Skip to main content

துறையை நடத்தும் முறை

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்      


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 50

துறையை நடத்தும் முறை


 

ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில், ஜெம்ஸ் வெளியிடும் வி.சி.டிக்கள், பாடல் புத்தகங்கள் மற்றும் பிறவற்றை மக்களண்டை கொண்டு சேர்க்கும் பொறுப்பினை சகோதரர் ஞானராஜ் செய்துகொண்டிருந்தார். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் கொடுக்கும் செய்திகளை பதிவு செய்யும் பொறுப்பும் அவருடையதாயிருந்தது. அந்நாட்களில், கேசட்டுகளிலேயே அதிகமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுவந்தன. ஞாயிற்றுக் கிழமைகளில் சகோதரர் வழங்கும் செய்திகள், ஜெம்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள வேதாதகமக் கல்லூரி மற்றும் பிற பயிற்சி மையங்களில் சகோதரர் வழங்கும் செய்திகள் அத்தனையையும் அந்நாட்களில் பதிவு செய்தவர் அவரே. குடும்ப சூழ்நிலையின் நிமித்தமாக தமிழகம் செல்லும் நிலை உண்டானபோது, அப்பொறுப்பினை சகோதரர் நோபிள் கவனித்துவந்தார். சில நாட்களுக்குப் பின்னர், ஜெம்ஸ் மீடியா துறையில் ஆடியோ பிரிவும், வெளியீடுகளை விநியோகிக்கும் பிரிவும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. ஆடியோ பிரிவின் பொறுப்பாளராக சகோதரர் நோபிள் நியமிக்கப்பட்டபோது, விநியோகிக்கும் பிரிவினைக் கவனிக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது, ஒருமுறை பீஹாரிலுள்ள ஜெம்ஸ் தலைமை அலுவலகத்தின் முன் வாசலில் சிறுவர் துறை அலுவலகத்தின் ஜன்னலை ஒட்டியவாறு நான் நின்றுகொண்டிருந்தபோது, சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வீட்டிலிருந்து தனது அலுவலகத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், வணக்கம் சொல்லிவிட்டு அங்கேயே நின்றேன். சகோதரர் எனது அருகில் வந்ததும், நின்றவராக, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையின் விநியோகப் பிரிவின் பணிகளைக் குறித்துப் பேசினார். கேன்டீன் மற்றும் வெளியீட்டுத்துறை இவ்விரண்டையும் பிசினஸாச செய்யவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் உண்டாகிவிடாதபடி கவனமாயிருக்கவேண்டும்; இவ்விரண்டிலும் இந்த ஆபத்து உண்டு என்று சொன்னார். ஜனங்கள் பயன் பெறட்டும், அதுவே பிரதானமானது, இலாப நோக்கில் செயல்பட்டுவிடக்கூடாது என்று சொல்லிவிட்டு, தனது அலுவலகத்தை நோக்கி விரைந்தார். அப்போது, ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையை நடத்தும் முறை எனக்கு விளங்கியது.

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை