Skip to main content

தேவையற்ற உதவி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

    

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 52

தேவையற்ற உதவி


 

ஒருமுறை மீடியா துறையின் அலுவலக கூட்டத்திற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் அலுவலக அறைக்கு அழைக்கப்ட்டோம். மீடியா துறையில் பணிபுரியும் ஊழியர் அனைவரும் குறிப்பிட்ட சமையத்திற்கு கூட்டத்திற்காக சகோதரரின் அறையைச் சென்றடைந்தோம். ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. மீடியா துறையின் பல்வேறு திட்டங்களைக் குறித்தும், பணிகளைக் குறித்தும் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ஊழியர்களாகிய எங்களிடத்தில் துறையைச் சார்ந்த கருத்துக்களை சகோதரர் கேட்டபோது, நாங்களோ, 'மீடியா துறைக்கு இன்னும் பல்வேறு உபகரணங்கள், அவைகளை வாங்கினால் இன்னும் நன்றாக காரியங்களைச் செய்ய முடியும் என்றும், புகைப்டக் கருவிகள், வீடியோ கேமராக்கள், மற்றும் வெளிப்புற படப்பிடிப்பிற்குத் தேவையான பொருட்கள் போன்றவை தற்போதைய அத்தியாவசியத் தேவைகள் என்று சகோதரரிடத்தில் எடுத்துச் சொன்னோம். எங்களது வார்த்தைகளைக் கேட்ட சகோதரர், மீடியா துறையினை நடத்த அநேக பொருட்களும், பணமும் தேவப்படுகின்றது, மற்ற துறைகளுக்கு ஆகும் செலவினங்களைவிட பன்மடங்கு மீடியாவில் செலவிடவேண்டியிருக்கிறது என்று சொன்னார். தொடர்ந்து எங்களை நோக்கி: சில நாட்களுக்கு முன்பாக என்னைச் சந்தித்த ஓர் நபர் இங்கு நடைபெறும் ஊழியங்களுக்காக பண உதவி கொடுத்து உதவுவதாக என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார்; அவரது நோக்கமோ ஜெம்ஸ் ஊழியத்தின் தரிசனத்திற்குத் தூரமாயிருந்தது. இதனை அறிந்த நான் அவரது உதவியினை வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டேன். நம்மை தரிசனத்தை விட்டு விலகச் செய்கிற மனிதர்களைக் குறித்தும், அவர்கள் செய்கிற உதவிகள் குறித்தும் நாம் கவனமாயிருக்கவேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில், பணித்தளத்தில் நடைபெறும் பணிகளுக்காக யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனைச் செலவழிக்கின்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். மிகுந்த தேவையுள்ள நேரமாயிருந்தாலும், தரிசனத்தை விட்டு விலகச் செய்வோரின் உதவி தேவையற்றது என்று சொன்னதுடன், மீடியா துறையின் தேவைகளுக்காக ஜெபியுங்கள் என்ற ஆவிக்குரிய ஆலோசனையை விடுத்தார். அதனைத் தொடர்ந்து எங்களிடத்தில் நிலவியது அமைதிதான்.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை