Skip to main content

'இது ரொம்பா டேஞ்சர்'

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 42

'இது ரொம்பா டேஞ்சர்'


 

ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் பணியாற்றும் நான் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் கட்டுரைகளையும், செய்திகளையும் அதிகம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவன். அத்தோடு, சகோதரரின் எழுதும் பாங்கினை அதிகமாக காணும் வாய்ப்பு எனக்குக் கிடைதுமிருக்கிறது. அதுமாத்திரமல்ல, பிற இதழ்களில் வெளியான, சகோதரர் வாசித்துப் பயன் பெற்ற கட்டுரைகளையும் சில நேரங்களில் என்னிடத்தில் சகோதரர் கொடுப்பது வழக்கம். வெளிநாளுகள், வெளியூர்களுக்கு ஊழியத்தின் நிமித்தம் சென்று திரும்பும்போது கொண்டுவரும் பல ஊழியர்கள் எழுதிய புத்தகங்களையும் சகோதரர் என்னிடத்தில் கொடுக்கும்போது, ஆசையுடன் அதனை நான் பெற்றுக்கொள்ளுவேன். வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்ததால், எழுத்தினாலே சகோதரருடன் அதிகம் இணைந்திருந்தேன். எழுத்துக்கு சகோதரர் கொடுக்கும் முன்னுரிமையையும் நான் நன்கு அறிந்தவன். சகோதரரின் செய்திகளை கட்டுரைகளை கணணியில் நான் அச்சடித்துக் கொடுக்கும்போது, pசழழக வாசிக்கவேண்டுமா? என்று கேட்பார்; ஆம் என்று நான் சொல்லிவிட்டால், அத்தனை கரிசனையாய் அதனை சகோதரர் திருத்தித் தருவார். ஒருமுறை என் எழுத்துப் பணியினைக் குறித்து சகோதரரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் நான் எதையாவது எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை அவரிடத்தில் தெரிவித்தேன். பல்வேறு தலைப்புகள் இன்னும் எழுதப்படாமல், கிடப்பில் உள்ளதையும், அதனைக் குறித்த அழுத்தம் எப்போதும் உள்ளத்தில் அதிகரித்துக்கொண்டே இருப்பதனையும் சகோதரரிடம் தெரிவித்தேன். அப்பொழுது, சகோதரர் தன்னுடைய எழுத்துப் பணியினைக் குறித்த ஓர் சிறிய அறிமுகத்தை எனக்கு எடுத்துச் சொன்னார். நான் எழுதுபவன், ஆனால் எழுதிக்கொண்டே மாத்திரம் இருப்பவனல்ல. எப்போது, என்ன எழுதவேண்டுமோ, அப்போது அதனை எழுதிவிட்டு, பின்னர் பிற பணிகளின் செய்யத்தொடங்கிவிடுவேன் என்றார். அவருடைய அறிமுகம் எழுத்துப் பணியில் நான் கடைபிடிக்கவேண்டிய சில நடைமுறைகளைக் கற்றுத்தந்தது. எழுதும்போது மிக மிக அமைதியான சூழ்நிலையினை விருப்புகிறவன் நான்; அப்போது வரும் இடையூறுகளைத் தாங்கிக்கொள்ள நான் அதிகமாக ஆவிக்குரிய பெலனை பிரயோகப்படுத்தவேண்டியதிருக்கும் என்றேன். மேலும், 'பெண்ணை விட்டாலும், pநn-ஐ விடமுடியாது' என்று அடுக்குத்தொடராய்ச் சொன்னேன். எனது வாயிலிருந்து இந்த வார்த்தை பிறந்ததும், உடனே சகோதரர் 'இது ரொம்ப டேஞ்ஜர்' என்றார்; எனக்கும் ஆபத்து அப்போது புரிந்தது.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை