Skip to main content

உங்களுக்கு ஒன்னும் ஆகலியே!

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்            

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 39

உங்களுக்கு ஒன்னும் ஆகலியே!


 

2009-ம் ஆண்டு, பீஹாரில் ஜெம்ஸ் வெளியீட்டுத் துறையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது, ஜெம்ஸ் வாகனத்துறையினையின் சில பொறுப்புகளும் எனது கையில் கொடுக்கப்பட்டிருந்தன. புதிய வாகனங்களை வாங்குவது, வாகனங்களுக்கு பதிவு செய்வது, காப்பீடு மற்றும் சாலை வரி உள்ளிட்டவைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்துவது போன்ற பொறுப்புகளையும் நான் கவனித்துக்கொண்டிருந்தேன். புதிய நான்கு சக்கர இலகுரக வாகனங்களை, பீஹாரின் தலைநகர் பாட்னாவில் உள்ள மஹேந்திரா கம்பெனியில் வாங்கிக்கொண்டிருந்தோம். புதிய வாகனங்களை வாங்கும்போது அதனை பாட்னாவிலிருந்து டெஹ்ரி ஆன் சோனுக்கு ஓட்டி வருவர டிரைவர்கள் சிலரை நான் உடன் அழைத்துச் செல்வது எனது வழக்கம். டிரைவர்கள் கிடைக்காத வேளையில் நானே வாகனத்தை ஓட்டிக்கொண்டுவருவேன். 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Bolero SLX வாகனம் ஒன்றை ஸ்தாபனத்திற்கு வாங்கும்படியாக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சொன்னபோது, வாகனத்தை பதிவுசெய்து, சில நாட்களுக்குப் பின்னர் வாகனத்தை எடுத்துவரும்படியாக பாட்னாவிற்குச் சென்றேன். நிறுவனத்திலிருந்து வாகனத்தைப் பெற்றுக்கொள்வதில் நேரமாகிவிட்டபடியினால், இரவு சுமார் 9 மணிக்கு மேலாகவே பாட்னாவிலிருந்து புறப்படும் சூழ்நிலை உண்டானது.

எப்போதும் பாட்னாவிலிருந்து புதிய வாகனத்துடன் புறப்படும்போது, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜெபிக்கும்படியாகவும் கேட்டுக்கொண்டு, பின்னரே புறப்படுவது எனது வழக்கமாயிருந்தது. அன்றும், இரவு நேரத்தில் சகோதரரிடம் தெரிவித்துவிட்டு, புறப்பட்டேன்; வாகனத்தில் நான் வந்துகொண்டிருக்கும்போது, மொகனியா என்ற ஊர் அருகே சாலையின் ஓரத்தில் எவ்வித விளக்குகள் இல்லாமல், நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் எனது கண்ணுக்குத் தென்படவில்லை. அருகில் வந்த பின்னரே நான் அதனைக் கவனித்தபடியினால், வாகனத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. டிராக்டரின் பின் பகுதியில் நான் ஓட்டி வந்த வாகனம் வேகமாக மோதியது. எனக்கோ, பெரிய அதிர்ச்சி; நான்கு சக்கர வாகனத்தில் நான் சந்தித்த முதல் விபத்து இது. புதிதாக வாங்கிக்கொண்டுவந்த வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டதே என்று செய்வதென்னவென்று அறியாதவனாக, வாகனத்திலிருந்து வெளியே வந்து பார்த்தேன்; வாகனத்தின் முன்பகுதியோ சேதமடைந்திருந்தது; எனினும், வாகனம் ஓட்டிச் செல்லும் நிலையில் இருந்தது. அங்கிருந்து சகோதரருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'அண்ணன், வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டது' என்று நான் பதற்றத்துடன் தெரிவித்தபோது, 'மெதுவாக வந்திருக்கலாமே' 'பார்த்து வந்திருக்கலாமே' 'எப்படி முட்டியது?' என எதையும் வினவாமல், விபத்தைக் குறித்து விபரமாக எதுவும் பேசாமல், 'உங்களுக்கு ஒன்னும் ஆகலியே' என்று கேட்டார்; இல்லை என்று பதில் சொன்னேன். 'வாகனத்தை பழுது பார்த்துக்கொள்ளலாம்' என்று சாந்தமாகச் சொன்னார். விலைகொடுத்து வாங்கிய வாகனத்தை விட, விலைமதிப்பானவன் நான் என்பது அவரது உரையாடலில் தெரிந்தது. 

www.sinegithan.in

Comments

Popular posts from this blog

சந்திப்பில் முந்தியவர்

  சிறுவயதில், சகோ.  தினகரன்  அவர்களது கூட்டங்களில்   அதிகம்  கலந்துகொண்டதினாலும்,   அவரது   பழைமையான   பாடல்களால் பலமுறை ஈர்க்கப்பட்டதினாலும், ஒருமுறையாவது அவரை சந்தித்துப் பேசவேண்டும்  என்ற  விருப்பம்  எனக்குள்  உண்டாயிருந்தது.  இத்தனை  பெரிய  மனிதரை நேரடியாகச் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒருபுறம் என் சிந்தையில் இருந்தபோதிலும், விடுமுறை நாள் ஒன்றில் அவரைச் சந்திக்கும்படியாக 'இயேசு அழைக்கிறார்' ஊழியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.  வரவேற்பறை ஊழியரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு, சகோதரரைச் சந்திக்கவேண்டும் என்ற  விருப்பத்தைத்  தெரிவிக்க,  சற்று  பொறுத்திருங்கள்  என்று  என்னை  இருக்கையில் அமரச்செய்தார் அந்த சகோதரர்.  சில நிமிடங்களுக்குப் பின்பு என்னைச் சந்திக்க வந்த ஊழியர் ஒருவர், சகோதரர் தினகரன் இருக்கும் அறையினை நோக்கி என்னை அழைத்துச்  சென்றார்.  அறையின்  கதவினைத்  திறக்காமல்,  சாத்தப்பட்டிருந்த  கதவிற்கு  வெளியிலேயே  என்னை  விட்டுவிட்டு  உள்ளே  சென்று  சகோதரரைச்  சந்தித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். 'என்னை யார் என்று அறிமுகப்படுத்துவது?  என்னை 

புள்ளியா அல்லது கமாவா

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார்   உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்   - 1 புள்ளியா அல்லது கமாவா ஒருமுறை  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடஇந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள ஓர் இடத்தில் படைமுயற்சிக் கூட்டத்தை நடத்தும்படியாக அவருடன் காரில் ஒன்றாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். சகோதரரின் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களை அறிந்துகொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டும் நான், அன்றைய பயணத்தின்போதும் ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள் சிலவற்றையாவது அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், சில கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பெற்றுக்கொண்டிருந்தேன். மீடியா துறையில் உடன் பணியாற்றும் சகோதரர் துரையும் எங்களுடன் இருந்தார். அப்போது, சகோதரரிடம், ஊழியத்திற்கென்று சிலர் வந்து சில நாட்கள் இணைந்து பின்னர் சென்றுவிடுவதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தேன். அப்போது அவர் : சிலரை தேவன் டிராக்டரைப் போல ஊழியத்தில் இணைப்பதுண்டு, அவர்கள் உழுதுவிட்டு சென்றுவிடுவார்கள்; சிலரை உரமாக இணைப்பதுண்டு, உரமிட்டவுடன் அவர்களும் சென

இறைவனையா? இறைவனைப் பற்றியா?

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமா ர் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 57 இறைவனையா? இறைவனைப் பற்றியா?      15.9.2022 - அது ஒரு காலை அலுவலக நேரம். ஜெம்ஸ் ஊழியம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு (1972-2022), வெளியிடப்படுவதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த நினைவு மலருக்காக சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் ஆங்கிலத்தில் எழுதியிருந்த ஒரு பக்க முன்னுரையின் தமிழாக்கத்தினைக் காண்பிக்கும்படியாக அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தேன். தமிழாக்கத்தைக் கரங்களில் வாங்கி வாசித்ததும், அதில் திருத்தப்படவேண்டிய சில வரிகளையும் வார்த்தைகளையும், அத்துடன் ஏன் அந்த வார்த்தைகள் அவசியம் என்பதையும் ஆலோசனையாகச் சொல்லித்தந்துகொண்டிருந்தார் சகோதரர். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதின் சாரத்தை அப்படியே ஈரமாகத் தமிழிலும் எதிர்பார்க்கிறார் என்ற அவரது உள்ளத்தின் எதிர்பார்ப்பின் வார்த்தைகள் மௌனமாக எனது மனதை வந்து அடைந்துகொண்டிருந்தது.       அப்போது ' Knowing God ' என்பதை, 'இறைவனைப் பற்றிய அறிவு' என்று தமிழில் நான் மொழியாக்கம் செய்திருந்ததை வாசித்த அவர், அது 'இறைவனை