முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுகவீனத்திலும் சுகம்

 

சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் 

உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்  

P.J.  கிருபாகரன்


அனுபவம் - 32

சுகவீனத்திலும் சுகம்


 

சில வருடங்களுக்கு முன்னர், ஒருமுறை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் சுகவீனமடைந்திருந்த நேரத்தில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். அச்சமயத்தில், சகோதரரைச் சந்திக்கும்படியாக அவரது இல்லத்திற்கு உடன் ஊழியர்களுடன் சென்றிருந்தேன் நான். வீட்டில், சகோதரர் படுக்கை அறையில் இருப்பதை அறிந்து உள்ளே நுழைந்தோம்; படுக்கை அறையிலோ, சகோதரர் சென்னை செல்லப் புறப்பட்ட நிலையில், படுக்கையில்; குப்புறப் படுத்த வண்ணமாக, நெஞ்சுப் பகுதியில் தலையணை ஒன்றை வைத்து கைகளால் அதனைப் பிடித்துக்கொண்டிருந்தவாறு படுத்திருந்தார். வழக்கமாக ஜெம்ஸ் வளாகத்தில் சுறுசுறுப்பாகக் காணப்பட்டுக்கொண்டிருந்த சகோதரரை அந்நிலையில் காண்பது எனக்குச் சற்று கடினமாகவே இருந்தது. நாங்கள் உள்ளே நுழைந்ததும், அவரைத் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அமைதியாக நின்றுகொண்டிருந்தோம். அப்போது, சகோதரர் மெல்ல கண் திறந்து எங்களைப் பார்த்து பேசத் தொடங்கினார். சகோதரர் மூச்சு விடச் சற்று சிரமப்பட்டுக்கொண்டிருந்தது பேச்சின் போது எங்களுக்குத் தெரிந்தது. அவரிடம் அதிகம் பேச்சுக் கொடுப்பது இந்நிலையில் நல்லதல்ல என்ற எண்ணத்தோடு மௌனமாக நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். சகோதரரின் சுகவீனத்தை அறிந்த ஊழியர்கள், பங்காளர்கள் ஜெபிக்கும் செய்தி அவ்வப்போது எங்கள் காதுகளை வந்து எட்டியவாறு இருந்தது. அப்போது நான் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து, தமிழ்நாட்டின் ஜெம்ஸ் முன்னேற்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஆசீர்வாதம் அவர்களுடன் தொலைபேசியில் பேசிவிட்டு மீண்டும் சகோதரரைக் காண உள்ளே நுழைந்தேன். சகோதரரை சுகவீனமான நிலையில் கண்ட நான், 'அண்ணன், உங்கள் சுகவீனத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டு கூட்டங்களைத் தள்ளிப் போடலாமே' என்று சொன்னேன். அதற்கு சகோதரர், 'சுகவீனம் என்பது உண்மைதான், ஆனால் நான் வருவேன் என்று அநேகர் காத்துக்கொண்டிருப்பார்களே, அவர்களை நான் ஏமாற்றக்கூடாதல்லவா' என்று சொன்னார். சுகவீனத்தின் மத்தியிலும், சுவிசேஷம் அறிவிப்பதே சுவிசேஷகனுக்குச் சுகம் என்ற செய்தி அப்போது படுக்கை அறையில் சகோதரர் எனக்கு மறைமுகமாகச் செய்த பிரசங்கம்.  

www.sinegithan.in

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க

  சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம் P.J.  கிருபாகரன் அனுபவம்  - 2 கிருபா, நீங்க ஏமாந்திட்டீங்க   சந்துவா என்னுமிடத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது;  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார்  செய்தியளித்தார். நானும், ஜெம்ஸ் மீடியா துறையின் குழுவினரும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். உடன் வந்த சகோதரர்கள் சகோதரரின் செய்தியை வீடியோ பதிவு செய்வதிலும், கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மின்வசதி இல்லாத அந்த மைதானத்தில், கூட்டத்திற்கென நாங்கள் கொண்டு சென்றிருந்த ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட பேருந்தில் ஜெனரேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. படை முயற்சிக் கூட்டங்களின்போது, மேடையில் இருக்கும் சகோதரரின் மேல் கண்களை வைத்துக்கொண்டிருப்பதும், அவரது தேவைகளைச் சந்திப்பதிலும் நான் குறியாயிருந்தேன். ஜனங்கள் திரளாக பங்கேற்றனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் வசனத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஆவலுடன் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த, மேடையின் முற்பகுதியில் அமர்ந்திருந்த சிலரை நான் உற்றுக் கவனித்தபோது, பலர் கையில் வேதாகமத்துடன் அழுத...

காலையிலே, காலருகிலே

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 6 காலையிலே, காலருகிலே   2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நான் மற்றும் ஜெம்ஸ் மிஷனரிகள் சகோதரர் ஸ்டீபன் சங்கர், சகோதரர் ஜேசுராஜா மற்றும் ஜெம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் அம்புரோஸ் ஆகியோர் கிராம ஊழியங்களை முடித்துவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஜெம்ஸ் வளாகத்தின் பிரதான வாசல் அருகே வந்தபோது, திரளான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். என்ன என்று அறிய முற்படும் முன் சிலர் 'ஏய், இவங்க ஜெம்ஸ் காரங்கடா' என்று ஹிந்தியில் சத்தம் எழுப்ப. ஏதோ, பிரச்சினை நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக, வாகனங்களை விரைந்து திருப்பி, அருகாமையிலிருந்த கிராமத்தின் வழியாக ஜெம்ஸ் வளாகத்தின் பின்புற வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எனினும், அவ்வழியிலும் நின்றுகொண்டிருந்த எதிர்ப்பாளர்களின் கைகளில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். சரமாரியாக கற்களாலும், கட்டளைகளாலும் அவர்கள் எங்களைத் தாக்கத் தொடங்கினர்; சகோதரர் ஸ்டீபன் சங்கர் அவர்களை தெருத் த...

அந்தகாரத்தின் தந்திரம்

     சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் உயர்ந்த மரம், உதிர்ந்த பழம்     P.J.  கிருபாகரன் அனுபவம்  - 12 அந்தகாரத்தின் தந்திரம் 30 March 2014   பீஹார் மாநிலம், மசௌடி என்னுமிடத்தில் மூன்று நாட்கள் படைமுயற்சிக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் ஏந்தல் குமார் அப்போது அப்பணித்தளத்தில் ஊழியம் செய்து வந்தார்.  சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்   கூட்டங்கள் நடக்கும் நாட்களில், அதற்கு விரோதமாக பல சாமியார்களும், சாதுக்களும் மற்றுமொரு இடத்தில் கூட்டங்களை ஆயத்தம் செய்திருந்தனர். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின்  கூட்டங்களுக்கு எங்கெல்லாம் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அதன் சாதுக்களின் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. தீவிரவாதிகளின்ள தலைமையிடமாகக் காணப்படும் அவ்விடத்தில், கூட்டங்களை நடத்தவேண்டாம் என்று காவல்துறையினர் பலமுறை ஆலோசனை கொடுத்தும், தேவ பாதுகாப்பில் நாங்கள் கூட்டங்களை நடத்துவது என சகோதரர் உறுதியாயிருந்தார். முதல் நாள் கூட்டம் தொடங்கியது; வரலாறு காணாத அளவிற்குத் திரளான ஜனங்கள் கூட்டத்தில்...