முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'இது ரொம்பா டேஞ்சர்'

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 42

'இது ரொம்பா டேஞ்சர்'


 

ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் பணியாற்றும் நான் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் கட்டுரைகளையும், செய்திகளையும் அதிகம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவன். அத்தோடு, சகோதரரின் எழுதும் பாங்கினை அதிகமாக காணும் வாய்ப்பு எனக்குக் கிடைதுமிருக்கிறது. அதுமாத்திரமல்ல, பிற இதழ்களில் வெளியான, சகோதரர் வாசித்துப் பயன் பெற்ற கட்டுரைகளையும் சில நேரங்களில் என்னிடத்தில் சகோதரர் கொடுப்பது வழக்கம். வெளிநாளுகள், வெளியூர்களுக்கு ஊழியத்தின் நிமித்தம் சென்று திரும்பும்போது கொண்டுவரும் பல ஊழியர்கள் எழுதிய புத்தகங்களையும் சகோதரர் என்னிடத்தில் கொடுக்கும்போது, ஆசையுடன் அதனை நான் பெற்றுக்கொள்ளுவேன். வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்ததால், எழுத்தினாலே சகோதரருடன் அதிகம் இணைந்திருந்தேன். எழுத்துக்கு சகோதரர் கொடுக்கும் முன்னுரிமையையும் நான் நன்கு அறிந்தவன். சகோதரரின் செய்திகளை கட்டுரைகளை கணணியில் நான் அச்சடித்துக் கொடுக்கும்போது, pசழழக வாசிக்கவேண்டுமா? என்று கேட்பார்; ஆம் என்று நான் சொல்லிவிட்டால், அத்தனை கரிசனையாய் அதனை சகோதரர் திருத்தித் தருவார். ஒருமுறை என் எழுத்துப் பணியினைக் குறித்து சகோதரரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் நான் எதையாவது எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை அவரிடத்தில் தெரிவித்தேன். பல்வேறு தலைப்புகள் இன்னும் எழுதப்படாமல், கிடப்பில் உள்ளதையும், அதனைக் குறித்த அழுத்தம் எப்போதும் உள்ளத்தில் அதிகரித்துக்கொண்டே இருப்பதனையும் சகோதரரிடம் தெரிவித்தேன். அப்பொழுது, சகோதரர் தன்னுடைய எழுத்துப் பணியினைக் குறித்த ஓர் சிறிய அறிமுகத்தை எனக்கு எடுத்துச் சொன்னார். நான் எழுதுபவன், ஆனால் எழுதிக்கொண்டே மாத்திரம் இருப்பவனல்ல. எப்போது, என்ன எழுதவேண்டுமோ, அப்போது அதனை எழுதிவிட்டு, பின்னர் பிற பணிகளின் செய்யத்தொடங்கிவிடுவேன் என்றார். அவருடைய அறிமுகம் எழுத்துப் பணியில் நான் கடைபிடிக்கவேண்டிய சில நடைமுறைகளைக் கற்றுத்தந்தது. எழுதும்போது மிக மிக அமைதியான சூழ்நிலையினை விருப்புகிறவன் நான்; அப்போது வரும் இடையூறுகளைத் தாங்கிக்கொள்ள நான் அதிகமாக ஆவிக்குரிய பெலனை பிரயோகப்படுத்தவேண்டியதிருக்கும் என்றேன். மேலும், 'பெண்ணை விட்டாலும், pநn-ஐ விடமுடியாது' என்று அடுக்குத்தொடராய்ச் சொன்னேன். எனது வாயிலிருந்து இந்த வார்த்தை பிறந்ததும், உடனே சகோதரர் 'இது ரொம்ப டேஞ்ஜர்' என்றார்; எனக்கும் ஆபத்து அப்போது புரிந்தது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

இது தமிழ்நாடு இல்ல; பீஹார்

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 7 இது தமிழ்நாடு இல்ல; பீஹார்   ஜெம்ஸ் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் சிக்காரியாவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலுள்ள ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தில் 2003-ம் ஆண்டு நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தொழிற்பயிற்சி மையம் அரசாங்க அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துகொண்டிருந்தன. ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வராயிருந்த சகோதரர் ஜேசுதாசன் உடன் நானும் இணைந்து அதற்கான பணிகளைச் செய்துகொண்டிருந்தேன். அரசு அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் சில பொருட்களையும், இயந்திரங்களையும் வாங்க முற்பட்டோம். பொருட்கள் சிலவற்றை வாங்கும்படியாக, பீஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்த சகோதரர் ஜேசுதாசன், அங்கிருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு, ஒன்றரை லட்சம் ரூபாயை ஜெம்ஸ் அலுவலகத்திலிருந்து பெற்று ரயிலில் பாட்னா வந்து சேரும்படி கூறினார். ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்திலிருந்து ஜெம்ஸ் தலைமை அலுவலகத்திற்கு ஸ்கூட்டரில் வந்து சேர்ந்த நான்,  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச்...