Skip to main content

இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்

 

  

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 14

இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்

1 April 2014

 

ஒருமுறை, பாட்னாவில் நடைபெறவிருந்த IMPACT ஊழியர் கருத்தரங்கு கூட்டத்திற்கு பகல் 12:30 –க்கு வளாகத்திலிருந்து புறப்படவேண்டும் என்று சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொல்லியிருந்தார். உடன் ஊழியர்களாகிய நாங்கள் ஜெம்ஸ் வளாகத்தினுள் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தோம். 12.15-க்கு ஓட்டுநர் டெம்போ டிராவலர் வாகனத்தைக் கொண்டு வந்தார். நாங்கள் எங்கள் பொருட்களை வாகனத்தில் வைத்தவாறு, சகோதரரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தார் சகோதரர். ஓர் சிறிய ஜெபத்துடன் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம்; வாகனம் புறப்பட்டது. ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசலிலிருந்து வாகனம் சுமார் பத்து அடி வெளியே சென்றதும், 'அண்ணன், அலுவலகத்தில் டீசல் போடுவதற்கான சீட்டு வாங்க மறந்துவிட்டேன், உடனே வாங்கிக்கொண்டு வந்துவிடுகின்றேன்' என்று ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தைக் குறைத்தார். அதனைக் கேட்ட சகோதரர், '12.30 –க்கு புறப்படவேண்டுமென்றால், அனைத்தும் அதற்கு முன்னரே ஆயத்தமாயிருக்கவேண்டும், டீசல் போடுவதற்கு நான் பணம் தருகிறேன்' என்று சொன்னார். சிக்hரியாவிலிருந்து ஏழு கி.மீ தொலைவிலுள்ள டெஹ்ரி ஆன் சோன் சென்றடைந்ததும், அங்கிருந்த பெட்ரோல் பல்க் ஒன்றில் வாகனத்திற்கு டீசல் நிரப்பினோம், டீசலுக்கான ரூபாய் 1500 ஐ சகோதரரே கொடுத்தார். தொடர்ந்து, வழியில் சென்றுகொண்டிருக்கும்போது, 'டீ குடிக்கலாமா' என்று கேட்டார், நாங்களும் சரி என்று சொன்னோம். சாலையோரமிருந்த டீ கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்தினோம், அனைவரும் டீ குடித்துத்கொண்டிருந்தோம், சகோதரரோ 'எனக்கு டீ வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். அண்ணன் நீங்கள் ஏன் டீ குடிப்பதில்லை என்று கேட்டதற்கு, சில விளங்கங்களையும் கொடுத்தார். நாங்கள் டீ குடித்து முடித்ததும் அதற்கான பணத்தை அவரே கொடுத்தார். அண்ணன், அலுவலகத்தில் வாங்கிய பணம் இருக்கிறது என்று நான் கொடுக்க முயற்சித்தபோதிலும், 'டீ குடிக்க நான்தானே உங்களை அழைத்தேன்' என்ற பதிலோடு பணத்தை எடுத்து நீட்டினார். பாட்னா கூட்டங்களை முடித்து ஜெம்ஸ் வளாகம் வந்து சேர்ந்தோம். செலவீனங்களை கணக்குப் பார்த்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க நான் ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, சகோதரர் டீசலுக்கு ரூபாய் 1500 கொடுத்ததை நினைவில் கொண்டு, அவரது அலுவலகத்திற்குச் சென்று அந்த 1500 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட முயன்றேன், ஆனால், சகோதரரோ வாங்க மறுத்துவிட்டார். 'இது உங்களுக்குப் பாடமாயிருக்கட்டும்' என்று அன்போடு ஓர் பாடத்தைக் கற்றுக்கொடுத்து அனுப்பினார்.



www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை