முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவையற்ற உதவி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

    

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 52

தேவையற்ற உதவி


 

ஒருமுறை மீடியா துறையின் அலுவலக கூட்டத்திற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் அலுவலக அறைக்கு அழைக்கப்ட்டோம். மீடியா துறையில் பணிபுரியும் ஊழியர் அனைவரும் குறிப்பிட்ட சமையத்திற்கு கூட்டத்திற்காக சகோதரரின் அறையைச் சென்றடைந்தோம். ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. மீடியா துறையின் பல்வேறு திட்டங்களைக் குறித்தும், பணிகளைக் குறித்தும் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ஊழியர்களாகிய எங்களிடத்தில் துறையைச் சார்ந்த கருத்துக்களை சகோதரர் கேட்டபோது, நாங்களோ, 'மீடியா துறைக்கு இன்னும் பல்வேறு உபகரணங்கள், அவைகளை வாங்கினால் இன்னும் நன்றாக காரியங்களைச் செய்ய முடியும் என்றும், புகைப்டக் கருவிகள், வீடியோ கேமராக்கள், மற்றும் வெளிப்புற படப்பிடிப்பிற்குத் தேவையான பொருட்கள் போன்றவை தற்போதைய அத்தியாவசியத் தேவைகள் என்று சகோதரரிடத்தில் எடுத்துச் சொன்னோம். எங்களது வார்த்தைகளைக் கேட்ட சகோதரர், மீடியா துறையினை நடத்த அநேக பொருட்களும், பணமும் தேவப்படுகின்றது, மற்ற துறைகளுக்கு ஆகும் செலவினங்களைவிட பன்மடங்கு மீடியாவில் செலவிடவேண்டியிருக்கிறது என்று சொன்னார். தொடர்ந்து எங்களை நோக்கி: சில நாட்களுக்கு முன்பாக என்னைச் சந்தித்த ஓர் நபர் இங்கு நடைபெறும் ஊழியங்களுக்காக பண உதவி கொடுத்து உதவுவதாக என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார்; அவரது நோக்கமோ ஜெம்ஸ் ஊழியத்தின் தரிசனத்திற்குத் தூரமாயிருந்தது. இதனை அறிந்த நான் அவரது உதவியினை வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டேன். நம்மை தரிசனத்தை விட்டு விலகச் செய்கிற மனிதர்களைக் குறித்தும், அவர்கள் செய்கிற உதவிகள் குறித்தும் நாம் கவனமாயிருக்கவேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில், பணித்தளத்தில் நடைபெறும் பணிகளுக்காக யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனைச் செலவழிக்கின்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். மிகுந்த தேவையுள்ள நேரமாயிருந்தாலும், தரிசனத்தை விட்டு விலகச் செய்வோரின் உதவி தேவையற்றது என்று சொன்னதுடன், மீடியா துறையின் தேவைகளுக்காக ஜெபியுங்கள் என்ற ஆவிக்குரிய ஆலோசனையை விடுத்தார். அதனைத் தொடர்ந்து எங்களிடத்தில் நிலவியது அமைதிதான்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...