முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு ஒன்னும் ஆகலியே!

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்            

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 39

உங்களுக்கு ஒன்னும் ஆகலியே!


 

2009-ம் ஆண்டு, பீஹாரில் ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது, ஜெம்ஸ் வாகனத்துறையினையின் சில பொறுப்புகளும் எனது கையில் கொடுக்கப்பட்டிருந்தன. புதிய வாகனங்களை வாங்குவது, வாகனங்களுக்கு பதிவு செய்வது, காப்பீடு மற்றும் சாலை வரி உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்துவது போன்ற பொறுப்புகளையும் நான் கவனித்துக்கொண்டிருந்தேன். புதிய நான்கு சக்கர இலகுரக வாகனங்களை, பீஹாரின் தலைநகர் பாட்னாவில் உள்ள மஹேந்திரா கம்பெனியில் வாங்கிக்கொண்டிருந்தோம். புதிய வாகனங்களை வாங்கும்போது அதனை பாட்னாவிலிருந்து டெஹ்ரி ஆன் சோனுக்கு ஓட்டி வருவர டிரைவர்கள் சிலரை நான் உடன் அழைத்துச் செல்வது எனது வழக்கம். டிரைவர்கள் கிடைக்காத வேளையில் நானே வாகனத்தை ஓட்டிக்கொண்டுவருவேன். 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Bolero SLX வாகனம் ஒன்றை ஸ்தாபனத்திற்கு வாங்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொன்னபோது, வாகனத்தை பதிவுசெய்து, சில நாட்களுக்குப் பின்னர் வாகனத்தை எடுத்துவரும்படியாக பாட்னாவிற்குச் சென்றேன். நிறுவனத்திலிருந்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வதில் நேரமாகிவிட்டபடியினால், இரவு சுமார் 9 மணிக்கு மேலாகவே பாட்னாவிலிருந்து புறப்படும் சூழ்நிலை உண்டானது.

எப்போதும் பாட்னாவிலிருந்து புதிய வாகனத்துடன் புறப்படும்போது, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜெபிக்கும்படியாகவும் கேட்டுக்கொண்டு, பின்னரே புறப்படுவது எனது வழக்கமாயிருந்தது. அன்றும், இரவு நேரத்தில் சகோதரரிடம் தெரிவித்துவிட்டு, புறப்பட்டேன்; வாகனத்தில் நான் வந்துகொண்டிருக்கும்போது, மொகனியா என்ற ஊர் அருகே சாலையின் ஓரத்தில் எவ்வித விளக்குகள் இல்லாமல், நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் எனது கண்ணுக்குத் தென்படவில்லை. அருகில் வந்த பின்னரே நான் அதனைக் கவனித்தபடியினால், வாகனத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. டிராக்டரின் பின் பகுதியில் நான் ஓட்டி வந்த வாகனம் வேகமாக மோதியது. எனக்கோ, பெரிய அதிர்ச்சி; நான்கு சக்கர வாகனத்தில் நான் சந்தித்த முதல் விபத்து இது. புதிதாக வாங்கிக்கொண்டுவந்த வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டதே என்று செய்வதென்னவென்று அறியாதவனாக, வாகனத்திலிருந்து வெளியே வந்து பார்த்தேன்; வாகனத்தின் முன்பகுதியோ சேதமடைந்திருந்தது; எனினும், வாகனம் ஓட்டிச் செல்லும் நிலையில் இருந்தது. அங்கிருந்து சகோதரருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'அண்ணன், வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டது' என்று நான் பதற்றத்துடன் தெரிவித்தபோது, 'மெதுவாக வந்திருக்கலாமே' 'பார்த்து வந்திருக்கலாமே' 'எப்படி முட்டியது?' என எதையும் வினவாமல், விபத்தைக் குறித்து விபரமாக எதுவும் பேசாமல், 'உங்களுக்கு ஒன்னும் ஆகலியே' என்று கேட்டார்; இல்லை என்று பதில் சொன்னேன். 'வாகனத்தை பழுது பார்த்துக்கொள்ளலாம்' என்று சாந்தமாகச் சொன்னார். விலைகொடுத்து வாங்கிய வாகனத்தை விட, விலைமதிப்பானவன் நான் என்பது அவரது உரையாடலில் தெரிந்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...