முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகவீனத்திலும் சுகம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 32

சுகவீனத்திலும் சுகம்


 

சில வருடங்களுக்கு முன்னர், ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சுகவீனமடைந்திருந்த நேரத்தில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். அச்சமயத்தில், சகோதரரைச் சந்திக்கும்படியாக அவரது இல்லத்திற்கு உடன் ஊழியர்களுடன் சென்றிருந்தேன் நான். வீட்டில், சகோதரர் படுக்கை அறையில் இருப்பதை அறிந்து உள்ளே நுழைந்தோம்; படுக்கை அறையிலோ, சகோதரர் சென்னை செல்லப் புறப்பட்ட நிலையில், படுக்கையில்; குப்புறப் படுத்த வண்ணமாக, நெஞ்சுப் பகுதியில் தலையணை ஒன்றை வைத்து கைகளால் அதனைப் பிடித்துக்கொண்டிருந்தவாறு படுத்திருந்தார். வழக்கமாக ஜெம்ஸ் வளாகத்தில் சுறுசுறுப்பாகக் காணப்பட்டுக்கொண்டிருந்த சகோதரரை அந்நிலையில் காண்பது எனக்குச் சற்று கடினமாகவே இருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்ததும், அவரைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அமைதியாக நின்றுகொண்டிருந்தோம். அப்போது, சகோதரர் மெல்ல கண் திறந்து எங்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். சகோதரர் மூச்சு விடச் சற்று சிரமப்பட்டுக்கொண்டிருந்தது பேச்சின் போது எங்களுக்குத் தெரிந்தது. அவரிடம் அதிகம் பேச்சுக் கொடுப்பது இந்நிலையில் நல்லதல்ல என்ற எண்ணத்தோடு மௌனமாக நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். சகோதரரின் சுகவீனத்தை அறிந்த ஊழியர்கள், பங்காளர்கள் ஜெபிக்கும் செய்தி அவ்வப்போது எங்கள் காதுகளை வந்து எட்டியவாறு இருந்தது. அப்போது நான் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து, தமிழ்நாட்டின் ஜெம்ஸ் முன்னேற்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஆசீர்வாதம் அவர்களுடன் தொலைபேசியில் பேசிவிட்டு மீண்டும் சகோதரரைக் காண உள்ளே நுழைந்தேன். சகோதரரை சுகவீனமான நிலையில் கண்ட நான், 'அண்ணன், உங்கள் சுகவீனத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டு கூட்டங்களைத் தள்ளிப் போடலாமே' என்று சொன்னேன். அதற்கு சகோதரர், 'சுகவீனம் என்பது உண்மைதான், ஆனால் நான் வருவேன் என்று அநேகர் காத்துக்கொண்டிருப்பார்களே, அவர்களை நான் ஏமாற்றக்கூடாதல்லவா' என்று சொன்னார். சுகவீனத்தின் மத்தியிலும், சுவிசேஷம் அறிவிப்பதே சுவிசேஷகனுக்குச் சுகம் என்ற செய்தி அப்போது படுக்கை அறையில் சகோதரர் எனக்கு மறைமுகமாகச் செய்த பிரசங்கம்.  

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...

இன்றைக்கு என்ன பிரசங்கம்?

    சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 11 இன்றைக்கு என்ன பிரசங்கம்? 29 March 2014   சந்துவா கன்வென்ஷன் கூட்டங்களின்போது, ஒரு நாள் காலையில் குடும்பக் கூடுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  பத்து மணிக்கு நடைபெறவிருக்கும் குடும்பக் கூடுகைக்காக காலை சுமார் 9.45 – க்கு தங்கியிருந்த அறையிலிருந்து வாகனத்தில் புறப்பட்டார்; காலையில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்த நானும், வாகனத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்ல அவருடன் புறப்பட்டேன். வாகனம் கிளம்பியது; சற்று தொலைவு பயணித்ததும் அண்ணன் ஏதாவது குடிக்கிறீங்களா? என்று கேட்டபோது, சூடாக எதுவும் இருந்தால் போதும் என்ற பதில் வந்தது. அந்தப் பதிலைத் தொடர்ந்து, 'அண்ணன் இன்னைக்கு என்ன பிரசங்கம்' என்று கேட்டேன். 'பரிசுத்தத்தைக் குறித்துப் பேசுவேன்' என்று சட்டென பதில் சொன்னார். கூட்டம் நடக்கும் இடத்தினை வாகனம் சென்றடைந்தது. சகோதரர் மேடைக்குச் சென்று அமர்ந்ததும், அங்கிருந்த ஜெம்ஸ் உடன் மிஷனரிகளைச் சந்தித்த நான், 'பரிசுத்தம்' என்ற தலை...

தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்

       சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 9 தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான்   2009-ம் ஆண்டு எனது மூத்த மகன் ஜான் சாமுவேல் மாசில்லாமணி வியாதிக்குட்பட்டான். ஜெம்ஸ் மருத்துவமனையில் படுக்கையில் இருந்த அவனுக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டும் வியாதி குறையவில்லை; கைகளும், கால்களும் வீங்கிக்கொண்டேயிருந்தன; இமைகள் இரண்டும் நீர் கோர்த்து வீங்கி தொங்கிக்கொண்டிருந்தன. செய்வதறியாது திகைத்தவர்களாக ஜெபித்துக்கொண்டிருந்தோம்; எங்களுடன் பலர் ஜெபித்தனர். சிகிச்சைக்காகத் தமிழ்நாடு கொண்டு செல்ல முயற்சித்தோம். அவனது உடல் நிலை மிகவும் மோசமாயிருந்ததினால், விமானத்தில் கொண்டு செல்லத் திட்டமிட்டோம். ஜெம்ஸ் மருத்துவமனையின் பொறுப்பாளராயிருந்த Dr.அசோக் அப்போது தமிழகத்தில் இருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைச் சொன்னோம். அப்போது அவர், டெஹ்ரி-ஆன்-சோன் -ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவர் Dr.கஷ்யப் இடம் கொண்டு சென்று ஒருமுறை காட்டுமாறு ஆலோசனை கூறினார். அவரிடம் சென்றபோது, மருத்துவர் எங்களை பேசவே அனுமத...