் கேட்ட சகோதரர், '12.30 –க்கு புறப்படவேண்டுமென்றால், அனைத்தும் அதற்கு முன்னரே ஆயத்தமாயிருக்கவேண்டும், டீசல் போடுவதற்கு நான் பணம் தருகிறேன்' என்று சொன்னார். சிக்hரியாவிலிருந்து ஏழு கி.மீ தொலைவிலுள்ள டெஹ்ரி ஆன் சோன் சென்றடைந்ததும், அங்கிருந்த பெட்ரோல் பல்க் ஒன்றில் வாகனத்திற்கு டீசல் நிரப்பினோம், டீசலுக்கான ரூபாய் 1500 ஐ சகோதரரே கொடுத்தார். தொடர்ந்து, வழியில் சென்றுகொண்டிருக்கும்போது, 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார், நாங்களும் சரி என்று சொன்னோம். சாலையோரமிருந்த டீ கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்தினோம், அனைவரும் டீ குடித்துத்கொண்டிருந்தோம், சகோதரரோ 'எனக்கு டீ வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். அண்ணன் நீங்கள் ஏன் டீ குடிப்பதில்லை என்று கேட்டதற்கு, சில விளங்கங்களையும் கொடுத்தார். நாங்கள் டீ குடித்து முடித்ததும் அதற்கான பணத்தை அவரே கொடுத்தார். அண்ணன், அலுவலகத்தில் வாங்கிய பணம் இருக்கிறது என்று நான் கொடுக்க முயற்சித்தபோதிலும், 'டீ குடிக்க நான்தானே உங்களை அழைத்தேன்' என்ற பதிலோடு பணத்தை எடுத்து நீட்டினார். பாட்னா கூட்டங்களை முடித்து ஜெம்ஸ் வளாகம் வந்து சேர்ந்தோம். செலவீனங்களை கணக்குப் பார்த்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க நான் ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, சகோதரர் டீசலுக்கு ரூபாய் 1500 கொடுத்ததை நினைவில் கொண்டு, அவரது அலுவலகத்திற்குச் சென்று அந்த 1500 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட முயன்றேன், ஆனால், சகோதரரோ வாங்க மறுத்துவிட்டார். 'இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்' என்று அன்போடு ஓர் பாடத்தைக் கற்றுக்கொடுத்து அனுப்பினார்.



www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...