முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சரியாச் செய்தீங்க

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்    


உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 51

சரியாச் செய்தீங்க


 

ஜார்க்ண்ட் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் என்னுமிடத்தில் படைமுயற்சிக் கூட்டங்கள் நடைபெறவிருந்தன. அப்பகுதியின் சபையைச் சேர்ந்த மூத்தோரும், போதகரும், விசுவாசிகளும் இணைந்து அக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்; சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் செய்தியாளராக அழைக்கப்பட்டிருந்தார். அந்நாட்களில், படைமுயற்சிக் கூட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். எனவே, கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே குழுவினரோடும், ஜெனரேட்டர் பொருந்திய பேருந்தோடும் அப்பகுதிக்குச் நாங்கள் சென்றிருந்தோம். கூட்டம் தொடங்கியது, ஜனங்கள் திரளாக வந்து தேவ வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பிசாசின் பிடியிலிருந்த பலர் அப்போது விடுதலையும் பெற்றனனர். கூட்டம் நடத்துவதற்காக மின்சார இணைப்பு ஏதும் கிடைக்காததினால், நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் மூலமாகவே கூட்டத்தினை நடத்திக்கொண்டிருந்தோம். இறுதி நாள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஜெனரேட்டர் திடீரென பழுதானது; ஜெனரேட்டரின் டீசல் தொட்டியிலிருந்து எஞ்சினுக்கு வரும் டீசல் திடீரென அளவு குறையத் தொடங்கியது. காரணத்தை அறிய முற்பட்டபோது, இடையில் உள்ள பில்டரில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அப்போது எங்களிடத்தில் மாற்று பில்டரும் இல்லாதிருந்தது. ஜெனரேட்டர் வாகனத்தை ஓட்டிவந்தவரும், ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தவருமான ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் அகஸ்டின் (அகஸ்டின் ஜெபக்குமார் அல்ல, மீடியா துறையின் ஊழியர்) ஜெனரேட்டரில் உண்டான பழுதினை என்னிடம் தெரிவித்தார். ஒரு சில நிமிடங்கள் அவர் தனது கைகளால் பம்ப் செய்தவாறு ஜெனரேட்டரை இயக்கிக்கொண்டிருந்தார். அந்த ஊழியர் என்னிடத்தில், 'கிருபாகரன் அண்ணன், என்ன செய்யலாம் சொல்லுங்க' என்று கேட்டார். ஜெனரேட்டர் நின்றுவிட்டால் கூட்டம் முழுவதும் தடைபட்டுவிடும், பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டினால், ஜெனரேட்டரின் எஞ்சினே பழுதாகிவிடும் நிலை ஏற்படும், அது மிகுந்த செலவை உண்டாக்கிவிடும். ஜனங்களோ ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள், சகோதரர் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார். இதனைக் கண்ட நான் பில்டர் இல்லாமல் ஜெனரேட்டரை ஓட்டும்படி சொன்னேன். அப்படியே கூட்டம் முடியும் வரை ஜெனரேட்டர் ஓடியது. கூட்டத்தின் முடிவில், சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரைச் சந்தித்த நான், 'அண்ணன், ஜெனரேட்டர் பழுதாகிவிட்டது, எனவே செய்யக்கூடாத ஒன்றை அப்போது செய்துவிட்டேன், கூட்டம் தடைபட்டுவிடக்கூடாது என்றுதான் அப்படிச் செய்தேன்' என்று சொன்னேன். அப்போது சகோதரர், 'கிருபா, நீங்க சரியாகச் செய்தீங்க, அப்படித்தான் செய்யவேண்டும், சூழ்நிலையினைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்' என்று சொன்னார். சகோதரரின் குறி ஜனங்கள் மீதுதான், ஜெனரேட்டர் மீது அல்ல என்பது எனக்கு அப்போது தென்பட்டது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...