முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேவையற்ற உதவி

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

    

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 52

தேவையற்ற உதவி


 

ஒருமுறை மீடியா துறையின் அலுவலக கூட்டத்திற்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் அலுவலக அறைக்கு அழைக்கப்ட்டோம். மீடியா துறையில் பணிபுரியும் ஊழியர் அனைவரும் குறிப்பிட்ட சமையத்திற்கு கூட்டத்திற்காக சகோதரரின் அறையைச் சென்றடைந்தோம். ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது. மீடியா துறையின் பல்வேறு திட்டங்களைக் குறித்தும், பணிகளைக் குறித்தும் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். ஊழியர்களாகிய எங்களிடத்தில் துறையைச் சார்ந்த கருத்துக்களை சகோதரர் கேட்டபோது, நாங்களோ, 'மீடியா துறைக்கு இன்னும் பல்வேறு உபகரணங்கள், அவைகளை வாங்கினால் இன்னும் நன்றாக காரியங்களைச் செய்ய முடியும் என்றும், புகைப்டக் கருவிகள், வீடியோ கேமராக்கள், மற்றும் வெளிப்புற படப்பிடிப்பிற்குத் தேவையான பொருட்கள் போன்றவை தற்போதைய அத்தியாவசியத் தேவைகள் என்று சகோதரரிடத்தில் எடுத்துச் சொன்னோம். எங்களது வார்த்தைகளைக் கேட்ட சகோதரர், மீடியா துறையினை நடத்த அநேக பொருட்களும், பணமும் தேவப்படுகின்றது, மற்ற துறைகளுக்கு ஆகும் செலவினங்களைவிட பன்மடங்கு மீடியாவில் செலவிடவேண்டியிருக்கிறது என்று சொன்னார். தொடர்ந்து எங்களை நோக்கி: சில நாட்களுக்கு முன்பாக என்னைச் சந்தித்த ஓர் நபர் இங்கு நடைபெறும் ஊழியங்களுக்காக பண உதவி கொடுத்து உதவுவதாக என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தார்; அவரது நோக்கமோ ஜெம்ஸ் ஊழியத்தின் தரிசனத்திற்குத் தூரமாயிருந்தது. இதனை அறிந்த நான் அவரது உதவியினை வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டேன். நம்மை தரிசனத்தை விட்டு விலகச் செய்கிற மனிதர்களைக் குறித்தும், அவர்கள் செய்கிற உதவிகள் குறித்தும் நாம் கவனமாயிருக்கவேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில், பணித்தளத்தில் நடைபெறும் பணிகளுக்காக யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதனைச் செலவழிக்கின்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். மிகுந்த தேவையுள்ள நேரமாயிருந்தாலும், தரிசனத்தை விட்டு விலகச் செய்வோரின் உதவி தேவையற்றது என்று சொன்னதுடன், மீடியா துறையின் தேவைகளுக்காக ஜெபியுங்கள் என்ற ஆவிக்குரிய ஆலோசனையை விடுத்தார். அதனைத் தொடர்ந்து எங்களிடத்தில் நிலவியது அமைதிதான்.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...