முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெடிகுண்டு, வெடிகுண்டு

 

    

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 16

வெடிகுண்டு, வெடிகுண்டு

3 April 2014

 

தமிழ்நாட்டில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் மேடையில் முழங்கும் செய்திகளுடன், அவர் மற்றோரை எச்சரிக்கும் காரியங்களையும் குறித்து அறிந்த நான், அது குறித்து விளக்கமாக அவரிடத்தில் விடை பெற விரும்பினேன். ஒரு முறை தமிழ்நாட்டில் கூட்டங்களை முடித்துவிட்டு பீஹார் வந்து சேர்ந்தார் சகோதரர். அது ஓர் காலை நேரம், மீடியா துறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வந்து அமர்ந்தார். அவரது அறையிலிருந்து சுமார் இருபது அடி தூரத்திலேயே இருந்த எனது அலுவலக இருக்கையில் அமர்ந்திருந்த நான், எவரும் அவரைச் சந்திக்கக் காத்திருக்கின்றனரா? அல்லது அவர் ஏதாவது அத்தியாவசியமான வேலையைச் சகோதரர் செய்துகொண்டிருக்கின்றாரா என்று என்னுடைய இருக்கையிலிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன். அவரைச் சந்திக்க இது சரியான நேரம் என்பதை உணர்ந்த நான், அவரது அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். 'Praise the Lord' என்றவாறு, 'அண்ணன் உங்களிடத்தில் ஒரு சந்தேகம் கேட்கவேண்டும்' என்று சொன்னேன்; தராளமாக என்று எதிர் இருக்கையில் அமரும்படி வலது கரத்தை இருக்கையை நோக்கி நீட்டினார். இருக்கையில் அமர்ந்த நான், 'அண்ணன், ஆசீர்வாத செங்கல்கள் விற்பனை, தங்கச் சாவி விற்பனை, பங்காளர் திட்டம் என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் ஏமாற்றப்படுவதைக் குறித்து திறந்த வெளி மைதானத்தில் நீங்கள் பேசியதாகக் கேள்விப்பட்டேன்; அப்படிச் செய்பவர்களிடம் நீங்கள் தனியாக சொல்லலாமே, ஏன் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும்? என்ற கேள்வியை முன்வைத்தேன். அதற்கு சகோதரர், தம்பி, யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்று எனக்குச் சரியாகத் தெரியாது, ஆனால், கிறிஸ்தவ மக்களிடையே தவறாகக் காணப்படும் காரியங்களை நான் அறிந்திருக்கிறேன், சாலையில வெடிகுண்டு இருந்தா நீங்க என்ன செய்வீங்க? வெடிகுண்டு வச்சது யாருன்னு தேடுவீங்களா? அல்லது அது வெடித்து யாரும் இறந்துவிடக்கூடாது என்று அவ்வழியே வருவோரை வெடிகுண்டு, வெடிகுண்டு என்று எச்சரிப்பீர்களா? என்று கேட்டார்; எச்சரிப்பதுதான் என் முதல் வேலையாயிருக்கும் என்றேன் நான்; சரியாகச் சொன்னீர்கள்; அதைத்தானே நானும் செய்துவிட்டு வருகிறேன் என்றார். குண்டு வைத்தவர்களை நாம் தேடிக்கொண்டிருந்தால், குண்டு வெடித்து இறப்போரின் எண்ணிக்கைக்கு நாம் பொறுப்பாகிவிடுவோமே என்றார். ஆம், ஊரைக் காப்பதுதான் ஊழியரின் வேலை.

காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.(எசே 33:6)

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்ப...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...