முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துறையை நடத்தும் முறை

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 50

துறையை நடத்தும் முறை


 

ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், ஜெம்ஸ் வெளியிடும் வி.சி.டிக்கள், பாடல் புத்தகங்கள் மற்றும் பிறவற்றை மக்களண்டை கொண்டு சேர்க்கும் பொறுப்பினை சகோதரர் ஞானராஜ் செய்துகொண்டிருந்தார். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கொடுக்கும் செய்திகளை பதிவு செய்யும் பொறுப்பும் அவருடையதாயிருந்தது. அந்நாட்களில், கேசட்டுகளிலேயே அதிகமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுவந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் சகோதரர் வழங்கும் செய்திகள், ஜெம்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள வேதாதகமக் கல்லூரி மற்றும் பிற பயிற்சி மையங்களில் சகோதரர் வழங்கும் செய்திகள் அத்தனையையும் அந்நாட்களில் பதிவு செய்தவர் அவரே. குடும்ப சூழ்நிலையின் நிமித்தமாக தமிழகம் செல்லும் நிலை உண்டானபோது, அப்பொறுப்பினை சகோதரர் நோபிள் கவனித்துவந்தார். சில நாட்களுக்குப் பின்னர், ஜெம்ஸ் மீடியா துறையில் ஆடியோ பிரிவும், வெளியீடுகளை விநியோகிக்கும் பிரிவும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. ஆடியோ பிரிவின் பொறுப்பாளராக சகோதரர் நோபிள் நியமிக்கப்பட்டபோது, விநியோகிக்கும் பிரிவினைக் கவனிக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது, ஒருமுறை பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்தின் முன் வாசலில் சிறுவர் துறை அலுவலகத்தின் ஜன்னலை ஒட்டியவாறு நான் நின்றுகொண்டிருந்தபோது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வீட்டிலிருந்து தனது அலுவலகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், வணக்கம் சொல்லிவிட்டு அங்கேயே நின்றேன். சகோதரர் எனது அருகில் வந்ததும், நின்றவராக, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையின் விநியோகப் பிரிவின் பணிகளைக் குறித்துப் பேசினார். கேன்டீன் மற்றும் வெளியீட்டுத்துறை இவ்விரண்டையும் பிசினஸாச செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் உண்டாகிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டும்; இவ்விரண்டிலும் இந்த ஆபத்து உண்டு என்று சொன்னார். ஜனங்கள் பயன் பெறட்டும், அதுவே பிரதானமானது, இலாப நோக்கில் செயல்பட்டுவிடக்கூடாது என்று சொல்லிவிட்டு, தனது அலுவலகத்தை நோக்கி விரைந்தார். அப்போது, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையை நடத்தும் முறை எனக்கு விளங்கியது.

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்

       சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 9 தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்   2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமத...