முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு ஒன்னும் ஆகலியே!

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்            

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 39

உங்களுக்கு ஒன்னும் ஆகலியே!


 

2009-ம் ஆண்டு, பீஹாரில் ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது, ஜெம்ஸ் வாகனத்துறையினையின் சில பொறுப்புகளும் எனது கையில் கொடுக்கப்பட்டிருந்தன. புதிய வாகனங்களை வாங்குவது, வாகனங்களுக்கு பதிவு செய்வது, காப்பீடு மற்றும் சாலை வரி உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்துவது போன்ற பொறுப்புகளையும் நான் கவனித்துக்கொண்டிருந்தேன். புதிய நான்கு சக்கர இலகுரக வாகனங்களை, பீஹாரின் தலைநகர் பாட்னாவில் உள்ள மஹேந்திரா கம்பெனியில் வாங்கிக்கொண்டிருந்தோம். புதிய வாகனங்களை வாங்கும்போது அதனை பாட்னாவிலிருந்து டெஹ்ரி ஆன் சோனுக்கு ஓட்டி வருவர டிரைவர்கள் சிலரை நான் உடன் அழைத்துச் செல்வது எனது வழக்கம். டிரைவர்கள் கிடைக்காத வேளையில் நானே வாகனத்தை ஓட்டிக்கொண்டுவருவேன். 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Bolero SLX வாகனம் ஒன்றை ஸ்தாபனத்திற்கு வாங்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொன்னபோது, வாகனத்தை பதிவுசெய்து, சில நாட்களுக்குப் பின்னர் வாகனத்தை எடுத்துவரும்படியாக பாட்னாவிற்குச் சென்றேன். நிறுவனத்திலிருந்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வதில் நேரமாகிவிட்டபடியினால், இரவு சுமார் 9 மணிக்கு மேலாகவே பாட்னாவிலிருந்து புறப்படும் சூழ்நிலை உண்டானது.

எப்போதும் பாட்னாவிலிருந்து புதிய வாகனத்துடன் புறப்படும்போது, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜெபிக்கும்படியாகவும் கேட்டுக்கொண்டு, பின்னரே புறப்படுவது எனது வழக்கமாயிருந்தது. அன்றும், இரவு நேரத்தில் சகோதரரிடம் தெரிவித்துவிட்டு, புறப்பட்டேன்; வாகனத்தில் நான் வந்துகொண்டிருக்கும்போது, மொகனியா என்ற ஊர் அருகே சாலையின் ஓரத்தில் எவ்வித விளக்குகள் இல்லாமல், நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் எனது கண்ணுக்குத் தென்படவில்லை. அருகில் வந்த பின்னரே நான் அதனைக் கவனித்தபடியினால், வாகனத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. டிராக்டரின் பின் பகுதியில் நான் ஓட்டி வந்த வாகனம் வேகமாக மோதியது. எனக்கோ, பெரிய அதிர்ச்சி; நான்கு சக்கர வாகனத்தில் நான் சந்தித்த முதல் விபத்து இது. புதிதாக வாங்கிக்கொண்டுவந்த வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டதே என்று செய்வதென்னவென்று அறியாதவனாக, வாகனத்திலிருந்து வெளியே வந்து பார்த்தேன்; வாகனத்தின் முன்பகுதியோ சேதமடைந்திருந்தது; எனினும், வாகனம் ஓட்டிச் செல்லும் நிலையில் இருந்தது. அங்கிருந்து சகோதரருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'அண்ணன், வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டது' என்று நான் பதற்றத்துடன் தெரிவித்தபோது, 'மெதுவாக வந்திருக்கலாமே' 'பார்த்து வந்திருக்கலாமே' 'எப்படி முட்டியது?' என எதையும் வினவாமல், விபத்தைக் குறித்து விபரமாக எதுவும் பேசாமல், 'உங்களுக்கு ஒன்னும் ஆகலியே' என்று கேட்டார்; இல்லை என்று பதில் சொன்னேன். 'வாகனத்தை பழுது பார்த்துக்கொள்ளலாம்' என்று சாந்தமாகச் சொன்னார். விலைகொடுத்து வாங்கிய வாகனத்தை விட, விலைமதிப்பானவன் நான் என்பது அவரது உரையாடலில் தெரிந்தது. 

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

குடும்பமா? தேவனா? ஊழியமா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 4 குடும்பமா? தேவனா? ஊழியமா?   அது ஒரு காலை நேரம்;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். ஆவிக்குரிய வாழ்க்கையின் சில ஐயங்களைப் போக்கும் வண்ணமாக ‘Praise the Lord அண்ணன்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தேன். சகோதரரும், வாங்க என்று சொல்லியவாறு, இருக்கையில் அமரும்படி கேட்டுக்கொண்டார். அழைப்பு பெற்றவன் தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவரது அறிவிலிருந்து அறியும் ஆர்வத்துடன் அமர்ந்தேன். விடை பெற சில வார்த்தைகளைக் கேள்விகளாக்கி அவருக்கு முன் வைத்தேன். அலுவல்களின் மத்தியிலும், அகற்றும் நோக்கமில்லாமல், என் வார்த்தைகளைக் கேட்டு உள் வாங்கியவாறு, மேஜையிலிருந்த காகிதங்களில் சில சித்திரங்களைத் தீட்டி, அவைகளில் எழுதி, ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவதைப் போல அழைக்கப்பட்டவனைப் பற்றிய அறிவை என் சிந்தையில் ஏற்றத் தொடங்கினார். பேசிக்கொண்டே ஒரு காகிதத்தில் (படம்-1) ஏழு வட்டங்களை வரைந்தார்; அதில், உலகம், இந்தியா, நண்பர்க...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...